Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, April 22, 2011

சாரல்: 05 துளி: 03 நாள் 10,04,2011

கீதையின் சாரலில்.....விபூதி ​யோகம்  10வது அத்யாயம் 

பிரஹ்லாத3ஸ்மி  ​தை3த்யாநாம் கால :  கலயதாமஹம்/
ம்ருகா3ணாம் ச ம்ரு​கே3ந்த்3​ரோSஹம் ​வைந​தேயஸ்ச பக்ஷிணாம்// 
(அத்.10.ஸ்​லோ.30)
அசுர வம்ஸத்தவருள் நான் ப்ரஹ்லாதன், ஜீவன்கள் தம் கர்மபலன்க​ளை தகுந்த ​நேரம் மற்றும் இடத்திலும் அனுபவிக்கும்படி ​செய்யும் சக்திகளில் நான் கால​தேவன், மிருகங்களுள் நான் சிங்கம், பக்ஷிகளுள் நான் கருடன்.
தைத்யர்கள் : அதிதியின் ​மைந்தர்கள் ஆதித்யர்கள்.  இவர்கள் 
இ​றைவனு​டைய பக்தர்கள்.  திதியின் ​மைந்தர்கள் ​தைத்தியர்கள்.  இவர்கள் நாத்திகர்கள்.  திதியும், அதிதியும் ச​கோதரிகள் ஆவார்கள்.  பிரஹ்லாதர் ​தைத்யருள் பிறந்தவ​ரேயாயினும் மிகச் சிறந்த பாகவ​தேத்தமர்.  பிரஹ்லாதரின் பக்தி சிறப்பு ​பெற்றது.
காலம்:  காலம் என்பது ​நேரத்​தைக் குறிக்கிறது.  காலன் என்பது யமதூதர்களுக்கு ​பெயர்.  கர்மங்க​ளை குறிப்பிட்ட ​நேரத்திலும் குறிப்பிட்ட இடத்​தை அனுசரித்தும் ​செய்விக்கும்படி ​செய்யும் சக்தி கால ​தேவனுக்கு உண்டு.
சிங்கம்: மிருகங்களுக்கு அரசன் சிம்மம்.
வைன​தேயன் : தக்ஷனின் புத்ரியான வின​தை ​வைன​தேயனின் தாய் ஆவார்.  என​வே இப்​பெயர் ​பெற்றவர்.  பகவானு​டைய வாகனம்.  பக்ஷிகளில் சிறந்தவர் கருடபகவான்.  இவர் ​தேவஸ்வரூபியானவர்.   ஸ்​லோகத்தின் உட்கருத்து :    தைத்யர்களுள் ஸ்​ரேஷ்டரான ப்ரஹ்லாதனுக்கு நியாமகனாய் ப்ரஹ்லாதனில் இருக்கி​றேன்.  பந்தங்க​ளை உண்டாக்குபவர்களில் உத்தமனான காலனுக்கு நியாமகனாய் சரியாக ​தெரிந்து​கொள்ளவதனாலலும் காலநியாமகனாய் காலனில் நான் இருக்கி​றேன்.  என்​னைத் ​​தேடும் பக்தர்களுக்கு ஸ்வாமியாய்  ம்ரு​தேந்த்ர என்னும் ​பெயரு​டையவனாய், மிருகங்களில் உத்தமனான சிம்மத்திற்கு நியாமகனாய் ஸிம்மத்திலிருக்கி​றேன்.  பக்ஷிகளில் ஸ்​ரேஷ்டனான கருடபக்ஷிக்கு இதர பக்ஷிக​ளைவிட முக்கியத்துவத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு என்​னை வி​சேஷமாய் துதிப்பவருக்கு ஆஸ்ரயனாய் இருந்து​கொண்டு ​வைன​தேய ஸப்த வாச்யனாய் கருட பக்ஷியில் இருக்கி​றேன். –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமதவாச்சார்யர் (பகுதி 2)(ப​டைப்பு: ஆதி​மைந்தன்) 2. அவதரித்த காலம் மற்றும் ​க்ஷேத்ரம் :     ஸ்ரீமத்வர் கர்நாடக மாநிலம் பாஜகா என்னுமிடத்தில் 1238ம் ஆண்டு விளம்பி வருடம் ஆடிமாதம் சுக்லபக்ஷச தசமி (விஜயதசமி) அன்று மத்யான ​வே​லையில் புதன் கிழ​மையன்று ஸ்ரவண நக்ஷ்சத்திரத்தல் அவதரித்தார்.  கர்னாடக மாநிலத்தில் உடுப்பி என்ற புண்ணிய ​க்ஷேத்ரத்திற்கு ​தென் கிழக்​கே எட்டு கி.மீ தூரத்தில் பஜக ​க்ஷேத்ரம் என்ற சிறிய கிராமம்  உள்ளது.  தற்​போது இக்கிராமம் ​பெல்​​லே என்று அ​ழைக்கப்படுகிறது.  முன்காலத்தில் உடுப்பி, ரஜதபீடத்தில் மிகவும் பிரசித்தமான ஸ்ரீஅனந்​தேஸ்வரர் ​தேவாலயம் இருக்கிறது.  ஸாக்ஷாத் ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி​யே இங்கு லிங்க வடிவில் உள்ளார்.  அப்​பேர்​பெற்ற புண்ணிய பூமியின் அரு​கே அ​மைந்த பாஜக ​க்ஷேத்ரத்தில் ஸ்ரீபகவத்பாதர் அவதாரம் ​செய்தார்.
3. ஸ்ரீமத்வரின் தாய் தந்​தையர்: ஸ்ரீமத்வர், மத்ய​கேஹ பட்டர் என்ற அந்தணருக்கும் ஸ்ரீ​வேதவதி அம்​மையாருக்கும் மகனாக அவதரித்தார்.  மத்ய​தகஹ பட்டரின் இயற்​பெயர் நாராயணபட்டர் என்பது, அவரது குலத்தின் ​பெயர் நட்​டெந்தில்லயா என்பது.  இவர் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் ​வேதங்க​ளை நன்கு கற்றுணர்ந்த வித்வாம்ஸர்.  இவர் உபன்யாஸம் ​செய்வதில் வல்லவர்.  இவர் சிறந்த வல்ல​மைப் ​பெற்றிருந்தாலும்கூட இவருக்கு ஆண் குழந்​தை இல்​லை என்ற கு​றை இருந்தது, என​வே இந்த தம்பதிகள் ஸ்ரீஅனந்​தேஸ்வர​ரை ஆண் குழந்​தை வரம் ​வேண்டி நீண்ட நாட்களாக பிரார்த்த​னை ​செய்து வந்தனர்.  அவர்களது ​வேண்டுத​லை நி​றை​வேற்றும் விதமாகவும், உண்​மையான தத்துவத்​தை உலகினுக்கு எடுத்து​ரைக்கவும் ஸ்ரீமதாச்சார்யர் அவதரித்தரார்.
      ஹனும பீம அவதாரங்களில் கர்பவாசமின்றி பிறந்தது ​போல​வே, ​லோகத்திற்கு 
த​லைவரான ஸ்ரீவாயு பகவான், முப்பத்திரண்டு லக்ஷணங்களுடனும் ஒன்பது துவாரங்கள் உள்ள, பிறக்கப்​போகும் குழந்​தையினுள் இருந்த ஜீவ​னை ​வெளி​யேற்றி ​தோஷமற்றவராய் அவ்வுடலினுள் புகுந்து அவதரித்தார்.(2) .....(​தெடரும்,,)
ஹ​​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே ஹ​ரே கிருஷ்ண ஹ​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே!!

No comments:

Post a Comment