Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Sunday, December 19, 2010

சாரல்:4: துளி:40 நாள்: 26.12.10

காடகோபநிஷத்  (படைப்பு : திரு. ஆர். ராமன், சன்னதி தெரு, திருக்கோவிலூர்)
இரண்டாவது அத்யாயம் -இரண்டாம் பகுதி தொடர்ச்சி) :
     பிம்பம் பிரதிபிம்பம் தொடர்பு : ஸ்லோகம் 9 இந்த உலகத்திலுள்ள அக்னி (சேதன அக்னி) ஒன்று. அது அநேக அம்ச வடிவங்களை உடையது. இதற்கு இணையாக அக்னி வடிவங்கள் உடையன. இதைப்போலவே அனைத்திலும் உறையும், பரமாத்மா ஒருவரே. அவர் அநேக பிம்ப வடிவங்களை உடையவர். இதற்கு இணையாக அநேக பிரதிபிம்பங்களும் (ஜீவன்களும்) உள்ளன. இவைகள் பிரதி பிம்பங்கள். பரமாத்மா பிம்பத்திற்கு முற்றிலும் வேறானவர். விளக்கம் பரமாத்மாபிம்பமாக இருப்பதால் அனைத்தையும் கட்டுப்படுத்து கிறார். மற்றவர்கள் அனைவரும், பரமாத்மாவின் பிரதிபிம்பங்களே. ஒரு உவமை மூலம் இந்த ஸ்லோகத்திலும், அடுத்த ஸ்லோகத்திலும் விளக்கப்படு கிறது. பிரதிபிம்பம் பிம்பத்தைவிட வேறானது. அதனுடன ஒன்றுவதில்லை. ஸ்லோகம்10 :  இந்த உலகத்தில் உள்ள வாயு (சேத்தன வாயு) ஒன்று. அது அநேக அம்ச வடிவங்கள் உடையது. இதற்கு இணையாக காற்று வடிவங்கள் உள்ளன. இதைப்போலவே அனைத்திலும் உறையும் பரமாத்மா ஒருவரே. அவர் அநேக பிம்ப வடிவங்களை உடையவர். இதற்கு இணையாக அநேக பிரதிபிம்பங்களும் அதாவது ஜீவன்களும் உள்ளன. இவைகள் அதாவது பிரதிபிம்பங்கள் பரமாத்ம பிம்பத்திற்கு முற்றிலும் வேறானவை. விளக்கம் :மேற்கண்ட இரண்டு உவமானங்களிலிருந்து கீழ்கண்ட விஷயங்கள் தெரிவிக் கப்படுகின்றன. 1. பரமாத்மா ஒருவரே 2. அவர் அநேக பிம்ப வடிவங்கள் உடையவர். 3. ஜீவன்கள் அநேகம். அவைகள் பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள். ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் பிரதிபிம்பம். இந்த உதாரணங்களைக் கீழ்கண்டபடியும் ஆராயலாம். 1. அக்னி மற்றும் வாயு ஒருவரே (சேதன அக்னி அல்லது சேதன வாயு என அறியப்படுபவன். 2. இந்த அக்னியும், வாயுவும் அநேக பொருட்களில் ஒளி மற்றும் வாயு அம்சத்தில் பரவியுள்ளார். இந்த அம்சங்களே பிம்பங்கள். 3. ஒளி மற்றும் வாயுவை உள்ளடக்கிய அநேக பொருட்களிலுள்ள அசேதன அக்னி அல்லது அசேதன வாயு பிரதிபிம்பங்கள். 
மற்றவர்களின் குறைகள் பரமாத்மாவை பாதிப்பதில்லை.
ஸ்லோகம் 11 : எப்படி எல்லோருடைய கண்களாக உள்ள சூரியன், கண்களில் உறைந்து அனைவரின் கண்களையும் கட்டுப்படுத்துபவனாக, புறக்குறைபாடு களினால், புற பார்வைக் கோளாறுகளினால் பாதிக்கப்படுவதில்லையோ, அவ்வாறே யார் எல்லாவற்றிலும், உறைகிறாரோ, யார் எல்லாவற்றையும்விட முற்றிலும் வேறானவரோ, யார் ஸ்வதந்திரரோ அந்த பரமாத்மா உலகியல் துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. விளக்கம் : துன்பங்களின் மொத்த உருவாகிய ஜீவர்களில் உறையும் பரமாத்மா, அந்த துன்பங்களால் பாதிக்கப்படு வதில்லை. ஏனென்றால் அவைகளைக்காட்டிலும் அவர் முற்றிலும் வேறானவர். மற்றும் ஸ்வதந்திரமானவர். சூரியன் என்ற உவமானத்தால் இது விளக்கப்படுகிறது. எல்லோருடைய கண்களையும் சூரியன் உறைந்து கட்டுப்படுத்தினாலும், புறக்கண்களில் ஏற்படும் குறைபாடுகளினால் சூரியன் பாதிப்புக்குள்ளாவதில்லை. 2. இரண்டு கண்கள் இருப்பதை அறிய வேண்டும். ஒன்று புறக்கண்கள் மற்றது அகக்கண்கள். ஸ்லோகம் 12 : எல்லாருள்ளும் உறைபவர் யாரோ, கட்டுப்படுத்துகிறவர் யாரோ, தனித்துள்ளவரும் தனக்கு இணையானவரும் தன்னிலும் மிக்காரும் இல்லாதவரும் யாரோ, அந்த பரமாத்மா அந்த தன் ஒரு வடிவத்தை பலதரப்பட்டதாக ஆக்குகிறார். தன்னுள் உறையும் அவரை பார்க்கும் விவேகி குறைவில்லா பேரின்ப நிலையை அடைகிறான். மற்றவன் இல்லை. விளக்கம்: தன் ஒரு ரூபத்தையே பலதரப்பட்டதாக பரமாத்மா செய்கிறார் என்ற உண்மை இங்கு பேசப்படுகிறது. ஸ்லோகம் 13 : நிலையுள்ளவைகளிடத்து நிலையானவரும், உணர்பவர்களின் உணர்வாகவும், பல ஆசைகளை நிறைவேற்றும் ஒருவராகவும், தன்னுடன் உறையும் பரமாத்மாவை அறியும் விவேகி சாஸ்வதமான அமைதியை அடைவான். மற்றவன் இல்லை. விளக்கம் : பரமாத்மாவின் பிம்ப வடிவத்தின் குணங்கள் எதுவோ, அது பிரதிபிம்பத்தையும்சாரும் என்பது விளக்கப்படுகிறது. ஸ்லோகம்14 : அது, ஏற்கனவே விவரிக்கப்பட்ட பரமாத்மா முழுமையான விவரிக்க இயலாத மேலான பேரின்ப நிலையை உடையது என விவேகிகள் அறிகிறார்கள். நான் அதை எவ்வாறு அறிவேன். (அவன் கருணையின்றி என எமதர்மன் ஆச்சரியத்தில் கூவுகிறான். நசிகேதன் கேட்கிறான்: அது ஒளிர்கிறதா அதை முழுமையாகச் சொல்லும்)  விளக்கம்: ஏற்கனவே விவரிக்கப்பட்ட பரமாத்மா மேலான பேரின்பமயமானவன் இந்த பேரின்ப நிலை முழுமையாக விவரிக்க முடியாதது. முழுமையாக புரிந்துகொள்ளவும் முடியாதது. பரமாத்மாவின் கருணையில்லாமல் எமனாலும் கூட அறிய முடியாதது. இங்கு குறிப்பிட்டிருக்கும் பரமாத்மாவின் மேலான பேரின்ப நிலையை ஒப்பிடும்போது விடுவிக்கப்பட்ட ஜீவனின் பேரின்பநிலை ஒரு இம்மி அளவுடையது. ஆகவே இங்கு விவரிக்கப் பட்டுள்ளது விடுவிக்கப்பட்ட ஜீவனின் பேரின்ப நிலையல்ல.ஆனால் பரமாத்மாவின் மேலான பேரின் நிலையே இங்கு விவரிக்கப் பட்டுள்ளது. இங்கு விவரிக்கப்பட்டுள்ள பேரின்ப நிலை முற்றிலுமாக விவரிக்கப்பட முடியாதது அல்ல. ஆனால் முழுமையாக விவரிக்கப்பட முடியாதவை. முடிந்த அளவு அதனுடைய விளக்கம் பரமாத்மாவின் கருணை யினாலே அறியப்படுகிறது என்பதை இச்ஸ்லோகங்களில் தெளிவாகத் தெரிகிறது. ஸ்லோகம்15 : அதைச் சூரியன் ஒளிறச்செய்வதில்லை. அவ்வாறே சந்திரனும் நட்சத்திரங்களும், மின்னலாலும் முடியாது. பின் அக்னி ஒளியுறச்செய்ய முடியும். எப்படி ? இவைகளெல்லாமே, ப்ரகாசிக்கின்ற அதனுடைய ஒளியைப்பெற்றே பிரகாசிக்கின்றன. அதனுடைய பிரகாசமே இவைகள் எல்லாவற்றையும் பிரகாசமாக்குகிறது. விளக்கம்:  இங்கு பிரகாசமாக இருப்பவைகளால் பரமாத்வை பிரகாசமடையச் செய்யமுடியாது என்பதையும், பரமாத்மாவின் பிரகாசத்தினாலேயே மற்ற எல்லாம் ப்ரகாசிக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. (காடகே உபநிஷத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் 2வது பகுதி நிறைவு) (இதன் தொடர்ச்சியை அடுத்தவாரம் கடைசிவாரத்தில் பார்க்கலாம்) 
  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
  ஹரே க்ருஷ்ண ஹரே  க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

Saturday, December 11, 2010

சாரல் 4 துளி 39 தேதி : 19.12.12

ஸ்ரீகீதா ஜெயந்தி (17.12.2010)   
 ஸ்ரீமத் பகவத் கீதையின் தாத்பர்யம் & பாஷ்யம் 

ஸ்ரீமத் ஹனுமத் பீ4ம மத்4 வாந்தர்க்கத ராமக்ருஷ்ண
வேத3வ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:


யோகீஸ்வரரான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூறிய கீதா உபதேஸத்திற்கு அனேகம் உரைகள் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தையோ கருத்துக்கள் இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கும் பொருள் ஒன்றேயானாலும், அதை படிப்போரும், கேட்போரும் அவரவர்களுடைய யோக்யதாம்ஸத்திற்கு ஏற்றவாறு புரிந்துகொள்ளும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமோ, ரஜோ, மற்றும் சத்வ குணங்களின் தாக்கத்தால் பாதிப்படைவதால் கீதையின் உரையில் வேறுபாடு இருப்பது சகஜமாகிறது.

    அனேக பாஷ்யதாரர்கள் செய்த உரையும், அதைப் பின்பற்றி யதார்த்தவாதிகள் செய்த உரையும் பிரசுரமாகிக்கொண்டிருக்கிறது. பாஷ்யகாரர்களின் பிரிவில் ஸ்ரீசங்கரர், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீமத்வாச்சார்யர் போன்றோர் முக்கிய பாஷ்யகாரர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஹனும, பீம அம்ஸமாகவும் ஸ்ரீவாயுபகவானின் அவதார புருஷராகவும் தோன்றிய ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் அவர்கள், தன் அவதார காலத்தில் முதன்முதலாக கீதைக்கு பாஷ்யம் (உரை) செய்து பத்ரிகாஸ்ரமம் சென்று ஸ்ரீவேதவ்யாஸ பகவானுக்கு சமர்ப்பித்தார். இவர் இயற்றிய கீதா பாஷ்யம் மற்றும் கீதா தாத்பர்யம் உலகில் அதிஉன்னத பாஷ்யமாகக் கருதப்படுகிறது. 

            ஸ்ரீமத்வாச்சார்யர் கீதையை தனி ஒரு புத்தகமாக மட்டும் பார்க்கவில்லை, கீதை, ஸ்ரீமத்மஹாபாரதத்தின் ஒரு பகுதி என்றும், இது வேதம் மற்றும் உபநிடதங்களின் சாரம் என்றும் ப்ரம்மவித்யா மற்றும் யோகஸாஸ்த்ரம் என்றும் கூறுகிறார். ஸ்ரீமதாச்சார்யர் கீதையில் ஒவ்வொரு ஸ்லோகங்களின் வார்த்தைகளுக்கோ அல்லது எல்லா ஸ்லோகங்களுக்கோ உரை எழுதவில்லை. தனக்கு முந்தைய பாஷ்யகாரர்களின் மூலம் சரியானதொரு கருத்து சொல்லப்படாத ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு மட்டும் உரை எழுதியுள்ளார்கள். எங்கெங்கு உரிய சித்தாந்தம் தேவைப்படுகிறதோ அங்கு மட்டும் விளக்கங்களை கொடுத்துள்ளார்கள்.  "கீதாதாத்பர்யம்" முதல் ஸ்லோகத்தை 

ஸமஸ்த குண ஸம்பூர்ணம், ஸர்வதோஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்கிருத்ய, கீதா தாத்பர்ய முச்யதே//
என்பதாக தொடங்கி, தர்மம் மற்றும் அதர்மம் என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்கிறார். குருக்ஷேத்ர போர்களத்தில் அர்சுனன் தன் நெருங்கிய உறவினர்களைக் கொன்று ராஜ்யத்தை ஏற்க விரும்பாதவனாய் பாச உணர்வினால் கட்டுண்டு அமர்ந்துவிட்ட நிலையில், தேரோட்டியாய் நின்ற யோகீஸ்வரர் ஸ்ரீகிருஷ்ணர் இங்கே அர்சுனனுக்கு க்ஷத்ரியதர்மத்தைப் பற்றி விளக்கம் கொடுத்ததைப் பற்றி ஸ்ரீமதாச்சார்யர் தனது தாத்பர்யத்தில் கூறுகிறார். 1.துஷ்டர்களையும்,பாவிகளையும், அயோக்கியர்களையும் அழிப்பது சத்ருக்களுடைய தொழில் தர்மம், அத்துடன் கடவுளை த்வேஷிப்பவனையும், அவனைச்    சார்ந்தவனையும் அழிப்பதும் க்ஷத்ருக்களுடைய கடமையாகிறது 2.  ஒவ்வொருவரும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையைச் செய்ய வேண்டியது தர்மம்.3.ஒருவன் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்காகவே செய்யவேண்டும் என்பது தர்மம். அதில் ஸ்ரத்தையும் பக்தியும் இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லையானால் அது அதர்மம். 4. இறைவனே மிகவும் உயர்ந்த பிரம்மம்,எல்லாமும் அவரையே சார்ந்திருக்கிறது என்று நினைப்பது தர்மம். 5. பக்தியின் மூலமே இறைவனை அறிய முடியும். எனவே, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடித்து வந்த பிறகும், ராஜ்யத்தை திரும்பக்கொடுக்காமல், நிர்கதியாய் நிற்கச் செய்ததால் துரியோதனனை எதிர்த்து போர்புரிந்து ராஜ்யத்தை பெறுவதென்பது க்ஷத்ரியதர்மம் என்பதால் தீயசக்தியான மோஹரூபமும் துர்புத்தியும் கொண்ட துர்யோதனனும் அவனைச் சார்ந்த அனேக நல்லெண்ணம் படைத்தவர்களே (உ.ம்: துரோணாச்சார்யர், பீஷ்மாச்சார்யர், க்ருபாச்சார்யர் etc.,) ஆனாலும் சேர்க்கையால் தீயவராகி தர்மத்திற்கு எதிராக நிற்கும் அனைவரையும், போர்முனையில் நின்று, கொன்று, வெற்றிகண்டு ராஜ்யத்தை மீட்பது க்ஷத்ரிய தர்மம் என்பதால் "என்னையும் த்யானித்துக்கொண்டு போர்  புரிவதையும் செய்வாயாக" என்று ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனுக்கு தேற்றுவாயாக கூறிய சாராம்சங்களின் தத்துவங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தனது "கீதா தாத்பர்ய"த்தில் விவரமாக விளக்கம் கொடுப்பதைக் காணலாம். கீதைக்கு சம்மந்தப்பட்டதான, தமது சித்தாந்தத்திற்கு உகந்ததான அனேக விவரணங்களை இதிகாச-புராணங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் கோட்பாடுகளை சுட்டிக்காட்டி தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீமதாச்சார்யர் தமது கீதா பாஷ்யத்தின் தொடக்க ஸ்லோகத்தை 

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ, தார்த்தம் வக்ஷயாமி லேஸத://
என்பதாக ஸ்ரீமந் நாராயணரை நமஸ்கரித்து துவங்குகிறார். ஸ்ரீமதாச்சார்யர் முதல்முதலில் கீதா பாஷ்யம் என்ற நூலை இயற்றி பத்ரிகாஸ்ரமம் சென்று அங்கிருந்த ஸ்ரீநரநாராயண பகவானை நமஸ்கரித்து தான் இயற்றிய கீதா பாஷ்ய நூலை காணிக்கையாக சமர்ப்பித்தார். பிறகு ஸ்ரீநரநாராயணரை தனிமையில் தரிசித்து, தான் எழுதிய கீதாபாஷ்யத்தின் மங்களா சரண ஸ்லோகத்தைப் படித்துக் காண்பித்தார். அதில் 'சக்திதவஸ்மி' அதாவது "தன் சக்தியளவு கூறுகிறேன்" என்று படித்ததை கவனித்த ஸ்வாமி நாராயணர் ஆசார்யரை நோக்கி, நீ கீதையில் இருக்கின்ற எல்லா ஸ்லோகங்களின் உட்பொருளை நன்கு விளக்கக் கூடிய சக்தி பெற்றவ்ராக இருந்தும் இவ்வளவு மட்டுமே எடுத்துக் கூறியுளீர். எனவே "சக்தித:" என்று கூறியதற்கு பதிலாக "லேசத:" என்று எழுதுவாயாக என்று கூறியதை ஏற்று, அவ்வாறு மாற்றிக்கொண்டார் என்று 'ஸூமத்வவிஜயம்' என்ற மஹாகாவ்ய நூலில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
        தமது "கீதா பாஷ்ய"த்தில் கீதையில் யோகீஸ்வரர் ஸ்ரீகிருஷ்ணர் கூறியதற்கான ஸ்லோகங்களுக்கு அனேக இடங்களில் விளக்கம் கொடுக்கிறார்.  சாங்ய யோகம், கர்மயோகம், ஸ்வதர்மாம், நிஷ்காம கர்மா, காம்யகர்மா, கர்மா, அகர்மா, விகர்மா, ஞானம், அபரோக்ஷஞானம், சாத்வீக, ராஜஸ, தாமஸ முதலான குணங்கள், வர்ணாஸ்ரம விதிமுறைகள், ஸன்யாச யோகம், அதிஷ்டானம், கர்த்தா, காரணா, விவிதசேஷ்ட, தெய்வம், தெய்வ பக்தி போன்ற முக்கியமானதற்கு வேத இதிகாச-புராணங்களில் கூறப்பட்டதற்கான உபமான உபமேயங்களை ஓரிரு சொற்களைக்கொண்டே அனேக பொருள் சொல்லும்படியான விளக்கத்தைச்சொல்லியிருப்பதுமிகவும் வியக்கத்தக்க தாக  இருக்கிறது. கர்மமும்,  ஞானமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்றுக்கொன்று எதிர்மறையானது அல்ல. இவை இரண்டுமே ஆன்மீகம் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கிறது.  கீதை காம்யகர்மத்தை கண்டிக்கிதே ஒழிய, கர்மயோகத்தை அல்ல. கர்மயோகம் ஞானம் வளர்வதற்கு அடிப்படைக் காரணம். கர்மம் ஞானத்தை புனிதமாக்குகிறது. ஞானத்தால் எல்லா சந்தேகங்களும் நீங்குகிறது.  கீதையில் சன்யாசம் என்பதற்கு சன்யாச ஆஸ்ரமம் எடுப்பது என்பதாகக் கூறப்படவில்லை. சன்யாசம் என்பது காம, க்ரோதங்களை விட்டு, பற்றற்ற நிலையில் நிஷ்காம கர்மத்தை செய்வது "சங்கல்ப சன்யாசம்" எனக் கூறப்படுகிறது. கர்மா, அகர்மா, மற்றும் விகர்மா என பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு செயலை செய்வது "கர்மம்" என்றும் செயலற்று இருப்பது "அகர்மம்" என்றும் தவறான செயல்பாடுகள் "விகர்மம்" என்றும் பொருள்படும். பகவானின் அதிஅற்புத சக்தியை உணர்வதே பக்தி. . கர்மயோகத்தால் ஞானமும் பக்தியும் மேன்மையடைகிறது. ஞானம் என்பது' பரோக்ஷ ஞானம்' , 'அபரோக்ஷ ஞானம்' எனப்படுகிறது. அபரோக்ஷ ஞானம் அடைந்தபிறகு பக்தியானது 'பக்வபக்தி' என்றும் அது வளர்ந்து 'பரிபக்வபக்தி' யாகவும் அது மேன்மைபெற்று 'அதிபரிபக்வபக்தி ' யாகவும் விரிவடைகிறது. இவையாவும் சேர்ந்தது 'சாதனா பக்தி' எனப்படுகிறது. முக்திக்குப் பிறகும்  'பக்தி' தொடர்ச்சி பெறுகிறது. பரமாத்மாவிற்கும் ஜீவனுக்குமான  தொடர்பு என்பது பிம்பத்திற்கும் பிரதிபிம்பத்திற்கும் உள்ள தொடர்பை ஒத்துள்ளது. ஜீவன் பக்தியை சாதனமாகக்கொண்டே பரமனை அடைய முடியும். கர்மம், ஞானம். பக்தியை சரியான முறையில் கையால்வதால் பகவானின் உன்னத நிலையை அறிய முடியும். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தனித்தன்மையை பகவானே கூறுவதை கீதையில் கேட்டு அல்லது படித்து அதன் உட்பொருளை ஸ்ரீமதாச்சார்யரின் பாஷ்யத்தைக்கொண்டு புரிந்துகொள்வது சிறப்பானது, விவேகமானது.  எனவே, என்னிடத்திலேயே உன் மனதைச் செலுத்து, என் பக்தனாகவே இரு, என்னைக் குறித்தே எல்லா பூஜைகளையும், யாகங்களையும் செய், என்னை வந்தனம் செய்து நமஸ்காரம் முதலியவைகளைச் செய். இப்படியே உன் மனதை என்னிடத்தில் நிறுத்தி என்னையே நீ அடைய வேண்டிய மேலான பதவியாய் நினைத்து முயன்றால் முடிவில் என்னையே அடைவாய் (IX-34)
           யாரும் எத்தனை ஸாஸ்த்ரத்தைப் படித்தாலும், வேதத்தைக் கற்றாலும் அதன் முடிவில் "எல்லாம் வாசுதேவனே" என்பதை மட்டுமே தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். எனவே, ஸாஸ்த்ரம் ஒன்றே அதுவே தேவகீ புத்ரன் சொன்ன கீதை, ஒன்றே தெய்வம் அவரே தேவகீ புத்ரனாக அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர். பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரை அடைய ஒரே வழி, ஸ்ரவணம்,
         கீர்த்தனம், விஷ்ணோர், ஸ்மரனம் பாதஸேவனம்

        அர்ச்சனம், வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம் (ஸ்ரீமத் பாகவதம்) 
                                                -/ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து/-


Sunday, December 5, 2010

சாரல் 4 துளி 38 :date : 12.12.10

தித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்/       மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ// (அத்.10.ஸ்21)
இந்த ஸ்லோகத்திலிருந்து 38ம் ஸ்லோகம் வரை பகவானுடைய விபூதிகளைப் பற்றி விவரிக்கிறார். 'ஆதித்யர்களில் விஷ்ணுவாக இருக்கிறேன்' என்று கூறுகிறார். அதிதிதேவியின் புத்திரர்கள் 12 பேர்கள். அவர்களில் விஷ்ணு என்னும் பெயருள்ளவராக இருப்பதாக கூறுகிறார். 'விஷ்ணு' என்பதற்கு அழிவில்லாத மஹா சக்தி பெற்றவர் என்று பொருள். எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. எல்லாரிடத்திலும் அந்தர்யாமியாக இருந்து வ்யாபிப்பவர் விஷ்ணு. ஜீவனின் உள்ளேயும், வெளியேயும் நிறைந்திருப்பவர் விஷ்ணு மிகவும் பிரகாசமானவராக இருப்பவர் விஷ்ணு. மிகவும் விஷேச ஸ்ரேஷ்டமான மஹாசக்தி பெற்றவர் விஷ்ணு. ஸமஸ்த்த ஜீவன்களின் வியாபாரங்களுக்கும் காரண கர்த்தாவாக இருப்பவர் விஷ்ணு. யாவற்றின் தோற்றத்திற்கும், தேவதைகளிலும் கூட வ்யாபித்திருப்பவர் விஷ்ணு. விஷ்ணுவே வாமனனாகி, வாமனனே த்ரிவிக்ரமனாகி மூன்று லோகத்திலும் வ்யாபித்தததால் விஷ்ணு என்றும் அழைக்கிறார்கள். அர்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணனே ஸ்ரீவிஷ்ணுவின் அர்தத்தை எடுத்து கூறியிருக்கிறார். இவ்வாறு விஷ்ணு என்பதன் சிறப்பு மோக்ஷ தர்மத்தில் விவரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
"ஜ்யோதி மயமாய் பிராகாசிக்கும் பதார்த்தங்களில் அதி ஸ்ரேஷ்ட கதிர்களையுடைய சூர்யனுக்கு நியாமகனாய், இச்சூரியனுக்கு பிரகாசத்தைக் கொடுத்துக்கொண்டு, வேத ஸப்தங்களால் அறிப்படுபவனாதலால் ரவி ஸப்த வாச்யனாய் சூர்யனிடம் இருப்பவனாக இருக்கிறேன்" என்று கூறுகிறார். அத்துடன் "49 வாயுக்கள் என்னும் மருத்தேவதைகளில் உத்தமனான மரீசிக்கு நியாமகனாய் இதர மருத்துக்களில் மரீசி என்பவனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, மேகங்களை ஸஞ்சரிக்கும்படி செய்து கொண்டிருப்தினால் மரீசி நாமகனாய் மரீசி என்னும் மருத்தினுள் இருக்கிறேன்", என்றும் "நக்ஷ்த்ரங்களில் அதி உன்னதனான சந்திரனுக்கு நியாமகனாய் அந்தந்த பதார்த்தங்களில் சநிதிரனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, அதிஸய சுகமுள்ளவனாய் 'ஸஸ'ீ என்னும் பெயருள்ளவனாய் சந்திரனிடம் இருக்கிறேன்", என்றும் கூறுகிறார்.
இவ்வாறாக எந்தெந்த பதார்த்தங்களில் விஷேச குணம்பெற்று பிரகாசிக்கிறாறோ அந்தந்த பதார்த்தங்களில் ஆதிக்கத்தைச் செலுத்தி நியா மகனாய் இருந்து ப்ரகாசிப்பதை எடுத்துரைக்கிறார். இனி வரும் ஸ்லோகங்களில் பகவானின் தனித்தன்மைப் பெற்ற ஸ்ரேஷ்டமான பதார்த்தங்களின் முக்கியத்துவத்தைக் காணலாம்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பன்னிரண்டு ஆதித்யர்களுள் நான் விஷ்ணு; பிரகாசிக்கும் பொருள்களில் நான் சூர்யன்; நாற்பத்தொன்பது மருத்துக்களில் நான் மரீசி ; நக்ஷ்சத்ரங்களுள் சந்திரன் நான்". -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-

Saturday, November 27, 2010

சாரல் 4 துளி 37 date : 05.12.10

அஹமாத்மா   கு3டா3கேஸ   ஸர்வபூ4தாஸயஸ்தி2த: /   
அஹமாதி3ஸ்ச   மத்4யம்      பூ4தாநாமந்த ஏவ ச // 
(அத் 10. ஸ் 20)
ஸ்ரீமதாசார்யர் அவர்கள் ஸ்ரீக்ருஷ்ணாம்ருத மஹார்ணவ: என்னும் தொகுப்பில் கூறுகிறார் : 
      யஸ்யாந்த:ஸர்வமேவேதம் அச்யதஸ்யாவ்யயாத்மன/
               தமாராதய கோவிந்தம் ஸ்தானமக்ரயம் யதிச்சஹ/          
 ஸ்ரீகிருஷ்ணரே ஆரம்பமும் முடிவுமில்லாதவர், பிறப்பு, இறப்பு, மூப்பு இல்லாதவர். "அச்சுதனிடமிருந்து இநத உலகம் உண்டாயிற்று என்றும் "எல்லாம் வாசுதேவன்" வஸமே என்றும் கூறி, ஹே! த்ருவனே! வைகுண்டத்தை அடைய விரும்பினால் அந்த கோவிந்தனை நாடு, முறைப்படி அவனைத் துதிப்பாயாக", என்று உபதேஸிக்கிறார். பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் 7ம் அத்யாயம் 10ம் ஸ்லோகத்தில் "பீஜம்மாம் ஸர்வபூதாநாம்" என்பதாக தெரிவிக்கிறார். எல்லா பிராணிகளும் தோன்றுவதற்கு வித்தாக இருப்பதாகக் கூறுகிறார்.   ஆத்மாவைப் பற்றி அறிய பல தத்துவஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டவண்ணம் இருக்கிறார்கள். ஆன்மீக ஞானத்தால் மட்டுமே ஆத்மாவையும், பரமாத்மாவையும் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவராசியினூடே ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மாவில் பகவான் அந்தர்யாமியாகக் குடிகொண்டு நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறார். நம் ஹிருதயத்தில் குடிகொண்டு நம்மை இயங்கச் செய்யும் ஆத்மாவே பரமாத்மா. அதுவே பரபிரம்மம். அந்த பரபிரம்மத்தை அறிவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் பிரம்ம ஞானம் அறிவதென்பது மிகவும் அரிதான சாதனை. பகவான் 7ம் அத்யாயம் 3ம் ஸ்லோகத்தில் 'மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஸு' - "ஆயிரம் மனிதர்களில் ஒருவன் என்னை ப்ரார்த்திக்கிறான். அவர்களில் யாரோ ஒருவனே ஞானம் பெறுகிறான். ஞானம் பெற்றவரில் எவனோ ஒருவனே என்னை தத்ரீதியாக அறிகிறான்", என்பதாகக் கூறுவதைபார்த்தோம்.  இச்ஸ்லோகத்தில் அர்சுனனை "குடாகேச" என்று விளிக்கிறார். அர்சுனன் உறக்கத்தை வென்றவன். அறியாமை என்னும் இருளில் உறங்கிக்கொண்டிறாமல் ஆன்மீக ஞானம் பெற்று பகவானை புரிந்துகொள்ள வேட்கை கொண்டதால் அர்சுனனை 'குடாகேச' என்று பகவான் அழைப்பதுபொருத்தமானதே. "ஸ்ரீஈசோபநிஷத்" கூறுகிறது 'ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம், யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' "இப்பிரபஞ்சத்தில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சகல ஜட ஜீவப் பொருள்களும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டிலும் இயக்கத்திலுமிருக்கிறது". என்பதாக உபநிஷத் கூறுகிறது. இங்கே இச்ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும்போது, எல்லா ஜீவராசிகளின் இருதயங்களில் இருக்கும் ஆத்மாவும், எல்லா உயிர்களின் தொடக்கமும், நடுவும், இறுதியும் பகவானாகவே இருக்கிறார் என்பதை தொளிவாகக்கூறுகிறார்.  ஒரு விஞ்ஞானி ஒரு ரோபோ வை உருவாக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தானே அதை இயக்கவைத்து, இறுதியில் அதை அழிக்கவும் செய்கிறானோ, அதுபோலவே பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரும் உயிர்ப்பொருட்களை படைத்து அதனுள்ளே அந்தர்யாமியாக இருந்துகொண்டு, இயங்கச் செய்து, அவைகள் செய்யும் கர்மவினைகளுக்கேற்றவாறு பலன்களைக்                                       கொடுத்து, அவற்றை இறுதியில் அழியச்செய்கிறார் என்பதே உண்மையாகிறது.

ஸ்லோகத்தின் உட்கருத்து : "தூக்கத்தை ஜெயித்தவனே அர்சுனா நானே ஸகல ப்ராணிகளின் ஹிருதய குகையில் ஆத்மாவாய் இருப்பவன். ஸகல ப்ராணிகளின் ஸ்ருஷ்டி கர்த்தா நானே. மற்றும் ஸகல ப்ராணிகளையும் ரக்ஷிப்பவனும் நானே.                                             ஸகல ப்ராணிகளையும் நாஸம் செய்பவனும் நானே" -பகவான்ஸ்ரீகிருஷ்ணர்-  

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 
                                                                                   

Saturday, November 20, 2010

சாரல்:4: துளி:36 நாள்: 28.11.10

   காடகோபநிஷத் (படைப்பு : திரு. ஆர். ராமன், சன்னதி தெரு, திருக்கோவிலூர்)

ஸ்லோகம் 15 : தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதைப்போன்றதாக ஆகிறதோ, ஓ நசிகேதா, அவ்வாறு முனிவர்களுள் முதல்வராக இருக்கிற (வாயு) யாரை அறிகிறாரோ அவரைப்போன்றே பரமாத்மா ஆகிறார். விளக்கம் : விடுவிக்கப்பட்ட ஜீவன்கள் பரமாத்வை போன்று ஆகிறார்களே தவிர பரமாத்மாவை ஒத்தவராக ஆவதில்லை. பரமாத்மாவை அறிந்தவர்களுள், முதன்மையானவர்களும், பரமாத்மாவை அறிந்த மற்றவர்களின் தலைவர்களாகவும் உள்ள சதுர்முக பிரம்மனும், வாயுவும், விடுதலைக்குப்பிறகு, பரமாத்வை போன்ற தன்மை உள்ளவர்களாக ஆவார்களே தவிர பரமாத்மாவுடன் ஒன்றாகமாட்டார்கள். ஆகையால் மற்ற ஜீவர்கள் பரமாத்மாவுடன் ஐக்கியனாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. (இரண்டாவது அத்யாயம் முதற்பகுதி முற்றிற்று) இரண்டாவது அத்யாயம் -இரண்டாம் பகுதி :
ஸ்லோகம் 1 : பதினொரு வாயிற்களையுடைய இந்த உடம்பை பிறவாதவனும், சர்வஞ்னனுமான பகவான் கட்டுப்படுத்துகிறார் என்பதை உறுதியாக அறிபவன் துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறான். ஏற்கனவே விடுவிக்கப்பட்டவனான (தேக அபிமானத்திருந்து) அவன் இறுதி லட்சியத்தை அடைகிறான். இது அதுவே. விளக்கம் : உடம்பு முதலியன பரமாத்மாவின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அதை தனது என்று ஒருவன் அபிமானிக்காமல் இருக்க வேண்டும் என்பது இந்த ஸ்லோகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (11 வாயில்கள் என்பது கண் 2 ;காது 2 ; நாசித்துவாரங்கள் 2 ;முகம், நாபி, ஆசனம், குறி, தலை ஆக 11 என்பதாக ஸ்ரீவேதேச தீர்தத ஸ்வாமிகள் கூறுகிறார்) கடவுள் இயல்பை பற்றிய விவரணம் : ஸ்லோகம் 2 : அவர் குற்றங்கள் அற்றவர், அனைத்தின் சாரம், வாயுவில் உறைபவர், பேரின்பமயமானவர், ஆகாயத்தில் உறைபவர், புலங்களில் உறைபவர், புனித வேதத்தில் உறைபவர், சம்ருத்தியான உணவில் உறைபவர், பாக குடத்தில் உறைபவர், பிரம்மா முதலிய தேவதைகளில் உறைபவர், புனித பலிகளில் உறைபவர், ப்ரக்ருதியில் உறைபவர், நீரினங்களில், பூமியில், விடுதலையடைந்த விவேதிகளிடம் உறைபவர், மலைகளில் தோன்றுபவைகளிடையே உறைபவர், வேதங்களால் அறியப்படுபவர், எண்ணற்ற குணங்களைக் கொண்டிருப்பவர். விளக்கம் : பரமாத்மாவின் குணாதியங்களின் மஹிமைகள் இங்கு விளக்கப்படுகிறது. ஸ்லோகம் : 3 அவர் ப்ராணனை மேலே இயக்குகிறார். அபானனை கீழே தள்ளுகிறார். மத்தியிலிருந்து கொண்டு வாமனனாகப் பெயர் பெறும் அவரை எல்லா தேவதைகளும் பூஜிக்கின்றன. விளக்கம் : பிராணனைக் கட்டுப்படுத்தும் பரமாத்மாவைப் பற்றி விளக்கப்படுகிறது. இங்கு விவரிக்கப்பட்டிருக்கும் பரமாத்மா முன்னால் கூறப்பட்ட கட்டை விரல் அளவுள்ளவனாக வர்ணிக்கப்பட்டவரே ஆவார். ஸ்லோகம் : 4 நசிகேதன் கேட்கிறான் : பெளதீக உடல் மற்றும் நுட்ப உடலிலிருந்து ஜீவன் வெளியேறிவிட்டால் இங்கே என்ன மிஞ்சும்? இது அதுவே. விளக்கம் : முதலாவது அத்தியாயம் ஸ்லோகம் 19ல் கேட்கப்பட்ட கேள்வி இங்கே குறிப்பாக மறுபடியும் கேட்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றால் இது தொடர்பான முழு விவரைத்தையும் தெரிவிக்கவே. ஸ்லோகம் 5 : எந்த மனிதனும் ப்ராணனாலோ,அபானனாலோ வாழ்வதில்லை. முக்யப்பிராணரின் இருவடிவங்கள் இவைகளுக்கு முற்றிலும் வேறான எதை ஆதாரமாகக்கொண்டு, ப்ராணனும், அபானனும் மற்றும் அனைத்தும் இயங்குகின்றனவோ, அதை ஆதாரமாகக்கொண்டே மனிதன் வாழ்கிறான். விளக்கம் : முக்யப்ராணர் சாதாரணமாக ஜீவர்களை கட்டுப்படுத்துகிறார். ஆனால் அவர் அதை சுதந்தரமாகச் செய்யவில்லை. பரமாத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ் அவர் ஜீவர்களைக் கட்டுப்படுத்துகிறார். பரமாத்மாவின் இந்த மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. ஸ்லோகம் 6 : ஓ நசிகேதனே ரகசியமானதும், அழிவற்றதுமான ப்ரம்மத்தைப் பற்றியும், மரணம் மற்றும் விடுதலைக்குப் பிறகு அது எவ்வாறு ஜீவர்களை கட்டுப்படுத்துகிறது என்பது பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன். விளக்கம் : இது குறித்த உபதேசம் ஏற்கனவே யமனால் ஆரம்பிக்கப்பட்டு நன்கு முன்னேற்றம் அடைந்து வரும் சமயம், மேற்கண்ட வாக்குமூலமானது இச்ஸ்லோகங்களுக்கு முன்னே சொல்லப்பட்டதாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்லோகம் 7: சிலர் மேலும் மனிதப்பிறவி எடுக்கவேண்டி, மனிதர்களாக மறுபிறவி எடுக்கின்றனர். மற்றவர்கள் அவரவர்களுடைய வினைப்பயனையும், பெற்ற அறிவையும் பொறுத்தே ஸ்தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். விளக்கம் : வினைப்பயனுக்கேற்றவாறு மறுபிறவி அமையும் என்பது வலியயுறுத்தப்படுகிறது. ஸ்லோகம் 8 : புருஷன் தனக்கு விருப்பமான கனவுப்பொருள்களை உருவாக்குகிறான். தவறில்லாதவனாக அறிவிக்கப்படும் அவன் எண்ணற்ற குணங்கள் கொண்டவனாகவும், சாசுவதமாக இருக்கிறான். யாரும் அவனை கடக்க முடியாது. விளக்கம் : கனவில் செய்யப்படும் கர்மாவும், பரமாத்மாவினுடையதுதான் எனவும், அவர் விருப்பப்படிதான் கனவுகூடக் காணமுடியும் எனவும் இங்கு விளக்கப்படுகிறது. (இதன் தொடரை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காணலாம் தொடரும் ....19) 


           ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //



Wednesday, November 10, 2010

சாரல் 4 துளி 35 தேதி 21.11.10

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்ம விபூதய:/ 
ப்ராதாந்யத குருஸ்ரேஷ்ட நாஸ்யந்தோ விஸ்தரஸ்யமே
 (அத்,10-ஸ்19) 

    கீதையின் சாரலில்...விபூதி யோகம்..
                             10வது அத்யாயம்
 ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா 9ம் அத்யாயம் 4ம் ஸ்லோகத்தில் கூறுகிறார் : "இந்த உலகம் அனைத்தும் கண்கலால் காணமுடியாத உருவமுள்ள என்னால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஜீவன்களும் ஜடப்பொருள்களும் என்னிடம் இருக்கிறது. ஆனால் அவைகளில் நான் இல்லை". உலகம் அனைத்திலிருப்பதும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிரதிபிம்மங்களே என்பதாக அறியமுடிகிறது. சென்ற ஸ்லோகத்தில் அர்சுனன், பகவானுடைய தத்ரூபங்களை விஸ்தாரமாகச் சொல்லவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறார். பகவானுடைய தத்ரூபங்கள் அவருடைய வைபவங்கள் அளவிடமுடியாதவை. ஒவ்வொரு இனத்தையும் வரைமுறைப்படுத்தி அவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒருவரை அரசனாக்கி அவர்களை அதிகாரிகளாகக்கொண்டு அகில உலக விவஹாரங்களும் செம்மையாக நடைபெற பகவான் அனுகிரஹிக்கிறார். அதாவது, உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் கால்நடை பிராணியில் ஸ்ரேஷ்டமானது வ்ருஷம், குதிரையில் சிறந்தது உச்சைச்ரவஸ், விலங்குகளில் சிறந்தது சிங்கம், இவ்வாறாக அந்தந்தப் பதார்த்தங்களில் சிறந்தவையாக திகழ்வனவற்றை மட்டும் கூறினாலே கணக்கிலடங்காது என்பதால் இந்த அத்யாயத்தில் பகவானுடைய முக்கிய தோற்றங்களை மட்டுமே விளக்கப்போவதாகக் கூறுகிறார். பகவானின் சக்திகளை விஸ்தாரமாகச் சொல்லுவதற்கு எல்லையே இல்லை. பஹூநாம் ஜன்மநாமந்தே என்பதாக பற்பல பிறவிகளுக்குப் பிறகே ஒருவன் வாஸூதேவ: ஸர்வமிதி (7-19) என்பதாக அறியமுடியும் என்பதாகக் கூறியிருக்கிறார் என்பதைப் பார்த்தோம். ஒருவன் ப்ரம்மத்தை அறிய முற்படுவதைவிடவும், அல்லது மோக்ஷத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைவிடவும் சிறந்தது பகவானின் அதிஅற்புதமான லீலைகளை தெரிந்துகொள்வது. இதுவே பேரானந்தத்தைக் கொடுக்கக்கூடியது. எனவேதான் ஸ்ரீஸூகாச்சார்யர் அவர்கள் பரிக்ஷித் மஹாராஜனுக்கு ஸ்ரீமத் பாகவதக் கதையை உபாக்யாணம் செய்துகொண்டிருந்த சமயத்தில், தேவர்கள் தோன்றி "நாங்கள் அம்ருதத்தை கொடுக்கிறோம், நீங்கள் பாகவதக் கதையை எங்களுக்கு கொடுங்கள் என்று வேண்டினார்கள்". ஆனால் அம்மன்னனோ, அம்ருதத்தை நிராகரித்து முக்திக்குக் காரணமாக விளங்கும் பாகவதக் கதையை ஸ்ரத்தையாகக் கேட்க விரும்பினார். ஸ்ரீமத் பாகவதத்தில் பகவானின் அவதார லீலைகள், சக்திகள், ப்ரபாவங்கள் யாவும் உன்னதமாக விளக்கப்பட்டுள்ளது. பகவானுடைய சக்திகளை விசேஷமாகப் பிரகாசிக்கச் செய்துகொண்டிருக்கும் தத்ரூபங்களை மட்டில் எடுத்துக் கூறப்போவதாக பகவான் இச்ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். பகவான்,அர்சுனனின் வேண்டுதலால் (முந்தைய ஸ்லோகங்கள்) மிகவும் சந்தோஷமடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். 
ஸ்லோகத்தின் உட்கருத்து : குருவம்சத்தில் சிறந்தவனே அர்சுனா நீ இவ்வாறு கேட்டதைப்பற்றி நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். என்னுடைய விபூதியின் தத்ரூபங்கிளின் விஸ்தாரத்திற்கு எல்லையே இல்லை என்பது பிரஸித்தம். என் தெய்வத் தன்மையுள்ள விபூதிகளில் நன்றாக ப்ராசிக்கச் செய்துகொண்டிருக்கும் ரூபங்களை மட்டும் உனக்குச் சொல்கிறேன்.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                                                                                          இங்கே ஒரு துளி : பகவான்ஸ்ரீகிருஷ்ணர்-  :கர்மங்கள் அனைத்தையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய். பக்தியுடன் என்னையே நித்யமும் த்யானம் செய் (அத்12.ஸ்6). என்னிடம் ப்ரேம பக்தி செய்பவனை மரணமெனும் சம்சாரக் கடலிலிருந்து மீட்பேன் (ஸ்7)  புத்தியையும் மனதையும் என்னிடம் வைத்தால் ஐயமின்றி என்னிடம் வாழ்வாய் (அத.12 ஸ்.8) மனதை நிலைநிறுத்த முடியாதுபோனால், அப்யாச யோகத்தினால் என்னை அடைய   முயற்சிசெய்(அத்.12.ஸ்9)  

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
                  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //




Friday, November 5, 2010

சாரல் 4 துளி 34 தேதி 14.11.10

கீதையின் சாரலில்----- விபூதி யோகம்----
                                 10வது அத்யாயம்
விஸ்தரேணாத்மநோ யோக3ம் விபூதிம் ச ஜநார்தந/
பூய: கதய: த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மேs ம்ருதம்// (அத் 10 ஸ்லோ.18)

முந்தைய அத்யாயங்களில் சொன்னதைவிட இன்னும் விஸ்தாரமாக கூறு ஜநார்தனா ! என்று விளம்புகிறார் அர்சுனன். அம்ருதம் போன்ற உன் வார்த்தைகளில் கூறவேண்டுமாய் பிரார்த்திக்கிறார். ஜநார்தனா என்றால் துஷ்ட ஜனங்களை அழிப்பவர், ஸம்ஸாரத்தை அழிப்பவர், பிறப்பில்லாதவர், பக்த ஜனங்களால் ப்ரார்த்திக்கப்படுபவர். மோக்ஷத்தைக் கொடுப்பவர் என்று பொருள். பகவான் இவ்வுலகில் பல்வேறாக வ்யாபித்திருக்கும் சக்தியே இங்கு யோகம் எனப்படுகிறது. அந்த மஹாசக்தி யின் விரிவாக்கமே விபூதி என்பதாகும். மஹா சக்தி மற்றும் விபூதியின் தத்துவ அறிவு பக்தியை உண்டாக்கும்.இந்த ரகஸியத்தை தெரிந்துகொண்டு அர்சுனன் மேலும் விளக்கமாகச் சொல்லுங்கள் என்று வேண்டுகிறார். பகவானைப் பற்றிய அறிவு, லீலைகள், ப்ரபாவங்கள், விபூதிகள் யாவும் திரும்பத்திரும்ப கேட்டாலும் புதியதான விஷயத்தைக் கேட்பதுபோலவே இருக்கும். அவைகள் தெகட்டவே தெகட்டாது. அம்ருதத்தை உண்டாலும் தெகட்டிவிடும், ஆனால் பகவானை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒருவன் மனதில் உதித்து விட்டால் அவைகள் ஆனந்தத்தையே கொடுக்கும். போதும் என்ற உணர்வே இருக்காது. பகவானே வழிகாட்டியாக நிற்கிறார். இவற்றில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அர்சுனன் பகவானின் வார்த்தைகளால் பகவானைப் பற்றியதான விபூதிகளை விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறார். பகவானின் வார்த்தைகள் அம்ருதமாய் இனிக்கிறது. இதைக் கேட்பதற்கு பக்தியும் ஆர்வமுமே முக்கியமாகிறது. லெளகீக விஷயங்களும், பொளதீகப் பொருட்களும் என்றும் அழியக்கூடியது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியதான அறிவு மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடியது. இதை ஸ்ரீவ்யாஸபகவான் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பதைக் காணலாம். ஸ்ரீமத் பாகவதம் 03-25-36 ல் ஸ்ரீகபிலதேவர் தமது தாய் தேவஹூகதிக்கு உபதேசிக்கிறார் , "எனது உண்மையான பக்தர்கள் எனது பல்வேறு வடிவங்கள். அவர்கள் எனது எழில்மிகு முகத்தையும், உடலையும் காண்பதில் ஆனந்தம் அடைகின்றனர். என் லீலைகள், பார்வை, புன்சிரிப்பு, யாவும் அவர்களுக்கு ஆன்மீக உணர்வை கொடுக்கிறது. அதனால் அவர்களின் மனங்கள் என் சிந்தனையில் ஆழ்கிறது. அவர்களின் வாழ்வை எனக்கு அர்ப்பணிக்கிறார்கள். இவர்கள் முக்தியை அல்லது வேறு இன்ப சுகங்களை வேண்டுவதில்லை. இருந்தபோதிலும், அவர்களுக்கு என் லோகமான ஸ்ரீவைகுண்டத்தில் இடமளிக்கிறேன்" என்று கூறுகிறார். ஸ்லோகத்தின் உட்கருத்து : ஹே ஜனார்த்தன ! உன்னுடைய வல்லமை, சக்தி யாவும் உன்னுடைய ஸன்னிதானத்தினால் அந்தந்த பதார்த்தங்களுக்கு ஸ்ரேட்டமான தத்துவத்தைக் கூறிக்கொண்டே அவைகளிலிருக்கும் தத்ரூபங்களை விஸ்தாரமாகச் சொல்லும். உன்னுடைய வாக்யம்ருதத்தை கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு திருப்த்தியில்லை-அர்சுன உவாச-
இங்கே ஒரு துளி : பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஹே அர்சுனா! உன் சிந்தனையை என்னிடத்திலேயே வை. என்னைக் குறித்தே பக்தியைச் செய். நீ செய்யும் யாக-யக்ஞங்களை எனக்கு ஸமர்ப்பணம் செய். நீ செய்யும் நமஸ்காரங்களை எனக்கு மட்டுமே செய். இப்படியாக எனக்காகவே உன் கைங்கரியங்களை செய்துகொண்டிருந்தால் என்னையே அடைவாய். இது ஸத்யம்(18-65). யாருடைய உள்ளம் எப்போதும் கீதையில் ஆனந்தம்பெறுகிறதோ, அவனே அக்னி தேவதையை பூஜித்தவனாகிறான். அவனே இடைவிடாது ஜபம் செய்தவனாகிறான். அவனே செய்யவேண்டிய எல்லா கர்மங்களையும் பூர்ணமாகச் செய்தவனாகிறான் மேலும் எல்லாம் உணரப்பெற்ற பண்டிதனாகிறான்-ஸ்ரீகிதாமஹாத்ம்யம்-
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
                  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //

Saturday, October 30, 2010

SARAL:4 THULI:33 DATE:07.11.10

¸ûR«u NôW­p.. ®é§ úVôLm 10YÕ AjVôVm
LR2m ®j3VôUam úVô¡3mvjYôm ^R3ô T¬£kRVk /
úL`ý úL`ý N T4ôúY`ý £kjúVô s ³ T4L3YkUVô// (Aj 10,vúXô17)
CfvúXôLj§tÏ NmUkRTThPRô] ®`VeLû[ AoÑ]àdLôL 9m AjVôVj§p ÑÚdLUôLf ùNôp­VûRl TôolúTôm, EjRUUô] ËY vYì©Ls Guàm UaôjUôdLs Guû] GpXô ©Wô¦LÞdÏm LôWQUô]Yu G]ßm. SôNUt\Yu Gußm ùR¬kÕùLôiÓ Gu²Pj§úXúV U]ÕûPVYoL[ôn Guû]úV úN®d¡\ôoLs(9-13), GlùTôÝÕm Gu SôUjûR Õ§jÕ. §PUô] ®WReL°p ØVtNÙûPVYoL[ôn Td§ÙPu Gu²Pm U]ûRûYjÕ é´jÕ. SUvL¬jÕ Guû] ú^®d¡\ôoLs(9-14), £X UaôuLs GR§ûN«Ûm ØLØûPV Guû] Oô] ìTUô] VgOjRôp é´jÕdùLôiÓm. GpXô ©Wô¦L°p CÚdÏm Guû] úTRUt\Yu Gußm. ËY_P lWTgNjûR®P úY\ô]Yu Gußm. ®vYìTØûPVYu Gußm ú^®d¡\ôoLs(9-15), CqYôß c¡ÚxQo Ruû] TdRoLs Gq®RUôL úN®d¡\ôoLs Gu\ ¨ûXûV GÓjÕd á±]ôo, CûR ùR¬kÕùLôiP AoÑ]u úUÛm TLYôû] GqYôß A±V úYiÓm GuTRôLd úLh¡\ôo, TLYôû] úVô¸vYWu Guß AûZd¡\ôo, úVô¸vYWWo Gu\ôp A]kR]kR Nd§Lû[ÙûPV c¡ÚxQô Guß ùTôÚs, EjRUUô] vYì©úV úVô¸vYWô úa ¡ÚxQô ¿úV GpXô ©Wô¦LÞdÏm LôWQUô]Yu Gu¡\ôn. ®vYìTØûPVYu Gu¡\ôn. úTRØs[Yu Gußm lWTgNjûR®P úY\ô]Yu Gußm áß¡\ôn. AlT¥Vô]ôp Sôu GqYôß Euû] A±Rp úYiÓm, GkùRkR TRôojReL°p Gu]ôp jVô]m ùNnVlTÓT]ôn CÚd¡\ôn? VôYtû\Ùm R²jR²VôLl ©¬jÕ G]dÏl ׬ÙmT¥ ®vRôWUôLd á\ úYiÓUôn lWôoj§d¡ú\u Guß AoÑ]u TLYôû] úSôd¡ YQe¡ úLhÓdùLôs¡\ôo, c¡ÚxQúW TWmùTôÚs Gußm ØRtLPÜs Gußm AoÑ]u A±kÕùLôiPôo, SmúTôu\ NôRôWQ UdLs TLYôû] GqYôß A±V úYiÓm GuTûR ùR¬®dLúY CqYôß ®]Ü¡\ôo, úVôL UôûV«p Uû\k§ÚdÏm U²RoLû[ UôûV«­ÚkÕ ùY°dùLôQokÕ TWmùTôÚû[ EQWûYdÏm Nd§ úVô¸vYWWô] c¡ÚxQÚdÏ UhÓúU Es[Õ, c¡ÚxQûW NWQûPkRôp UhÓúU AkR Tôd¡Vm SUdÏ ¡ûPdÏm, CkR AjVôVj§p TLYôu c¡ÚxQo GlùTôÚ°p GqYôß CÚd¡\ôo Guß ®vRôWUôLd á\lúTôYûR ©uYÚm vúXôLeL°u êXm Sôm ùR¬kÕùLôs[lúTô¡ú\ôm, vúXôLj§u EhLÚjÕ: úVô¸vYWô Euû]úV GlùTôÝÕm BrkÕ £k§jÕ Euû] EiûUVôn A±V Gu]Y¯? úUÛm GkùRkR vYìTeL[ôn Euû] Sôu jVô²dL úYiÓm?     -AoÑ] EYôN-                 CeúL JÚ Õ° :TLYôu c¡ÚxQo- AoÑ]ô v§ÃLs. ûYvVoLs. ^ýjRoLs Utßm TôTjÕdÏ LôWQUôL Es[ _ô§«p ©\kRYoLs VôYÚm Guû] NWQûPkÕ EjRUUô] L§ûV AûP¡\ôoLs, CÕ ¨fNVm(A9-v32), TdRoL[ô¡V AkRQoLs. Wô_¬µLs. ×i¦V ×Ú`oLs Guû]úV AûPYôoLs Guß ùNôpXÜm úYiÓúUô. BûLVôp A¨jVUôÙm ÑLUt\RôÙªÚdÏm CqÜXLj§p ©\kÕ UàxV úRLjûR AûPkR ©\Ï Guû] ETô£lTúR ¿ ùNnV úYi¥VÕ(A9-v33), BûLVôp Gu²Pj§úXúV Eu U]ûRf ùNÛjÕ ; Gu TdR]ôLúY CÚ, Guû]d ϱjúR GpXô éû_Lû[Ùm VôLeLû[Ùm ùNn, Guû] YkR]m ùNnÕ SUvLôWm ØR­VûYLû[ ùNn, ClT¥úV Eu U]ûR Gu²Pj§p ¨ßj§ Guû]úV ¿ AûPV úYi¥V úUXô] T§®VôL ¨û]jÕ ØVu\ôp Ø¥®p Guû]úV AûPYôn(A9-v34),
úR3Ym SôWôVQm SjYô. ^oYúR3ô` ®Yo´Rm/ T¬éoQm Ï3ìmvNôu ¸3, RôojR3m YzVôª úX^R// vUvR ÏQ ^méoQm ^oYúRô` ®Yo´Rm/ SôWôVQm SUvdÚjV ¸Rô RôjToV ØfVúR//
YôÑúRY ÑRm úRYm LmN NôòW UojR]m/ úRY¸ TWUô]kRm ¡ÚxQm YkúR _LjÏÚm//

Monday, October 25, 2010

SARAL : 4 THULI 32 : DATE : 31.10.10

LôPúLôT¨`j (TûPl×: §Ú, Bo WôUu, Nu]§ ùRÚ, §ÚdúLô®ío)

CWiPôYÕ AjVôVm ØRp Tϧ : (ùRôPof£)

vúXôLm 7: Ød¡V ©WôQÚPu Vôo Y£d¡\ôúWô. GpXôYtû\Ùm Nma¬lTYWô] A§§ Gu\ ùTV¬p Vôo ®[eÏTYúWô úRYoLÞs Vôo úUXô]YúWô AYo TX AYRôWeL°p TûPdLlThP E«¬]eLÞPu Ru ìTjûR ùY°lTÓjÕ¡\ôo, CÕ AÕúY(TWUôjUô) ®[dLm: HtL]úY ®Y¬jRT¥ EP­às Ød¡V lWôQÚPu TWUôjUô CÚlTûR CkR Uk§Wm Eߧ ùNn¡\Õ, vúXôLm 8: LÚÜt\l ùTiLs LÚûY ®¯l×Pu RôeÏYÕ úTôuß. B£¬Vo-UôQY¬ûPúV ®Vô©j§ÚdÏm NoYdO]ô] Ad² (TWUôjUô ca¬) LPÜs ®¯l×Qof£ Es[ Utßm BwVm ØR­V a®vL°]ôp §]Øm é´dLlTPúYiÓm, CÕ AÕúY (TWUôjUô) ®[dLm : Ad² GuTÕ NôRôWQUô] úY°®LÞdLô] AW¦ LhûP Ad²ûVd ϱdÏm, B]ôp CeÏ ÏÚ-£xVoLû[ ϱd¡\Õ, vúXôLm :9: Vô¬PªÚkÕ ã¬Vu E§d¡\ôú]ô (£Úx¥ NUVj§p) Vô¬Ûs ã¬Vu Uû\¡\ôú]ô (©W[V LôXj§p) Vô¬Pj§p Aû]jÕ ùRnYeLÞm ¸rT¥kÕs[]úYô. AYûW JÚYWÛm Á\ Ø¥VôÕ, (RuûU Utßm ÏQeL°p) CÕ AÕúY (TWUôjUô) ®[dLm : TWUôjUô®u GpûX«pXôj RuûU AYûW VôWôÛm LPdL Ø¥VôÕ Guß GUu ùR°YôL ϱl©Ó¡\ôu, vúXôLm :10: GùRpXôm CeÏs[úRô AÕúY AeÏs[Õ-AeúL GùRpXôm CÚd¡\úRô AÕúY CeúL CÚd¡\Õ, (EPp ØR­VûYL°p CÚdÏm ;TLYô²u AYRôW ìTeLs ûYÏiPj§­ÚdÏm TLYô²u AYRôW ìTúU) AqYôú\ Ae¡ÚlTÕm CeÏs[úR, êX ìTj§tÏm. AYRôW ìTj§tÏm úYßTôÓ GuTúR ¡ûPVôÕ, êX ìTj§tÏm AYRôW ìTj§tÏm úYßTôÓ CÚlTRôL Vôo Lôi¡\ôú]ô. AYu UWQj§­ÚkÕ UWQjûR (RUû^) AûP¡\ôu, ®[dLm : CeÏ TWUôjUô®u TX ìTeL°ûPúV úYßTôÓ CuûUûV Y­ÙÚj§ ùNôpXlThÓs[Õ, TWUôjUô®u êX ìTj§tÏm AYRôW ìTj§tÏm. AqYôú\ JÚ AYRôW ìTj§tÏm Utù\ôu¥tÏm úYßTôÓ ¡ûPVôÕ, JußdùLôuß úTRúUô ApXÕ úTRô úTRúUô ¡ûPVôÕ, AqYôß úTRm LôiTÕ TôYUôÏm, AÕ RUû^ AûPVfùNn¡\Õ, vúXôLm 11 : êX ìTj§tÏm AYRôW ìTj§tÏm ÏQm. Lô¬Vm CûYL°u úYßTôÓ CpûX, TdÏYlThP U]§]ôp CûR ׬kÕùLôs[úYiÓm, úYßTôÓ EûPVRôL G] GYu Tôod¡\ôú]ô AYu UWQj§­ÚkÕ UWQjûR (RUû^) AûPYôu, ®[dLm : ØuUk§Wj§p TWUôjUô®u êX ìTj§tÏm. AYRôW ìTj§tÏm. úYßTôÓ CpûXùV] ùR¬®dLlThPÕ, CkR vúXôLj§p TWUôjUô®tÏm. AYàdÏm. ÏQm. Lô¬Vm ØR­VûYL°p úYßTôÓ CpûX Guß ùR¬®dLlThÓs[Õ, TWUôjUô®tÏm. AYàûPV AûYVeLÞdÏmáP úYßTôÓ CpûX, CqYôß CkR CWiÓ vúXôLeL°Ûm á±V ®`VeLú[ §ÚmTd á\p CpûX GuTûR ׬kÕùLôs[úYiÓm, vúXôLm 12 : CÚRVj§p LPûP®Wp A[®p ×Ú`u (TWUôjUô) Y£d¡\ôu, LPkR Utßm G§oLôXjûRd LhÓlTÓjÕ¡\ôu, BûLVôp CûRV±kR JÚYu Ruû] TôÕLôjÕdùLôs[ CfûN ùLôsY§pûX, TWUôjUô Ruû]d Lôd¡\ôu Gu\ §P Sm©dûL«p CÕ AÕúY (TWUôjUô), ®[dLm: LPûP ®Wp A[Ü ×Ú`u Guß CeÏ á±«ÚlTÕ §Vô]j§tLô] úSôdLj§úX Rôu, Hù]u\ôp LhûP®Wp A[ÜûPVRô¡V CÚRVj§p TWUôjUô Y£d¡\ôu GuTûR LhûP ®Wp A[Ü Guß ®Y¬dLlThÓs[Õ, vúXôLm 13 : LhûP®Wp A[®p Es[ ×Ú`u TWUôjUô ×ûLVt\ ÑPo úTôuß Es[ôo, LPkR Utßm G§oLôXjûR LhÓlTÓjÕ¡\ôo, ClúTôÕ CÚlTYÚm Sôû[ CÚlTYÚm GlúTôÕm CÚlTYÚm AYúW, CÕ AÕúY, TWUôjUô, ®[dLm: ×ûLVt\ ÑPo úTôuß GuTûRdùLôiÓ ¨oUXUôL Es[ôo ©WLôNUôL Es[ôo GuTÕ A±VlTÓ¡\Õ, vúXôLm 14 : UûXf£LWj§u ÁÕ ùTnR UûZ¿o GqYiQm TX §dÏL°p K¥ ¸úZ ®Ý¡\úRô AqYiQúU TWUôjUô®PªÚkÕ ÏQeL°u úTRjûR LôiTYu UôßTôh¥u RY\ô] A±®u ùRôPoTôL ¸úZ ®Ý¡\ôu, ®[dLm : TWUôjUô®u AYRôW ìTeL°úX ÏQm. Lô¬Vm ØR­VûYL°p úTRªpûX Guß HtL]úY á\lThÓs[Õ, úTRm CÚlTRô] RY\ô] A±®u ®û[ÜLs CeúL EYUô]jRôp ®[dLlThÓs[Õ, (CRu ùRôPof£ûV AÓjR YôWm LûP£YôWj§p TôodLXôm)