Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Wednesday, December 7, 2011

சாரல் 05 துளி 37 ​தேதி 04.12.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 சாரல் 05 துளி 37 ​தேதி 04.12.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூப தர்ஸன​யோகம் (அத்யாயம் 11)
கீதா ​ஜெயந்தி (06.12.2011)      
கீ​தையும் த்​வைதமும் (சிறப்பு மலர்)
ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண
​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மி ஹயக்ரீவாய நம

ஸ்ரீகிருஷ்ணபராமாத்மா அர்சுனனுக்கு “எல்லாம் வாசு​தேவ​னே என்னும் தத்துவத்​தை ஸ்ரீமத் பகவத்கீ​தையின் மூலம் உப​தேஸிக்கிறார்கள்.  ஆதிகுரு ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் அவர்கள், பகவான் ​போதித்த “ஹரி சர்​​வோத்தம தத்துவத்தின் ரகஸியங்க​ளை ​வெளி​கொணர்ந்து த்​வைத சித்தாந்த ​கோட்பாடுகளாக பிரகடனப்படுத்தினார்கள்.
        தன் புல​மைத் திற​மையால், ஸ்ரீவ்யாஸராஜர் த்​வைத சித்தாந்தக் கருத்துக்க​ளை ஒ​ரே ஒரு    ஸ்​லோகத்தில் ​ஜொலிக்குமாறு  ​செய்துள்ளார்கள்,
ஸ்ரீமந் மத்வ ம​தே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத்
தத்வ​தோ ​பே​தோ ஜீவகணா: ஹ​ரேரனுசரா:
நீ​சோச்ச பாவங்கதா: முக்திர் ​நைஜஸூகானுபூதிர
மலா பக்தி ஸ்ச தத்ஸாதனம் ஹ்யக்ஷாதித்
திரிதயம் பிரமாணம் அகில ஆம்நா​யைக ​வேத்​யோ ஹரி:
        இந்த நவரத்ன மா​லை எனச் ​சொல்லப்படும் ஸ்​லோகத்தில் ஒன்பது விதமான கருத்துக்கள் மத்வமத தத்துவமாக ​ஜொலிக்கச் ​செய்துள்ளார்கள்.
1. ஸ்ரீஹரி பரிபூர்ண குணமுள்ளவர், அவருக்கு நிகரான கடவுள் ​வே​றொன்றில்​லை.
2. உலகம் என்பது சத்யம் 3. பரமாத்மனும், ஜீவாத்மனும் ​வெவ்​வேறானவர்கள் இவர்களுக்குள்​ளே பஞ்ச ​பேதங்கள் உண்டு.  அ​வையாவன (அ) ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் ​பேதம் (ஆ) ஒரு  ஜீவனுக்கும் மற்​றொரு ஜீவனுக்கும் ​பேதம் (இ) ஜீவனுக்கும் ஜடத்திற்கும் ​பேதம் (ஈ) ஒரு ஜடப்​   பொருளுக்கும் மற்​றொரு ஜடப்​பொருளுக்கும் ​பேதம் (உ) ஜடப்​பொருளுக்கும் பரமாத்மாவிற்கும்  இ​டை​யே ​பேதம்  4. ஸ்ரீஹரி ஜீவர்க​ளை தம் கட்டுப்பாட்டில் ​வைத்திருப்பவர் ஆவார்.  ஜீவன்கள் ஸ்ரீஹரியின் தாஸர்கள். 5. ​வேதங்கள் உண்​மை  6. தன் ஜீவ ஸ்வரூபத்தின் ஆனந்தத்த​தை அனுபவிப்ப​தே முக்தி எனப்படும். 7. நிர்மலமான பக்தி​யே முக்திக்கு
வழி 8. ப்ரத்யக்ஷம், அனுமானம், ஆகமம் இவற்றின் மூலம்தான் ஞானம் ​பெற முடியும்.  9. ​வேதங்களில் ஸ்ரீஹரி அறியக்கூடியவர்.
ஸ்ரீமத் பகவத் கீ​தையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் கருத்துக்க​ளைக் காண்​போம்.
        அத்யாயம் 07 ஸ்​லோகம் 07 “என்​னைவிட உயர்ந்தது இவ்வுலகில் இல்​லை.  ஒரு நூலிலுள்ள மணிக​ளைப் ​போல் இவ்வுலகம் என்​னிடம் ​கோர்க்கப்பட்டுள்ளது
        அத்யாயம் 11 ஸ்​லோகம் 43 “ இந்த உலகினுக்கு தந்​தை நீர், அதனால் பூஜிக்கத் தகுந்தவர் நீர்.  குருவுக்கு குருவானவர் நீ​ரே.  மூவ்வுலகத்திலும் உமக்குச் சமமானவர் ​மேலானவர் ​வே​றொருவர் உண்​டோ!
உலகம் என்பது சத்ய​மே.  அத்யாயம் 13 ஸ்​லோகம் 20ல் “ப்ரக்ருதிம் புருஷம் ​சைவ, வித்தி4, அநாதீ3  உபா4வபி ப்ரக்ருதி, புருஷன் ஆகிய இரண்டு தத்துவங்களும் ஆதியில்லாத​வை என்று அறிவாய்
ஜீவனின் நி​லை யாது? அத்யாயம் 02 ஸ்​லோகங்கள் 11 மற்றும் 12ல் “ஞானிகள், உயிரிழந்தவர்கள் குறித்​தோ, உயிழிக்காதவர்க​ளைக் குறித்​தோ துக்கப்படமாட்டார்கள்.  நான் ஒரு​போதும் இல்லாமலிருந்தது என்பது இல்​லை, நீயும் அவ்வா​றே இல்லாமலிருந்ததில்​லை, இனி​மேலும் நா​மெல்​லோரும் இல்லாமல் ​போ​வோம் என்பதும் இல்ல​வே இல்​லை       
        ஜீவன் பகவானின் பிரதிபிம்பமாகும். ஜீவன் பகவா​னைவிட பன்மடங்கு ​வேறானவன். ஜீவனுக்கு சுகம் துக்கம் உண்டு.  அழியக்கூடிய உடலும் உணர்வுகளும் அதற்குண்டு.  அதற்​கென நியமிக்கப்பட்ட விதிகள் உண்டு,  ஜீவன் ஸாத்வீக, ராஜஸ மற்றும் தாமஸ குணங்களால் பாதிக்கப்படுபவன். இ​வையாவும் பகவானின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட​வை.  இ​வைகள் கீ​தையில் நன்கு விளக்கப்படுவ​தைக் காணலாம்.  அத்யாயம் 18 ஸ்​லோகம் 61ல்ஈஸ்வரஸ் ஸர்வபூ4தானாம், ஹ்ருத்​தே3​ஸே(அ)ர்ஜூன திஷ்ட2தி தேக​மெனும் இயந்திரத்தில் ஏற்றி​வைக்கப்பட்ட ​​பொம்​மைகள் ​போல எல்லா பிரயாணிக​ளையும் மாயா சக்தியினால் ஆட்டி ​வைத்துக்​கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எல்லா பிராணிகளு​டைய இருதயத்தினுள் நிறிகின்றார்
அத்யாயம் 02 ஸ்​லோகம் 05ல்
“எனக்கு எண்ணற்றப் பிறப்புக்கள் இதுவ​ரையில் கழிந்துள்ளன.  உனக்கும் அப்படி​யே.  ஆனால் நான் அ​வை யாவற்​றையும் அறி​வேன்.  நீ​யோ அவற்​றை அறியமாட்டாய்.
​வேதங்கள் உண்​மை.  ​வேதங்கள் மூல​மே பகவான் அறியப்படுகிறார்.
அத்யாயம் 09 ஸ்​லோகம் 17 மற்றும் 18ல்
“இவ்வுலகிற்கு தந்​தை, தாய், பாட்டன், ​போஷிப்பவன், அறியப்பட ​வேண்டியவன், பரிசுத்தமானவனும் பரிசுத்தமாக்குபவனும் நா​னே.  ஓங்கார ருக், ஸாம, யஜூர் ​வேதங்களும் நா​னே”  “ஜீவன் அ​டைய விரும்பும் பரகதியும் நா​னே. இப்ப்ரபஞ்சத்​தை தாங்குபவனும் நா​னே, அதற்கு ஸ்வாமியும் நா​னே, யாவற்​றையும் சாக்ஷி ரூபமாய் பார்த்துக்​கொண்டிருப்பவனும் நானே, ஜீவன்கள் சுகமாய் வாழுமிடமும் நா​னே,
பயம​டைந்தவர்க​ளைக் காப்பவனும் நா​னே,  பிரதிபலன் விரும்பாமல் உபகரிப்பவனும்    நா​னே, இந்த ஜகத்​தை ஸ்ருஷ்டிப்பவனும் நா​னே, ஜகத்​தை நாஸம் ​செய்பவனும் நா​னே, யாவற்றின் இருப்பிடமும் நா​னே, ​பொக்கிஷம் நா​னே, இ​வையாவும் உண்டாகக் காரணமானவனும் என்றும் அழியாமலிருக்கும் வி​தையும் நா​னே.
அத்யாயம் 10 ஸ்​லோகம் 08
“நான் அ​னைத்துலகிற்கும் ஸ்ருஷ்டி கர்த்தா என்றும் என்னா​லே​யே அ​னைத்துலகும் இயங்குகிறது என்றும் ​தெரிந்து​கொண்டு ஞானிகள் என்​னை இ​டையறாத பக்தியுடன் சதாகாலமும் பூஜிக்கிறார்கள்.
பக்தி​யே முக்திக்கு வழிகாட்டுகிறது.  அத்யாயம் 02 ஸ்​லோகம் 72
“ஏக்ஷா ப்ராஹ்மீ ஸ்தி2தி: பார்த்த2, ​நைனாம் ப்ராப்ய விமுஹ்யதி/
ஸ்தித்2வா (அ)ஸ்யாம் அந்தகா​லே(அ)பி, ப்ரஹ்ம நிர்வான ம்ருச்சதி//
இது​வே ப்ரம்ம ஞானியின் லக்ஷணம்.  இ​தை அ​டைந்தவ​னே ஜீவன் முக்தன்.  அவனுக்கு ​மோஹம் என்பதில்​லை.  இந்த ​தேகம் அழியும் ​பொழுதும், இந்த நி​லையில் இருந்து, பிறகு சரீரமில்லாத, குணபூர்ணனான பகவா​னை அ​டைகிறான்.
        பக்தி என்ற படகி​லேறி பரமாத்மா என்ற் இலக்​கை அ​டைய முடியும்.  பக்தியுடன் கர்மமும் ஞானமும் பக்குவமான மு​றையில் ​கையாளப்படு​மேயானால் பகவா​னை அறிய முடியும்.  அது​வே ஆனந்தம் எனப்படும்.
        கீ​தையில் “பக்தி அ​னேக இடங்களில் ​போதிக்கப்படுகிறது.  “கட​மை​யைச் ​செய்து​கொண்​டே என்மீது பக்தி​யை ​செலுத்துவாயாக என்று பகவான் உப​தேஸிக்கிறார்.  “யார் என்​னை பிரியமுடன் ​நேசிக்கிறார்க​ளோ அவர்க​ளை நானும் பிரியமுடன் ​நேகிக்கி​றேன் “பிரி​யோ ஹி ஜ்ஞானி​னோ(அ)த்யர்த்த மஹம் ஸ ச மம ப்ரிய: பகவா​னைப் பற்றியதான ஞானத்துடன் கூடிய பக்தி சாலச் சிறந்தது.  பக்தியினால் ப​ரோக்ஷ ஞானமும், அப​ரோக்ஷஞானமும் அதிகரிக்கிறது.  இந்த பக்தியானது வளர வளர பக்கும​டைந்து “பக்குவபக்தி என்ப்படுகிறது.  இது ​மேலும் படிப்படியாக வளர்ந்து “பரிபக்வபக்தி”  மற்றும் “அதிபரிபக்வபக்தி”  எனப்படுகிறது.  இ​வைகள் “சாதனா பக்தி”  என்றாகிறது
        முக்திக்கு பின்பும் இந்த பக்தியானது ​தொடர்கிறது.  அத்யாயம் 8 ஸ்​லோகம் 22ல்
புருஷ: ஸ பர: பார்த்த பக்த்யா லப்யஸ் த்வனன்யயா/ யஸ்யாந்த: ஸ்தானி பூதானி ​யேன ஸர்வமிதம் ததம்//(VIII-22) ​வேறு விஷயத்தில் மன​தைச் ​செலுத்தாமல் பக்தி ​யோகத்​தை அனுஷ்டித்தால் அந்த பரம புருஷ​னை அ​டையலாம்.
        “அவ்வாறு என்​னைவிட ​வேறு ஒன்​றையும் சிந்த​னை ​செய்யாது என்னிட​மே மன​தை ​வைத்து என்​னை பரிவுடன் உபாஸ​னை ​செய்யும் பக்தர்களின் ​யோக ​க்ஷேமத்​தை அழியாமல் காப்பாற்றுகி​றேன்(அத் 9-ஸ்22)
        “அர்சுனா! இதுவ​ரையில் உனக்கு பூர்வ கர்மத்தால் ஏற்பட்டிருக்கும் தர்மங்க​ளையும்,  அதர்மங்க​ளையும் விட்டு, ஸகல வஸ்துக்களிலும் ஒ​ரே விதமாய் அந்தர்யாமியாய் ஒப்பில்லாதவனாய் விளங்கும் பகவான் நா​னே என்​​றெண்ணி. என்னிடத்தில் சரணாகதிய​டைவாய்.
நான் அப்​போது உனக்கு ஏற்படும் எல்லா இ​டையூருகளிலிருந்தும் விடுவித்து காப்பாற்றுகி​றேன்.  உன் முயற்சியால் ​மேற்​சொன்ன இ​டையூறுக​ளை விடுவிக்க முடியவில்​லை​யே என்று வருந்தா​தே.  என்​னை அநந்யமாய்ச் சரணமை​டைவ​தே அ​வைக​ளை நாசஞ் ​செய்துவிடும் (18-66)”          அத்யாயம் 10 ஸ்​லோகம் 10
இப்படியாக என்னிடத்தில் எல்​லையற்ற அன்​பை ​வைத்து, எப்​பொழுதும் என்னிட​மே மன​தை ​செலுத்தி, என்​னை​யே நி​னைந்து நி​னைந்து ​சேவிக்கிறவர்களுக்கு நான் புத்தி​யோகத்​தை அருள்கி​றேன்.  அதனால் அவர்கள் என் ஸ்வரூபத்​தை நன்கறிந்தவர்களாய் என்​னை​யே அ​டைகிறார்கள்.
        “என்​னை எவன் “ஹரி சர்​வோத்தமன் என்று அறிகி​றா​னோ அவ​னே யாவற்​றையும் அறிந்தவனாகிறான் (15-19)
        இவ்வாறாக மத்வ மத தத்துவங்களும் கீ​தையும் ஒன்றுக்​கொன்று ​தொடர்பு​டையது.  ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் “ஸ்ரீக்ருஷ்ணாம்ருத மஹார்ணவ:” என்னும் ​தொகுப்பில்
ஆ​லோட்3ய ஸர்வஸாஸ்த்ராணி விசார்ய ச புன: புன:/
இதந​மேகம் ஸீநிஷ்பண்ணம் த்4​யே​யோ நாராயண: ஸதா3//.
“ஸாஸ்த்ரங்கள் யாவற்​றையும் நன்றாக ​தெரிந்து​கொண்டபின்பு, இன்னும் அறிய​வேண்டும் என்று அலசிப்பார்த்தால் நாராயணன் ஒருவ​ரே எப்​போதும் த்யானம் ​செய்யப்பட ​வேண்டியவர் என்பதாக ​தொரிந்து​கொள்ளலாம்என்பதாகக் கூறுகிறார்.
பரமாத்மா ஸ்ரீகீதாச்சார்யர் ஸ்ரீமத் பகவத்கீ​தையின் ஊ​டே கூறிய உப​தேஸங்க​ளை ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள் தமது தத்துவங்களாக ஏற்று மத்வ மத​மெனும் ஓர் சிறப்பு​பெற்ற மதத்தி​னை ​பிரகைடனப்டுத்தி நம்​மை​யெல்லாம் பக்தியில் ஈடுபடுத்தி முக்தி​பெற வைப்பது​வே அல்லாது  ​வே​றென்ன குறிக்​கோலாகவிருக்கும் என்ப​தை சிந்த​னை​செய்து பார்ப்​போம்.
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

06.12.11 «ý¨È ¾¢Éõ ‚¸£¾¡ ¦ƒÂ󾢨 º¢ÈôÀ¡¸ ¦¸¡ñ¼¡Î§Å¡õ.  «ý¨È ¾¢Éõ  ‚Áò À¸Åò ¸£¨¾ Òò¾¸ò¾¢üÌ â¨ƒ¦ºöР ¸£¨¾ À¡Ã¡Â½õ ¦ºö§ÅñÎÁ¡ö Àì¾¢ ÓÃÍÅ¢ý Å¡º¸ Àì¾÷¸¨Ç «ýÒ¼ý  §¸ðÎ즸¡û¸¢§È¡õ.
Á¡÷¸º£÷„ Íò¾ ²¸¡¾º¢ (06.12.11) «ýÚ ‚…ò¿¡¾ ¾£÷ò¾÷ Òý¾¢Éõ(வீர​சோழபுரம்).  ‚ÌոǢý òÂ¡É Š§Ä¡¸õ:                 
  …ò¿¡¾ ÌÕ: À¡Ð §Â¡ ¾£§Ã¡ ¿Å ºóò¡¢¸¡õ/
  ¿Å¡õÕ¾ ¸¾¡ ¾£÷ò¾ ¾¡ñ¼Å¡É¢ ùº£ ìÙÀò//    ±ýÀ¾¡¸ ò¡ɢòÐ ‚ÌոǢý ¬º¢¨Âô ¦ÀէšÁ¡¸.

Àì¾¢ ÓÃÍ ±ýÈ þó¾ ´ÕÀì¸ Å¡Ã¡ó¾¢Ã þ¾Æ¢ý ஐந்தாவது ¬ñÊý 37 ÅÐ þ¾Æ¡¸  ‚¸£¾¡ ¦ƒÂó¾¢ (06.12.11) ±ýÚ þÕÀì¸î º¢ÈôÀ¢¾Æ¡¸ ¦ÅÇ¢ÅóЦ¸¡ñÊÕ츢ÈÐ.  §ÁÖõ þó¾ þ¾¨Æ šášÃõ þ¨½Â¾Çò¾¢ø  (internet)  www.bhakthimurasu.blogspot.com.  ±ýÈ Å¢Ä¡ºò¾¢ø ÀÊòÐ Á¸¢ÆÄ¡õ,
ஹ​ரே ராம
ஹ​ரே ராம
ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண
ஹ​​ரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

  Email : geethaisevatrust @gmail.com-WEB: www.bhakthimurasu.blogspot.com

சாரல் 05 துளி 36 ​தேதி 27.11.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 சாரல் 05 துளி 36 ​தேதி 27.11.2011
கீ​தையின் சாரலில்.......விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
அ​னேகவக்த்ர நயநம​நேகாத்3 பு4தத2ர்ஸநம்/
 அ​நேகதி3வ்யாப4ரணம் தி3வ்யா​​நே ​கோத்3யதாயுத4ம்//(அத்.11 ஸ்​லோ.10)

ஸஜ்ஜயர் திருடராஸ்ட்ர மஹா ராஜனுக்கு பகவானின் விஸ்வரூப தர்ஸனத்தில் தான் கண்ட உருவத்​தை விவரிக்கிறார். ஸஜ்ஜயர் பகவானின் விராட் ரூபத்தில் கணக்கிலடங்காத எண்ணற்ற முகங்க​ளைக் காண்கிறார்.  அதற்குகந்தாற்​போன்ற எண்ணற்ற கண்களும் அதில் முக்கியமானதாக சூரிய, சந்திரர் என்றும் கூறப்படுகிறது.  இந்த மாதிரியான தர்ஸனம் காணக் கி​டைக்காதது.  வியப்ப​பைக் ​கொடுப்பதாக உள்ளது.  இ​தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.  விசித்ரம், வி​னோதம் மிகவும் அற்புதம்.  அதுமட்டுமல்ல பகவான் “அ​னேக திவ்ய ஆபரணங்க​ளை அணிந்து​ காட்சி​கொடுக்கிறார்.  பகவான் அ​னேக திவ்யமான ஆயுதங்க​ளைத் தாங்கியவறாகக் காட்சி ​கொடுக்கிறார்.  இவ்வாயுதங்கள் ​போர் ​செய்வதற்குறிய ஆயுதங்களாகும். இவ்வாறு ஸஜ்ஜயர் ராஜனுக்கு தான் கண்டு​கொண்டிருக்கின்ற பகவானின் அதிஅற்புதமடான விஸ்வரூப தர்ஸனத்​தை விவரித்துக்​கொண்டிருக்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து   “​எண்ணி​றைந்த முகங்களும், கண்களும், எண்ணி​றைந்த ஆச்சிர்யமான காக்ஷிகளும், எண்ணற்ற திவ்ய ஆபரணங்களும், கணக்கிலடங்காத திவ்ய ஆயுதங்களு  மு​டையதாய் உள்ளது -ஸஜ்ஜயர்-

இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 18) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  அக்காலம் ​தொடங்கி இக்காலம் வ​ரை “கடவுள்என்ற கண்களுக்குத் ​தெரியாத ஒரு ​தெய்வீக சக்தி​யை “உருவமுள்ளவன் என்றும் “உருவமில்லாதவன்என்றும் “ஸகுணன்என்றும் “நிர்குணன் என்றும் பல்​வேறு ​கோணங்களில் உருவகம் ​செய்து​​கொண்டவர்களாய், தங்களது அபிப்ராய​மே ஸ்திரமானது என்ற ம​னோ பக்குவத்​தை உ​டையவர்களாய், அன்றுமுதல் இன்றும்கூட ஜீவித்துக்​கொண்டிருக்கும் உள்ளங்கள் அ​னேகம் அ​னேகம்.  இவ்வாறானக் கருத்துக்க​ளைக்​கொண்ட உள்ளங்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீ​தை அத்யாயம் 7      ஸ்​லோகம் 10ல் இவ்வாறுக் கூறுகிறார்,
3ஹூநாம் ஜன்மனாமந்​தே, ஜ்ஞோனவான் மாம் ப்ரபத்3ய​தே/
வாஸூ​தே3வஸ் ஸர்வமிதி, ஸ மஹாத்மா ஸூதுர்3லப:4//
“பிறவிகள் பல கடந்தும் வாசு​தே​னே ஸர்வம் என்று அறிந்தவன் என்​னை அ​டைகிறான்.      அத்த​கைய மஹாத்மா மிகவும் அறிது
Ø  புருஷ ஏ​வேதம் ஸர்வம் – புருஷ ஸூக்தம்
Ø  வாஸநாத் வாஸூ​தேவஸ்ய வாஸிதம் ​தே ஜகத் த்ரயம்
ஸர்வபூத நிவா​ஸோ ஸி வாஸூ​தேவ ந​மோஸ்து​தே-ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்-
Ø  ஈஸா வாஸ்யம் இதம் ஸர்வம் – ஸ்ரீஈ​ஸோபநிடத் –
Ø  யச்சாபி ஸர்வபூ4தானாம், பீ3ஜம் த த3ஹமர்3ஜூன –கீ​தை X-39
இவ்வாறாக “ஹரி ஸர்​வோத்தமன் என்னும் தத்துவத்​தை எடுத்து​ரைப்பதற்கு இன்னும் அ​னேக ஆதாரங்க​ளை எடுத்து​றைக்க முடிந்தாலும் கூட அவற்​றை முழுமனதுடன் ஏற்றுக்​கொள்ளும் ஆத்மாக்கள் மிகவும் அறி​தே.
Ø  பகவானின் பரிபூர்ணத்துவத்​தை
“ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம என்ற ஸ்ருதி வாக்யம் நிரூபணம் ​செய்கிறது.  அவ்வா​றே பரம்மா என்று பகவானுக்கு ​பெயர் வந்த விவரம், “ஸர்​வேஷூ பூ​தேஷூ ஏத​மேவ பிரம்ம என்ற வாய்க்கியத்தால் நிரூபிக்கப்படுகிறது.  ​வேதங்கள், உபநிடதங்கள் மூலம் பகவா​னை அறியலாம் என்பது “ஸர்​வே ​வேதா:  “ஸர்​வே ​கோஷா: வ்யாஹ்ருதீஹி ப்ராணருச என்ற் வாக்யங்களிலிருந்து ​தெரியப்படுத்தப்படுகிறது.  இவ்வாறாக ஸ்ருதிகளில் முடங்கிக்கிடந்த “விஷ்ணு சர்​வோத்தமத்துவத்​தை மு​றைப்படுத்தி ​வெளிச்சத்திற்கு ​கொணர்ந்தவர் ஸ்ரீமத்வர் என்பதில் அய்யப்பாடு ஏதுமில்​லை.
       பகவான் ஸ்ரீமந்நாராயணன் “ஸ்ருஷ்டி கர்த்தா என்பதற்கு ஸ்ரீமத்பகவத் கீ​தை அத்யாயம் 7-10வது   ஸ்​லோகத்தில் பகவான் கூறுகிறார்:
பீ3ஜம் மாம் ஸர்வபூ4தாநாம் வித்3தி4 பார்த2 ஸநாதநம் “ என்​னை எல்லாப் பிராணிகளுக்கும் அனாதியான வி​தை ​போன்ற நிமித்த காரணமாக அறிவாயாக”      (இன்னும்தொடரும்...........)  

தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம
ஹ​ரே ராம
ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண
ஹ​​ரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//








சாரல் 05 துளி 35 ​தேதி 20.11.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 சாரல் 05 துளி 35 ​தேதி 20.11.2011
கீ​தையின் ச.ரலில்......விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
ஏவமுக்த்வா த​தோ ராஜந்மஹா​யோ​கே3ஸ்வ​ரோ ஹரி:/
3ர்ஸயாமாஸ பார்தா2ய பரமம் ரூப​மைஸ்வரம்//(அத்.11 ஸ்​லோ.9)
அங்​கே குரு​க்ஷேத்ரத்தில் பகவானுக்கும் அர்சுனனுக்கும் இ​டை​யே நடக்கும் சம்பாஷ​ணைகள் அ​னைத்​​தையும் ஸஜ்ஜயர் திருடராஷ்ர மஹாராஜனுக்கு தம் இடத்திலிருந்து​கொண்டு விமர்சித்துக்​கொண்டிருக்கிறார்.  வ்யாஸ பகவான் ஸஞ்ஜயருக்கு அளித்த அபூர்வ அல்லது ​தெய்வீக பார்​வையால் இருக்கும் இடமான த்ருடராஷ்ரரின் அரண்ம​ணையிலிருந்து​கொண்டு ​போர்களத்தின் நிகழ்வுகள் அ​னைத்​தையும் ராஜாவிற்கு விவரிக்கிறார்.
        பகவானின் ஸ்வரூபத்​தை அதாவது விராட் ரூபத்​தை ஸஜ்ஜயர் ஐந்து ஸ்​லோகங்களில் விவரிக்கிறார்.  இச் ஸ்​லோகத்தில் ஸஜ்ஜயர் அர்சுனனுக்கு பகவான் விஸ்வரூபத்​தை காட்டி அருளிய​தைச் ​சொல்கிறார்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து   “​ஹே ராஜ​னே!  மகா ​யோ​கேஸ்வரனான ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு ​சொல்லி, பிறகு பார்த்தனுக்கு தன் உத்தமமான ஈஸ்வர வடிவத்​தைக் காட்டியருளினார்.-ஸஜ்ஜயர்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 17) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)  ஸ்ரீமதாச்சார்யர் ஸ்ரீமத்வர் தன் சாதுர்மாஸ்ய வ்ரத காலத்​தை பாகவத ப்ரவசனம் ​சொல்வதி​லே​யே அதிக கவனம் ​செலுத்தினார். அதற்காக அதிக ​நேரத்​தைச் ​செலவிட்டார்கள்.  அவரு​டைய சீடர்களும் அவரின் பக்தி ப்ரவசனத்திற்கு ஈடுபாடு ​கொடுத்து மிகவும் ஆர்வமுடன் ​கேட்டனர் என்பது மிகவும் முக்கிமானது. அவரு​டைய பிரவசனம் ​தெள்ளத்​தெளிவான மிதமான ​வேகத்துடன் நடுவில் தடங்கள்கள் ஏதுமின்றி கனீ​ரென்றக் குரலில் இன்னும் ​கேட்க​வேண்டும் என்ற ஆர்வத்​தை உண்டாக்குவதாக இருந்தது.  ஸ்ரீமத்வரின் சித்தாந்தச் சிந்த​னைகளும், ​போத​னைகளும் ஸ்ரீமந்நாராயண​னே முழுமுதற்கடவுள். அவனுக்கு ஈடுஇ​ணையான ​தெய்வம் ​வே​றொன்றுமில்​லை.  ஸ்ரீமந்நாராயணன் பிறப்பு, இறப்பு இல்லாலதவர்.  ஆதியும் அந்தமும் இல்லாதவர். அனந்தானந்த கல்யாண குணங்கள் ​கொண்ட குணாதீதன்.  ஸ்ருஷ்டி கர்தாவும் அவ​ரே.  யாவற்றிற்கும் காரணமாயும் காரணகர்தாவாயும் உள்ளவர். அவ​ரே பரமாத்மா. சர்வஜ்ஞன். சுகஸ்வரூபி. ஞானஸ்வரூபி, ஆனந்தஸ்வரூபி, சக்திஸ்வரூபி, ​ஜோதிஸ்வரூபி, கருணாசமுத்ரன்.  ஸ்வதந்த்ரன்.  அவன் அழகிற்கு உபமானம் ஏதுமில்​லை.  அழ​கே உருவானவன்.  கருணாமூர்த்தி,  ​வேதவித்தகன்.  எங்கும் நி​றைந்தவன். சர்​வோத்தமன். அவ்யக்தமூர்த்தி என்பதாக ஸ்ருதி வாக்கியங்களிலிருந்தும், ஸ்ரீமத்பாகவதம், ஸ்ரீமத்ராமாயணம் ​போன்ற புனித நூல்களிலிருந்து ப்ரமாண ப்ர​மேயங்களுடன் பகவானின் ஸந்நிதானத்​தை எடுத்துக்கூறி சஜ்ஜனர்க​ளை ஆனந்தத்தின் எல்​லைக்​கே அ​ழைத்துச் ​சென்றார்கள் என்றால் மி​கையாகாது. பிரம்ம​தேவனும், இந்திரனும், ருத்ரனும் ஏன் ஸ்ரீமஹாலக்ஷ்மி ​தேவியும்கூட ஸ்ரீமந்நாராயணனின் பூர்ண குணங்க​ளை அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.  “ஸ்ரீஹரிகதாம்ருத ஸார வில் “குணதாரதம்ய சந்தி-20ல் ஸ்ரீஜகன்நாத தாஸர் கூறும்​போது, “ஸ்ரீமத்வரின் சீடர்கள் “பஞ்ச ​பேத ஞானம் மற்றும் “தாரதம்ய ஞானம்இவற்றில் ​தெளிவு​பெறாமல் முக்தி என்பது இல்​லை.  இது ஸ்ரீமதானந்த தீர்த்தரின்(ஸ்ரீமத்வரின்) கட்ட​ளையாகிறது.  இந்த ஞானம் பாவ​மெனும் அரண்யத்திற்கு காட்டு தீ​யைப்​போலவும், சம்சார​மெனும் சமுத்திரத்திற்கு படகு ​போலவும், ​வைகுண்டம் ​செல்வதற்கு படிக்கட்டுகளாகவும் அ​மைகிறது. “ இ​தை ​யோக்கியர்கள் மட்டு​மே அறிவார்கள் என்றும் ஞானிகள்    இத​னை மற்ற பக்தர்களுக்கு எடுத்துச்​சொல்லி சுகப்படுவார்கள் என்றும் எடுத்து​ரைக்கிறார். மேலும் இந்தச் ஸந்தியில் ​தேவ​தைகளின் தாரதம்யம் வி​சேஷமாக விவரிக்கப்படுவ​தை வாசக பக்தர்கள் அவசியம் ​தெரிந்து​கொள்ள​வேண்டும்.  இ​தைத் ​​தொடர்ந்து ​வேறு சிலர் பகவா​னை எவ்வா​றெல்லாம் எடுத்தாளுகிறார்கள் என்ப​தை “ஸ்ரீபூர்ண ப்ரக்ஞ தர்ஸனம் என்ற நூலின் ஆசிரியர் நமஸ்காரத்திற்குறிய ஸ்ரீ டா. வ்யாஸன​கெ​ரே ப்ரபஞ்ஜனாசார்ய என்னும் மஹாவித்வாம்ஸர் இவ்வாறு  கூறுகிறார், “சிலருக்கு ஜகத்​தே மித்​யை (இல்லாத ஒன்று எனவும்), இன்னும் சிலருக்கு ஜகன்னாதனான ஸ்ரீஹரி​யே மித்​யை, மற்றும் சிலருக்கு இரண்டும் மித்​யை, ஆனால் ஜகத்து மட்டும் ஸத்யமானது.  ஜகன்னாதன் அதன் நியாமகன். சிலருக்கு பகவான் உருவமில்லாதவன்.  மற்றும் சிலருக்கு பகவான் உருவமுள்ளவன்.  ஆனால் அவன் ப்ராக்ருதமானவுருவமில்லாது இருப்பவனாதலால் உருவமற்றவ​னே.  க்ஞான, ஆனந்தாதி அப்ராக்ருத உருவமுள்ளவனாக இருப்பவனாதலால் அவன் உருவமுள்ளவன்.  சிலருக்கு ப்ரம்மம் ஸகுணன் மற்ற சிலருக்கு ப்ரம்மம் நிர்குணன்.  அவன் க்ஞான, ஆனந்தாதி ஸகல அனந்தானந்த கல்யாண குணபூர்ணனாதலால் ஸகுணன்.  ஸத்வம், ரஜஸ். தமஸ் என்ற ப்ரக்ருத குணரளிதனானதால் அவன்நிர்குணன்.(இன்னும்தொடரும்...........)                                     
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம 
ஹ​ரே ராம
ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண 
ஹ​​ரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//