Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, January 28, 2011

சாரல் 4 துளி 46 தேதி 13.02.11


கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
மஹர்ஷீணாம் ப்3ருகுரஹம்,  கி3ராமஸ்ம்யேகமக்ஷரம்/
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ sஸ்மி ஸ்தா2வரானாம்ம் ஹிமாலய:// (அத்.10 ஸ்லோ.25)

மஹரிஷிகள் பத்துபேர்கள் ஸ்ரீப்ரம்மாவின் மானஸ புத்ரராக தாமே ஸ்வயமாகத் தோன்றியவர்கள். இவர்களின் சாக்ஷ்சாத்கார ரூபத்தில் பகவானே தோற்றமளித்தார். மஹரிஷிகள்: 1. ப்ருகு 2. மரீசி 3. அத்ரி 4. அங்கிரஸ் 5. புலஹர் 6. க்ரது 7. மநு 8. தக்ஷர் 9. வஸிஷ்டர் 10. புலஸ்த்யர் எனப்படுகிறார்கள். இவர்களில் முக்கியமானவர் ப்ருகு முனிவர். இம்முனிவரைப் பற்றியதான கதைகள் அனேக புராணங்களில் அவ்வப்பொழுது கூறப்படுகிறது.எனவே,பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மஹரிஷிகளில் ப்ருகுவாக காட்சியளிப்பதாக என்று உபதேஸிக்கிறார்.
சொற்களுள் 'ஏகாக்ஷரமாக' அதாவது 'ஓம்' என்னும் பிரணவ மந்திரமாக 'ஓம்' என்னும் சப்பதத்தில் இருப்பதாகக் கூறுகிறார். காடகோபநிஷத்தில் (1.2.15ல்) யமன் ஓம் காரத்தின் பெருமையை விளக்கிக் கூறுவதைக் காணலாம் (சாரல் 2 துளி 35). இந்த ஓம் காரத்தில் எட்டு அக்ஷ்ரங்கள் உள்ளன. அதாவது அகாரம், உகாரம், மகாரம், நாத, பிந்து, கலா, சாந்தா, அதிசாந்தா என்பதான எட்டு ஸப்தங்கள் அடங்கியுள்ளன. இந்த ஓம் காரத்தின் விஸ்தாரமே வேதம். இந்த ஓம் காரம் ஓரெழுத்து எனப்படுகிறது. எனவே பகவான் ப்ரணவ மந்திரத்தில் ஓம்கார சப்தமாக இருப்பதாகக் கூறுகிறார். 'வேத்3யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜீரேவச'(ஸ் 17, அ9) என்பதாக 9ம் அத்யாயத்தில் கூறியதைப் பார்க்கிறோம்.
கர்மபலன் கருதி வேதங்களில் கூறப்பட்ட ஹோமங்கள் மூலம் செய்யப்படும் யாகங்கள் (யஜ்ஞை ரிஷ்ட்வா ஸ்வர்க3திம்) யாவும் சிறிது காலமே பலநைக் கொடுக்கும். அவைகள் சொர்கத்திற்கு செல்ல வேண்டுமானால் பயன்படும். ஆனால் பகவானின் ஸன்னிதானத்தை அடைய பக்தியுடன் ஜபங்கள் செய்யவேண்டும். ஆகையால் யக்ஞங்களில் சிறந்தது ஜபஞக்ஞம். ஜபத்தால் ஞானம் சித்திக்கிறது. ஞானத்தால் பகவானின் சாக்ஷாத் ரூபம் தெரிந்துகொள்ளலாம். மனதிற்குள் பகவானின் நாம ஜபம் சாலச்சிறந்தது. பகவான் மற்ற யக்ஞங்களைவிட பிறந்தவர்களைக் காப்பதற்காக 'ஜபயஜ்ஞன்' என்ற ரூபப்பெயருடன் ஜபத்திலிருப்பதாகக் கூறுகிறார்.
இமயமலையில் ஸ்ரீபத்ரிகாஸத்தில் ஸ்ரீநரநாராயணர் புனிதஸ்தலம் உள்ளது. ஸ்ரீவேதவ்யாஸ பகவானிடம் ஸ்ரீமதாச்சார்யர்ஸ்ரீமத்வர் இன்றும் வேத அத்யயணம் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இமயம் புனிதமான தவம் செய்யத்தகுந்த பூமியாக இருக்கிறது. அசையாப் பொருட்களில் இமயமலை ரூபமாகக் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : நான் மஹரிஷிகளில் உத்தமனான ப்ருகு மஹரிஷிக்கு நியாமகனாய் ப்ருகு நாமகனாய் ப்ருகு மஹரிஷியில் இருக்கிறேன். வாக்யங்களில் முக்கியமான ஓங்கார ஸப்த ரூபியாய் ஓங்காரத்திலிருக்கிறேன். யக்ஜங்களில் ஸ்ரேஷ்டமான ஜபயக்ஜத்தில், பிறந்தவர்களைக் காப்பதாலும், பூஜ்ஜைக்குரியவனாதனாளும், 'ஜபயஜ்ஞ:' என்னும் பெயருடன் ஜபம் என்னும் யஜ்ஞத்திலிருக்கிறேன். அசையாத பொருள்களில் உத்தமனான இமயமலைக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஆஸ்ரயனாய் இருப்பதால் 'இமயம்' என்ற பெயருடடையவனாய் ஹிமாலத்தில் இருக்கிறேன்-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: ஆயுதம் தரித்தவருள் நான் ராமன். மீன்களுள் மகரம். நதிகளுள் கங்கை நான். படைத்தல், காத்தல் அழித்தல் ஆகியவைகளும் நானே. வாதம் செய்வேரிடத்தில் வாத; என்ற பெயருள்ள ரூபத்துடன் இருக்கிறேன். அக்ஷ்ரங்களுள் நான் 'அ' வாக (அகரம்) உள்ளேன். த்வந்தவம் (அதாவது இருச்சொல் கலவை) நானே. காலம் நானே. நான்முக பிரம்மதேவரிடமும் நானே இருக்கிறேன். ம்ருத்யு, உற்பத்தி, கீர்த்தி, க்ஷேமம், ஞாபக சக்தி, புத்தி, உறுதி, பொறுமை யாவும் நானே. ஸாமங்களிடையே ப்ருஹத்ஸாமம் நான். மந்திரங்களில் காயத்ரீ நான். மாதங்களில் மார்கழியும், ருதுக்களில் வசந்தமும் நானே(ஸ்35). வஞ்சகர்களில் சூடாட்டமும், சக்தியுள்ளவர்களில் சக்தியும் நானே. ஜெயம், விடாமுயற்சியும் நிச்சய புத்தியும் நானே. கூரிய புத்தியுடையவர்களுள் சுக்ராச்சாரியராக இருக்கிறேன். அடக்கியாள்பவரிடம் அடக்கும் சக்தி நான். ஜெயத்தை விரும்புவோர்களின் ராஜநீதி நான். இரகசியங்களில் மெளனம் என்பது நான். ஞானிகளின் ஞானமும் நானே. அர்சுனா! ஸகல பிராணிகளுக்கும் எது வித்தோ அதுவும் நானே. இந்தப் பிரபஞ்சத்தில் நான் இல்லாத இடமில்லை. ஹே! பரந்தபா! என் தெய்வசக்தியை விளக்கும் விபூதிகளுக்கு எல்லையே இல்லை. நான் இப்போது உனக்கு கூறுவது சிலவற்றை மாத்திரமே. இவ்வுலகில் சிறப்புடையதாயும், தேஜஸ் உடையதாயும், சக்தி வாய்ந்ததாயும் உள்ள பொருட்கள் அனைத்தும் என் சக்தியின் அம்சத்தில் தோன்றியது என்று நீ அறிதல் வேண்டும். அர்சுனா! இவ்வாறு பலவற்றை அறிவதால் உனக்கு என்ன பயன்? சுருக்கமாய்ச் சொன்னால்,இவ்வுலகமனைத்தையு என் யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கிறேன்"- 
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 


Monday, January 24, 2011

சாரல் 4 துளி 45 தேதி 06.02.11


கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)
புரோத4ஸாம் ச முக்2யம் மாம் வித்3தி4 பார்த2 ப்ருஹஸ்பதிம்/
ஸோநாநீநாமஹம் ஸ்கந்த3: ஸரஸாமஸ்மி ஸாக3ர:// (அத்.10.ஸ்லோ.24)
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இந்த விபூதி யோகத்தின் மூலம் தனது ரூபங்களின் தத்துவங்களை சிறிதேனும் கோடிட்டுக்காட்டுகிறார். ஆனாலும் பகவானின் விபூதி ரூபங்கள் கணக்கிலடங்காது. தேவர்களுக்கெல்லாம் தலைவன் இந்திரன். தேவேந்திரனின் குரு ப்ருஹஸ்பதி. இவர் அங்கிரஸின் புத்திரர். ஸப்த்த ரிஷிகளில் முக்கியமானவர் இவர். பகவான் வாமன அவதாரம் எடுத்த்போது வாமனராக ப்ருஹஸ்பதியிடம் வேதஸாஸ்த்ரங்களைக் கற்றார். இவருடைய உபதேஸங்கள் சிறப்புபெற்றவையாக உள்ளது. புரோகிதர்களுள் அதிஸ்ரேஷ்டரான ப்ருஹஸ்பதியுள் இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள வெண்டுமாய் உபதேஸிக்கிறார். 
ஸேநாதிபதியர்களுள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் சிறந்தவர் ஸ்கந்தன் அல்லது கார்த்திகேயன். இவருக்கு அனேக பெயர்கள் உண்டு. ஸ்ரீமுருகர் சிவபெருமானின் குமாரர். தேவர்களின் ஸேனைக்கு இவரே அதிபதி. எனவே ஸேனாதிபதியர்களில் ஸ்ரேஷ்டனாக ஸ்கந்தனில் (முருகனாக காட்சிகொடுப்பதாக) இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
உலகில் அனேக நீர்தேக்கங்கள் உள்ளன. இவற்றில் யாவற்றையும்விட சிறந்தது பெரியது ஸமுத்ரமே. எனவே பகவான் நீர் நிலைகளில் ஸமுத்ரம் என்னும் பெயருடைய ரூபமாக இருப்பதாக கூறுகிறார்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : அர்சுனா! புரோஹிதர்களில் உத்தமனான ப்ருஹஸ்பதியாச்சார்யருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு ப்ருஹஸ்பதியில் இருப்பவன் நான் என்று தெரிந்துகொள். ஸேனாதிபதிகளுள் ஸ்ரேஷ்டரான ஸ்கந்தனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டும், இப்பிரபஞ்சத்தை வெளிப்படுத்துவதினால் 'ஸ்கந்த:' என்னும் பெயருடன் ஸ்கந்தனில் இருக்கிறேன். ஸரோவரங்களில் (அதாவது நீர்த்தேக்கங்களில்) சிறந்ததான ஸமுத்ரத்திற்கு நியாமகனாய் ஸமுத்ரனில் இருக்கிறேன். அதாவது ஸாகரத்தை ஸ்வீகாரம் செய்பவனாதலால் 'ஸாகரன்' என்னும் ரூபத்துடன் சமுத்திரத்தில் இருக்கிறேன்-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: "நீரே பரமபுருஷர் என்றும், பரம பவித்ரமான புராண புருஷர் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் ஆதிதைவம், பிறப்பற்றவர், பரமமேஸ்வரர் என்றும் சகல ரிஷிகளும், தேவரிஷியான நாரதரும், அஸித்ர தேவர், வியாஸரேன்றவர்களும் கொண்டாடுகிறார்கள். நீங்களும் அவ்வாறே கூறியுள்ளீர்கள். இதுவரையில் நீர் சொன்னது யாவும் உண்மை என்றே நம்புகிறேன். உங்களின் ஸ்வரூபத்தை தேவர்களும் கூட அறியமுடியவில்லை. நீரே உம்மை அறிவீர். ஹே! புருஷோத்தம ஸகல லோகங்களுக்கும் அதிபதியே! தேவ தேவனே! ஜகத்பதியே! உமது பெருமைகளை ஒன்று விடாமல் எனக்குச் சொல்லும்படி வேண்டுகிறேன். யோகேஸ்வரா! உன்னையே த்யானஞ் செய்துகொண்டு இருக்கிறேன். எந்தெந்த ஸ்வரூபங்களால் நான் உன்னை தியானஞ் செய்ய வேண்டும்? உன்னுடைய யோக சக்தியையும் விபூதியையும் எனக்கு விரிவாக மறுபடியும் கூறுவாயாக. உன் அம்ருதம் போன்ற வார்த்தைகள் எனக்கு போதும் என்ற த்ருப்தியை எப்போதும் அளிப்பதில்லை". இவ்வாறு அர்சுனன் பகவானை ப்ரார்த்தனை செய்து கொள்கிறார். 
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனை நோக்கி (19 to 42) ஹே! அர்சுனா! "நீ இவ்வாறு கேட்டது எனக்கு சந்தோஷம்தான். என் சக்திகளிலும் விபூதிகளிலும் முக்கியமானவைகளை உனக்கு கூறுகிறேன். ஏனென்றால் விஸ்தாரமாகச் சொல்வதற்கு எல்லையே இல்லை. ஸகல ஜீவன்களின் ஹிருதயத்தில் இருக்கிறேன். அவைகளுக்கு ஆதியும் நடுவும் முடிவும் நானே. நானே விஷ்ணு, நானே ஸீர்யன், நானே மரீசி, நட்சத்திரங்களில் சந்திரன் நான். வேதங்களில் ஸாமவேதம் நானே. நான் தேவர்களுள் இந்திரன். இந்திரியங்களுள் மனதாக இருக்கிறேன். பிராணிகளிடத்தில் அறிவாக இருக்கிறேன். பதினோரு ருத்ரர்களுள் சங்கரன் நானே, யக்ஷர்கள் ராக்ஷசர்களுள் குபேரன் நான். நானே அக்னி, மலைகளுள் மேரு. புரோஹிதர்களுள் சிரேஷ்டரான பிருஹஸ்பதி நான். சேனைத் தலைவர்களிடையே முருகன் நான். நீர் நிலைகளிடையே சமுத்திரன் நான். மஹரிஷிகளுள் ப்ருகு நான். ஏகாக்ஷரமான ஓம் எனும் பிரணவம் நான். யக்ஞங்களுள் ஜபமாயிருக்கிறேன். அசையாப் பொருள்களிடையே ஹிமாலய மலையாக இருக்கிறேன். நானே விருக்ஷங்களுள் அரசமரம், தேவரிஷிகளுள் நாரதர், கந்தர்வர்களுள் சித்ரரதன், சித்தர்களில் கபில முனியாக இருக்கிறேன். குதிரைகளில் உச்சைசிரவஸ், யானைகளுள் ஐராவதம், மனிதர்களுள் அரசன் நான். ஆயுதங்களுள் வஜ்ராயுதம் நான். பசுக்களுள் காமதேனு, பிறப்புகளுக்கு காரணமான மன்மதன் நான். ஸர்பங்களுள் வாசுகி. பாம்புகளில் ஆதிசேஷன். ஜலதேவதைகளுள் வருணன் நான். பித்ரு தேவருள் அர்யமன். தண்டிப்பவர்களுள் யமன் நான். நான் தைத்யர்களுள் பிரஹ்லாதன். தர்மபலன்களில் நான் காலதேவதை. மிருகங்களுள் ஸிம்ஹம். பக்ஷிகளுள் கருடன் நான். பரிசுத்தம் செய்யும் பொருளில் நான் வாயு".
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

Thursday, January 20, 2011

சாரல் :4 துளி :44 தேதி :23.01.11

கீதையின் சாரலில்........ விபூதியோகம் (பத்தாவது அத்யாயம்)
ருத்ராணாம் ஸங்கரஸ் சாஸ்மி, வித்தேஸோ யக்ஷரக்ஷஸாம்/ 
வஸூனாம் பாவகஸ்வாஸ்மி, மேரு: ஸிகரிணாமஹம்// (அத்யாயம் 10 ஸ்லோ.23)  
பகவான் தன்னுடைய அதி ஸ்ரேஷ்டமான விபூதி ரூபத்தை மேலும் விவரிக்கிறார். ருத்ர ரூபங்கள் பதின்னொன்று. அவர்களில் மங்களத்தைக் கொடுப்பவரும், தமஸ் குணங்களை நிர்வகிப்பவரும், மனதிற்குச் சாந்தியைக் கொடுப்பவருமான ருத்ர ரூபமாக இருப்பதாகக் கூறுகிறார். ராக்ஷ்ஸர்யகளுக்கும் அரசராக குபேரன் இருக்கிறார். இதில் யக்ஷர்களில் சிறந்தவரும்,ஸம்பத்திற்கு அதிபதியானவருமான குபேரனுள் இருப்பதாகவும் கூறுகிறார். எட்டு விதமான அஷ்ட வசுக்களால் எல்லாவற்றையும் சுத்தி செய்பவனாக இருக்கும் அக்னியில் பாவக என்னும் பெயருள்ளவனாக இருப்பதாகக் கூறுகிறார். நக்ஷத்திரங்களுக்கும், தீவுகளுக்கும் தலைமையகம் மேருபர்வதம். அங்கே நவரத்தினங்களும் குவிந்து கிடக்கிறபடியால் அது மிகவும் ஸ்ரேஷ்டமானது. மலைகளுள் மேருவாக இருக்கிறேன் என்று கூறுகிறார். குறிப்புகள் : (1) ருத்திரர்கள் பதின்னொருவர் யாவர் ? 1. ஹரன் 2. பஹூரூபன் 3. த்ரியம்பகன் 4. அபராஜிதன் 5. வ்ருஷாகபி 6. சம்பு 7. கபர்த்தீ 8. ரைவதன் 9. ம்ருக்வ்யாதன் 10. சர்வன் 11. கபாலி ; இவர்களுள் மங்கள ரூபமாய் மங்களங்களை அளிப்பவர் சம்பு என்னும் சங்கரன். (ஹரிவம்சம் 1.3.51) (2) யக்ஷர்கள் மற்றும் ராக்ஷசர்கள் :- அகஸ்தியர், விச்ரவஸ் என்பவர்கள் பிலஸ்திய ரிஷியின் குமாரர்கள். இவர்களில் விச்ரவஸ்சுக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவியிடம் யக்ஷர்களுக்குப் பதியாகிய குபேரனும், மற்றொரு ராக்ஷஸ மனைவியிடம் ராவணன், கும்பகர்ணன் விபீஷணன் ஆகியோர் புத்ரர்கள் (பாகவதம் 10.10) (3) அஷ்ட வஸூக்கள் :- பிரம்ம புத்ரராகிய தர்மர், தக்ஷன் குமாரியாகிய வசுதேவியிடம் பெற்ற பிள்ளைகள் அஷ்டவஸூக்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் 1. துரோணன் 2. துருவன் 3. அர்க்கன் 4. அக்னி (பாவகன்) 5. தோஷ: 6. வஸூ 7. விபாவஸூ. இந்த அஷ்ட வஸூக்களில் சிறந்தவர் அக்னி.
ஸ்லோகத்தின் உட்கருத்து : பதினோறு ருத்ரர்களுள் உத்தமனான, சுகத்திற்கு காரணமான ஸங்கரன் என்னும் ருத்ரனுக்கு மற்ற ருத்ரர்களைவிட ஸ்ரேஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு ஸங்கரன் என்னும் பெயருடன் ஸங்கரனுள் இருக்கிறேன். யக்ஷர்கள் ராக்ஷசர்களுள் செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு 'வித்தேஸ;' என்னும் பெயருடன் குபேரனுள் இருக்கிறேன். எட்டு வஸூக்களுள் அக்னிக்கு நியாமகனாய் மற்ற வஸூக்களைவிட பாவக என்னும் அக்னிக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டே யாவற்றையும் சுத்தி செய்வதனால் பாவக என்னும் பெயருடன் அக்னியில் இருக்கிறேன். பர்வதங்களுள் (சிகரங்கள் மற்றும் மலைகள்) ஸ்ரேஷ்டமான மேரு பர்வதத்திற்கு நியாமகனாய், என்க்கு ப்ரேரகன் இல்லாததால் மேரு என்ற பெயருள்ள ரூபத்துடன் மேரு மலைக்குள் இருக்கிறேன். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-  
இங்கே ஒரு துளி : (10வது அத்யாயம்) அத்யாயச் சுருக்கம்: ஹே அர்சுனா ! தேவர்களும் ரிஷிகளும் என்னை அறியமாட்டார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஆதி காரணமாய் இருக்கிறேன். நான் பிறப்பற்றவன். ஆதியற்றவன். ஸகல லோகங்களுக்கும் மஹேசுவரன் என்று அறிகிறவன் ஸகல பாபங்களிலிருந்து விடுபடுகிறான். புத்தி, ஞானம், மோஹமின்மை, பொறுமை, அகிம்சை, சமயுத்தி, திருப்தி, தவம், தானம், கீர்த்தி, அகீர்த்தி போன்ற பாவங்கள் என்னிடமிருந்தே உண்டாகின்றன. ஏழு மஹரிஷியர்களும், ஸனகர் முதலிய நான்கு குமாரர்களும் 14 மனுக்களும் என் மன ஸங்கல்பத்தால் உண்டானவர்கள். அவர்களிடமிருந்து இந்த உலகமும் ப்ரஜைகளும் உண்டானார்கள். இந்த என் மகிமையையும் சக்தியையும் உண்மையாய் அறிபவன் ஒரு சிறந்த பக்திமான். இதில் சந்தேகமில்லை. என்னை நன்றாக அறிந்துகொண்ட பக்தர்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் நானே என்றும்:என்னிடமிருந்தே அனைத்துலகும் தோன்றியது என்றும் அறிந்து உபாஸிக்கிறார்கள். என்னிடத்திலேயே சிந்தனையை வைத்து ஸ்திரமாக உபாஸனை செய்வோருக்கு என்னை அடையும் புத்தியையும் ஞானத்தையும் அவர்களுக்கு நானே அளிக்கிறேன். இறுதியில் அவர்களுடைய அக்ஞானத்தை ஞான தீபத்தால் நானே நாசஞ்செய்கிறேன். இவ்வாறு (1 to 10 ) பகவான் அர்சுனனுக்கு உபதேஸித்ததை தொடர்ந்து அர்சுனன் கீழ்வருமாறு கூறுகிறார் (12 to18) 
இன்னும் ஒரு துளி: தனக்கும், பரம்பொருளுக்கும் இடையே உள்ள வித்யாசத்தை அறிந்து கொள்ளாதவன், மற்றும் தன்னையே பரம்பொருளுடன் ஒப்பிட்டுக் கொடுப்பவன், இம்மாதிரியான சிந்தனையிருந்து, பரம்பொருளின் உண்மையான அறிவு பெறப்படுவதில்லை, ஜீவனும், பிரம்மனும் எதிரெதிரான குணங்களைக் கொண்டிருப்பதனால் வேறானவர்கள். அவர்களே அபேதம் என்று அறியும் அறிவானது தவறான அறிவாகும். இந்த மாறுபட்ட குணங்களே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (காடகோபநிஷத் பாகம் 2 ஸ்லோகம் 9 சாரல் 04 துளி 01 லிருந்து) 
தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் / 
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //
 

Monday, January 10, 2011

சாரல் 4 துளி 43 தேதி 16.01.11

2011ஆராதனை ஸ்பெஷல்
ஸ்ரீ1008ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகள்

 வசுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்/
 தேவகீ பரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்//


 பாவபோதக்ருதம் ஸேவே ரகூத்தும மஹாகுரும்/ 
 யச்சிஷ்ய சிஷ்யாத்யா: டிப்பண்யாசார்ய ஸம்ஞிதா://

 ஸ்ரீஸத்யா பிக்ஜ்ஞ கராப்ஜோத்கான் பஞ்சாஸத் வர்ஷ பூஜகான்/    ஸத்யப்ரமோத தீர்த்தார்யான் நெளமி ந்யாய ஸுதாரதான்//


ஸ்ரீஹரி ஸர்வோத்தம தத்துவத்தை உலகினுக்கு எடுத்துரைத்து, மனிதனின் ஆனந்தத்திற்கும் முக்திக்கும் நேரானதொரு வழியினைக் காட்டி அருளிச் செய்த, ஸ்ரீமதாந்த தீர்த்தரெனும் ஸ்ரீமத்வாச்சார்யரின் மூல ஸமஸ்தானமான ஸ்ரீஉத்ராதி மடத்தின் 41வது பீடாதிபத்யத்தை அலங்கரித்து, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஸன்யாஸ தர்மத்தை கடைபிடித்து, வேதாந்த ஸாம்ராஜ்யத்தில் மூழ்கி, ஸ்ரீடீகாச்சார்யரின் ஸ்ரீநியாய சுதாவின் ஸாராம்ஸங்களை நித்யமும் போதனை செய்து, தமது குருவான ஸ்ரீஸத்யா பிக்ஞரின்பால் குருபக்தியும் ஸ்ரீஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளின் மீது அனன்யபக்தியும் ப்ரீத்தியும்கொண்டு, தமது சித்தாந்தத்தை த்வ்யமான முறையில் மிளிரச் செய்தவரும், ஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளின் ப்ருந்தாவனத்திற்கு அருகிலேயே தானும் ப்ருந்தாவனஸ்தராய் அமர்ந்து ஸ்ரீகுருவிற்கு ஸேவை செய்து வருபவருமான ஸ்ரீ1008ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகளின் காலம் வேதாந்த ஸாம்ராஜ்யத்தின் பொற்காலம் என்றே சொல்லப்படுகிறது.

ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகள் குத்தல் ஸ்ரீரங்காச்சார்யருக்கும் கமலாதேவி அம்மையாருக்கும் கர்நாடக மாநிலம் வரதா நதிக்கரையில் அமைந்துள்ள கர்ஜகி என்னும் கிராமத்தில் காளயுக்த்தி ஸம்வஸ்ர பாத்ரபத மாஸ கிருஷ்ணபக்ஷ பஞ்சமி திதியன்று குருராஜா என்னும் நாமகரணப்பெயருடன் இருபதாம் நூற்றாண்டின் (1948-1997) பிற் பகுதியின் நியாமகனாய், வேத வேதாந்த ஸாஸ்த்ரங்களின் எதிரொளியாய், மாத்வ சமுதாய மக்களிடையே அக்ஞானம் எனும் இருளை நீக்கவும், ஞான ஒளியை ஏற்றவும், ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சார்யர் ஆரம்பித்த ஸமஸ்தானத்தை அலங்கரிக்கவும் பிறந்தார் என்றே சொல்லவேண்டும்.

ஸ்ரீஸத்ய த்யான தீர்த்த (1911-1942) ஸ்வாமிகள் தனக்கு வயதானபடியால் ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்த (1942-1945) ஸ்வாமிகளை ஸ்ரீமடத்தின் பீடாதிபதியாக நியமித்தார். ஸ்ரீஸத்ய த்யான தீர்த்தர் வேத, வேதாந்தங்களில் மிகவும் திறமைபெற்ற மஹான். இவரிடம் சீடராக இருந்து ஸாஸ்த்ரங்களைக் கற்றவர் ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தர். ஸ்ரீகுருராஜ ஆச்சார் ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தரிடம் "நியாயா" மற்றும் வேதாந்தங்களை கற்றார். ஸ்ரீகுருராஜ ஆச்சார்(பூர்வாஸ்ரம பெயர்) "சுதா மங்களத்தை" பண்டரிபுரத்திலும் மல்கேடாவிலும் பூர்த்திசெய்தார். பிறகு ஸாஸ்த்ரங்களை (தர்க்கா, வ்யாகர்னா) மைசூரில் தாராபுரம் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி ஆச்சாரிடம் கற்றார். சென்னை அரசாங்கத்தால் நடத்தப்படும் தர்க்கசிரோமணி (Tarkashiromani) என்னும் தேர்வில் முதல் மாணவராக மிக அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சிபெற்றார்.

ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தர், ஸ்ரீகுருராஜ ஆச்சார்யரின் திறமையை மெச்சி, தனது சகோதரியின் மகளான ஸ்ரீமந்தாகினி என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். ஸ்ரீஸத்ய ப்ரக்ஞ தீர்த்தர் கூசனூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடேசாச்சார் என்பவருக்கு ஸ்ரீஸத்யா பிக்ஞர் தீர்த்தர் (1945-48) என்ற பட்டப்பெயருடன் ஸ்ரீமடத்தின் 40வது பீடாதிபத்யத்தைக் கொடுத்து, சைத்ர, சுத்த துவிதியை திதியில் ஆத்கூரில் ப்ருந்தாவனஸ்தாரானார். ஸ்ரீஸத்யா பிக்ஞர் தீர்த்த ஸ்வாமிகள் குத்தல் ஸ்ரீரங்காச்சார்யரின் குமாரரான ஸ்ரீகுருராஜ ஆச்சாருக்கு 02.02.1948 அன்று ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்தர் (28 வயதில்) என்னும் ஆஸ்ரமப் பெயருடன் ஸ்ரீஉத்ராதி மடத்தின் 41வது பீடாதிபத்யத்தை அருளிச்செய்தார். பிறகு ஸ்ரீஸத்யா பிக்ஞர் தீர்த்தர் புஷ்ய பகுள அஷ்டமி திதியன்று ராணேபெண்ணூர் என்னுமிடத்தில் ப்ருந்தாவனஸ்தரானார்.

ஸ்வாமிஜி ஸ்ரீமடத்தின் பீடத்தை ஏற்ற சமயம், நாடு சுதந்தரமடைந்து சில மாதங்களே முடிவடைந்த சமயம், ஸ்ரீமடம் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றிருந்தது. இச்சூழ்நிலையில், வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வேத ஸாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களை பிரசாரம் செய்ய போதிய வாகன வசதி இல்லாத காலமாக இருந்தது. இவ்வாறான நிலையில் ஸ்வாமிகள் ஸ்ரீமடத்தின் பீடத்தை ஏற்று ஸ்ரீஹரியின் மீது அசைக்க முடியாத பக்தியை வைத்தவராய், பாரதநாட்டின் வடகோடியிலிருந்து தென்கோடிவரை அங்காங்கே ஸஞ்சாரம் செய்து ஸ்ரீமதாசார்யரின் போதனைகளை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

ஸ்வாமிஜி அனேகமாக ஸ்ரீடீகாச்சார்யரின் "ஸ்ரீநியாய சுதா" விற்கு மிகவும் முக்கியத்துவம்கொடுத்து நித்யமும் பாராயணம் செய்ததுடன் சிறப்பான போதனைகளைச் செய்தார். ஸ்வாமிஜியின் போதனைகளில் முக்கியமான உபதேஸமாக ஸ்ரீஹரி ஸ்மரண, சந்தியாவந்தனம், காயத்ரிஜபம், சாலிகிராம ஸ்பர்ஷம், ஏகாதசி உபவாசம் மற்றும் ஸ்ரீமதாச்சார்யரின் க்ரந்தங்கள் பாராயணம் ஆகியவற்றை அடிக்கடி நினைவுபடுத்துவதாகவே இருந்தது. 

ஸ்வாமிஜியின் காலத்தில் ஸ்ரீமடம் பொருளாதரத்தில் வலுவடைந்தது. பக்தர்கள் ஸ்ரீகுரு பக்தியுடன் பொன்னும் பொருளும் சமர்ப்பித்தார்கள். ஆங்காங்கே நலிந்த நிலையிலிருந்த மடங்களெல்லாம் புதிய கட்டிடங்களுடனும் விஷேச பூஜைகளுடனும் புதுப்பொலிவுடன் நிவர்த்திபெற்றது. ஸ்வாமிஜி ஸ்ரீடீகாச்சார்யரின்  ஸந்நிதானத்தில் ஸ்ரீமதாச்சார்யரின் விக்ரஹங்களின் முன்னிலையில் சுமார் மூன்று மாதங்கள்  ஸர்வ மூல க்ரந்தங்களை போதனை செய்தார்கள். பிறகு ராஜகோபாலபுரத்தில் விக்ரஹங்களின் முன்னிலையில் எட்டு நாட்களில் 'மஹாபாரதத்தின்' ஒரு லட்சம் ஸ்லோகங்களை சப்தமுடன் பாராயணம் செய்தார்கள். ஸ்ரீப்த்ரிநாத் சென்று, அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஸ்ரீபத்ரிநாராயணரின் முன் அமர்ந்து ஸ்ரீமூலராமர் பூஜை செய்து, 'ப்ரம்ம சூத்ர பாஷ்யம்' மற்றும் 'ஸ்ரீகீதா பாஷ்யம்' ஆகியவைகளை முழுவதுமாக போதனைசெய்தார்கள். ஸ்வாமிஜி ஒருசமயம் ஸோன் என்னும் ஊரில் கோதவரி நதியில் நீரில் மூழ்கி ஸ்நானம் செய்து ம்ருத்திகா எடுத்தபோது ஸ்ரீகோபாலகிருஷ்ண ஸ்வர்ண விக்ரஹம் ஸ்வாமிஜியின் கையில் கிடைத்தது. அவ்விக்ரஹம் இன்றும் ஸ்ரீமடத்தில் பூஜை செய்யப்பட்டுவருகிறது. ஸ்வாமிஜி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு முக்கிய ஸ்தலங்களுக்குச் சென்று சாதூர் மாஸ்ய வ்ரதங்களை முறையாக அனுஷ்டித்தார்கள். 

ஸ்வாமிஜி அவர்கள் அனேக படைப்புக்களைக் கொடுத்திருக்கிறார்கள். 1. ஸ்ரீமந்நியாயசுதா மண்டனம் 2. யுக்திமல்லிகா விவ்ரித்தி 3. வைஷ்ணவ ஸித்தாந்தார்ஜவ 4. ஸ்ரீவிஜயீந்த்ர விஜய வைபவ 5. பாகவத நிர்தோஷாட்வ லக்ஷண 6. வாயுஸ்ருதி மண்டன 7. ப்ரம்ம ஸுத்ர ஸங்க்ரஹ போன்றவைகள் புத்தகங்களாக ஸ்ரீமடத்தின் சார்பில் மும்பையிலுள்ள ஸ்ரீஸத்யத்யான வித்யாபீடம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வாமிஜி அவர்கள் மேலும் துண்டுபிரசுரங்களாக சுமார் 40 பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்கள். அதில் முக்கியமானதாக 1. வனமாலி மிிஸ்ரா 2. ஸ்ரீபத்மநாப தீர்த்தா 3. நரஹரி தீர்த்தா மற்றும் அக்ஷசேப தீர்த்தா 4. ரிக்பாஷ்யா 4. தத்வபிரகாஷிகா 5. ஸ்ரீராகவேந்திர தீர்த்தரின் தத்வப்ராசிகா டிப்பணி 6. வாக்யார்த்தரத்னமாலா போன்றவைகள் பிரசித்தமானது.

ஸ்வாமிஜி ஸன்யாச ஆஸ்ரமத்தை அனுஷ்டித்த ஐம்பது ஆண்டுகளில் அனேக வியக்கத்தகுந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஸ்வாமிஜியை பக்தியுடன் சரணடைந்து ஸேவித்த அனேக பக்தர்கள் தங்கள் குறைகள் நீங்கி க்ஷேமமுடன் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஸ்வாமிஜி பீடத்திலிருக்கும்போதே தன் பீடத்திற்கு அதிபதியாய் பிரம்மச்சாரியான 24 வயதே நிரம்பிய ஸ்ரீஸர்வக்ஞ ஆச்சார் குத்தல் என்னும் ஒரு வேதவித்தகரைத் தேர்ந்தெடுத்து 24.4.96 அன்று திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் ஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளின் ஸந்நிதியில் ஸன்யாசம்கொடுத்து ஸ்ரீஸத்யாத்ம தீர்த்தர் என்ற பட்டப்பெயர் கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்தர் இப்பூவுலகில் பகவானின் ஸேவையையும ஸ்ரீமத்வ ஸேவையையும் இனிதே முடித்துக்கொண்டு 3.11.97 அன்று ஸ்ரீஹரிபாத ஸன்னிதியை அடைந்து மண்ம்பூண்டியில் ப்ருந்தாவனஸ்தராக இருந்து நமக்கு அருள்பாவிக்கிறார். ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமியின் ஆராதனை திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி கிராமத்தில் பிணாகினி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரகூத்தம ஸ்வாமிகளின் ஸந்நிதானத்தில் கார்த்திகா சுத்த த்வ்ய திருதியை அன்று விமர்சியாக ஆண்டுதோரும் நடைபெறுகிறது.

ஸ்ரீஸ்ரீரகூத்தம தீர்த்த ஸ்வாமிகளுடனான ஸ்ரீஸத்ய ப்ரமோத தீர்த்த ஸ்வாமிகளை பக்தியுடன் ஸேவை செய்வோருக்கு குறைகளை நிவர்த்தி செய்வதுடன் அருளும் ஆசியும் வழங்குகிறார் என்பதில் ஐயமில்லை. 

எய்ரஹம் ஸுகவத் ஸம்யக் ஷிக்ஷத் தோத்ஸ்மி க்ருபாலுபி:/ ஸு
தான் வந்தே ஸத் ப்ரமோதார்யான் ஸதா வித்யா குருந் மம//

இப்படைப்பினை ஸ்ரீ1008ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்வாமிகளின் பாதங்களில் பணிவுடனும் பக்தியுடனும் சமர்பணம் செய்துகொள்கிறேன்.

                                                  -/ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து/-

குறிப்பு : இப்படைப்பிற்கு மேற்பார்வையில் உதவிய சிறுகிராமம் துக்காஜி ஸ்ரீகுண்டாச்சார் அவர்களுக்கும், மணம்பூண்டி ஸ்ரீரகூத்தம் ஸ்வாமி மடத்தின் பூஜகர் ஸ்ரீமுரளி ஆச்சார் அவர்களுக்கும் எனது நன்றியுடன் கூடியதான நமஸ்காரங்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே//

Tuesday, January 4, 2011

சாரல் :4: துளி:42 நாள்: 09.01.11

கீதையின் சாரலில் ,, விபூதியோகம் (10வது அத்யாயம்)
வேதாநாம் ஸாமவேதோSஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:/
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா//
(அத்யாம் 10 ஸ்லோகம் 22)       
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனுக்கு தன்னுடைய விபூதி ரூபங்களின் தத்துவத்தை விஸ்தாரமாகக் கூறும் ஸ்லோகங்களின் தொடர்ச்சியாக இச்ஸ்லோகத்தில் "வேதங்களில் நான் ஸாம வேதமாக இருக்கிறேன்" என்று கூறுகிறார். வேதங்கள் ருக், யஜூஸ், ஸாம மற்றும் அதர்வண என்று நான்காகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஸாம வேதம் என்பது இசையுடன் கூடிய மந்திரங்களைக் கொண்டது. ரிக் வேதத்தின் அனேக மந்திரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ரிக்கும், ஸாம வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ரிக்வேதம் ஞானத்தைக் கொடுக்கிறது ; அதேசமயம் ஸாமவேதம் விழிப்புணர்வுடன் கூடிய ஞானத்தைக் கொடுக்கிறது. ஸாம வேதம் 1875 மந்திரங்களைக் கொண்டது. இது இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் 1. பூர்வசிக 650 மந்திரங்களுடனும் 2. உத்திரசிக 1225 மந்திரங்களுடனும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பூர்வசிக நான்கு காண்டமாகப் பிரிந்து முறையே அக்னெய, ஐன்ற, பவமன, அரன்ய காண்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. உத்ரசிக 21 அத்யாயமாக விரிவடைகிறது. ஸாம வேதம் சங்கீதத்துடன் கூடிய சப்தங்களாக உச்சரிக்கப்படுவதுடன், இது ரிஷிகளுக்கான விதிமுறைகளைச் சொல்வதாகவும் உள்ளது. இம்மந்திரங்கள் கூர்ந்து நோக்கும் உணர்வையும், என்றும் அழியா அமைதியையும், தன்நம்பிக்கையுடன் கூடிய விழிப்புணர்வையும் மிகவும் நியர்த்தியாகவும் விசேஷமாகவும் கொடுக்கவல்லது. வேதங்களில் ரிக்வேதம் முதன்மைப்பெற்றதென்றாலும், ஸாமவேதம் வேதங்களின் வரிசையில் ஒரே இனத்தைச் சேர்ந்தது என்பதால் ஸஜாதீய ஏகதேச விபூதியாக விவரிக்கப்படுகிறது. எனவே பகவான் வேதங்களில் ஸாம வேதமாக இருக்கிறேன் என்று கூறுவதாகப் பார்க்கிறோம். மேலும் தேவதைகளில் ஸ்ரேஷ்டரான இந்திரனுக்கு நியாமகனாய் மற்ற தேவதைகளைவிட வாஸவ: என்னும் பெயருடன் இந்திரனில் இருப்பதாகவும் ; இந்திரியங்களில் உத்தமனான மனதிற்கு நியாமகனாய் 'மனதில்' இருப்பதாகவும்; பிராணிகளின் அதிக ஸ்மரண சக்திக்கு நியாமகனாய் சேதனன் என்ற பெயருடன் சேதனத்தில் இருப்பதாகவு கூறுகிறார்.
ஸ்லோகத்தின் உட்கருத்து : "வேதங்களுள் நான் ஸாம வேதத்திற்கு நியாமகனாய் மற்ற வேதங்களைவிட ஸாம வேதத்திற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, எதிலும் ஸமமாகவும், யாவற்றையும் அறிந்தவனாகவும் ஸாம வேத என்னும் பெயருடையவனாய் ஸாம வேதத்தில் இருக்கிறேன். அந்நிய தேவதைகளை விட இந்திரனுக்கு நியாமகனாய் முக்கியத்துவத்தைக்கொடுத்துக்கொண்டு ஸ்ரேஷ்டனாய் இந்திரனுள் இருக்கிறேன். இந்திரியங்களுள் மற்ற இந்திரியங்களை விட மனதிற்கு ஆதிக்கத்தைக் கொடுத்துக்கொண்டு, ஞானரூபனாய், மனஸ் ஸப்தவாச்யனாய் மனதில் இருக்கிறேன். பிராணிகளிடம் ஞானத்தைக் கொடுக்க் கூடிய அறிவாய் நான் இருக்கிறேன். -பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : எவன் ஒருவன் எதையும் எதிர்பார்க்காது, அகபுறத்தூய்மையுடன், பிறவிப்பயனை அறிந்து, துக்கம், அஹங்காரம் நீக்கியவனோ அவன் எனக்கு பிரியமானவன்(XII-16) மகிழ்ச்சி, வெறுப்பு, துயரம், ஆசை நீக்கி நல்லது தீயதைத் துறந்த யாவரும் எனக்கு மிகவும் பிரியமானவன்(XII-17) எவன் ஒருவன் நண்பன், பகைவன், மானபமானம், தட்பவெப்பம், சுகதுக்கங்களில் ஸமபாவபுத்தியுடையவனோ அவனும்(XII-18) இகழ்ச்சி, புகழ்ச்சி ஸமமாக பாவித்து, வீண்வார்த்தையாடபாமல், எது கிடைத்தும் பகவானின் இச்சையே என்று எப்போதும் சிந்தித்து பற்றற்று நிலைத்த புத்தியுள்ளவனோ அவனே எனக்கு பிரியமானவன்(XII-19) எவன் ஒருவன் என்னிடம் நம்பிக்கை வைத்து நானே ஸர்வோத்தமன் என்ற ஞானம் பெற்று மேற்சொன்ன தர்மத்தை கடைபிடிக்கிறார்களோ அந்த பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்(XII-20)
கவான் என்பவர் யார்? செல்வம், புகழ், பலம், அழகு, அறிவு, தியாகம் இவற்றை பூர்ணமாகக் கொண்டுள்ள முழுமுதல் நபர் பகவான் எனப்படுகிறார்.
பரத்துடன் இணைப்பது யோகம். இகத்துடன் இணைப்பது காமம்.
பத்து பூதங்களால் உண்டான இந்த சரீரம் காலத்திற்கும், கர்மத்திற்கும் வசப்பட்டது. ஆகையால் நம்முடைய சரீரமே அழியும் தன்மையுடையது, மலைப்பாம்பின் வாயில் அகப்பட்டவனால் எப்படி மற்றவனைக் காக்க முடியாதோ அது போல நாம் பிறரை காப்பாற்றுவது என்பது சாத்தியமில்லை(ஸ்ரீமத் பாகவதம்)
வேதங்களால் விதிக்கப்பட்டதே தர்மம் அதனால் விலக்கப்பட்டதே அதர்மம். வேதமென்பது சாக்ஷ்சாத் நாராயணனே. தானாக உண்டானது. ஒருவறாலும் செய்யப்பட்டது அல்ல. வேதத்தை அனுசரித்து மேன்மைபெறலாம்.

சாரல் :4: துளி:41 நாள்: 02.01.11

புத்தாண்டில் ஆனந்தம் பரமானந்தம்
        சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனின் ஸ்வரூபமே ஆனந்தம் என்று வேத ஸப்தங்கள் சொல்கிறது.
ஆனந்தோ ப்ரஹ்மே திவ்ய ஜானாத்/ 
 ஆனந்தாத் தேவ கல்விமானி பூதானி நிஜாயந்தே//
ஆனந்தே நஜாதானி நிஜீவந்தி / 
 ஆனந்தம் ப்ரயம் ஜவிஸம் விசந்தீதி//
        உலகில் காணப்படும் எல்லாப்பொருட்களும் ஆனந்தமயமான ப்ரம்மத்தைத் தவிர வேறானதொன்றுமில்லை என்று வேதங்கள் நமக்கு தெரிவிக்கிறது. எல்லா ஜீவகோடிகளும் அந்த ஆனந்தத்திலிருந்தே வந்திருக்கிறார்கள். அதனாலே எல்லோருக்கும் அந்த ஆனந்தத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் ஆனந்தம் எது என்று வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம். உலகில் சிறிய ஜீவனான எறும்பிலிருந்து அனைத்து ஜீவன்களைப் படைக்கும் பெரிய ஜீவனான ஸ்ரீப்ரம்மா வரையிலான அனைத்து ஜீவன்களும் ஆனந்தத்தை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜீவன்களும் ஏதோ ஒரு இச்சையை உத்தேஸித்தே ஜீவிக்கின்றன. எல்லா ஜீவன்களுக்கும் சந்தோஷம் அல்லது ஸுகம் என்பது முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. மனிதன் இந்திரியங்களால் சுகங்களை அனுபவிக்கிறான். அதாவது கண்களால் அழகான காட்சிகளைப் பார்க்கும்போதும், காதுகளால் இனிய இசையைக் கேட்கும்போதும், வாயால் சுவையான பதார்த்னதங்களைச் சுவைக்கும்போதும், மூக்கால் மகரந்தமான வாசனையை நுகரும்போதும் மகிழ்ச்சியடைந்து சுகத்தை அனுபவிக்கிறான். இவ்வாறு எல்லா இந்திரியங்களினாலும் தற்காலிகமான சுகங்களை அனுபவிக்கிறான். அவன் அனுபவிக்கும் சுகத்திற்கு ஒரு எல்லை யுண்டு. சுகத்தை அனுபவித்தப் பிறகு துக்கம் என்பது அவனைத் தொடர்கிறது. இந்தச் சுகத்தையும் துக்கத்தையும் மாறிமாறி அனுபவிக்க நேர்கிறது. அவனுக்கு சுகம் கிடைக்கும்போது சந்தோஷமடைந்து அதுவே ஆனந்தம் என்று நினைக்கிறான். ஒரு சிந்தாமணியோ, ஒரு கல்பகவிருக்ஷமோ கிடைத்தால் கூட ஒருவன் நினைத்ததைப் பெறமுடியும். ஆனால் அவனால் உண்மையான ஆனந்தத்தை பெற இயலாது. மனிதன் ஆனந்தத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பகவான் இந்த உலகத்தைப் படைகிகிறார். இதை வேதம் "ஆனந்த அத்யேவயதேஷ ஆகாஸ ஆனந்தோ தஸ்யாத" என்பதாகக் கூறுகிறது. இதற்கு ஸ்ரீமதாச்சார்யர் விளக்கம் கொடுக்கும் போது "ஆனந்தோத்ரேக: கருணாபூர்ணவரப்ரத" என்று சொல்கிறார். அதாவது பகவானின் விஸ்த்தாரமான ஸம நோக்குடன் கூடியதான மனமும், தனிச் சிறப்புடன் கூடியதான கருணையும், ஜீவன்களைப் படைத்து ஆனந்தத்தை அறியவைத்து முக்திக்கு வழிவகுக்கவும் ஸ்ருஷ்டி மேற்கொள்ளப்படுவதாக அறிகிறோம்.
ஆனந்தமயமான ஸ்ரீமந்நாராயணனின் ஸ்வரூபத்தை அறிய ஒருவன் எத்தனையோ கோடி ஜன்மங்கள் எடுத்து ஸாதனைகள் புரியவேண்டும். இந்த ஸாதனைகளில் இரண்டுவிதமுண்டு. ஒன்று, ஒருவன் தன்னிச்சையாக, ஞானவைராக்ய்ய பக்தியுடன் அமர்ந்து தவம் செய்து, பகவானை அறிய முற்படுவது. இதற்கு உதாரணமாக ஸ்ரீபீஷ்மாச்சார்யரைச் சொல்லலாம். மற்றொன்று யதார்த்த பக்தியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பகவானை அறிந்துகொள்வது. இதற்கு கோபியர்களை உதாரணமாக மேற்கோள்காட்டலாம். ஒவ்வொருவரும் தம் ஹிருதயத்தில் வாமனரூபியாக அமர்ந்திருக்கும் பரமாத்மனை அறிந்துகொள்வதே ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடியது.
               இறைவன் கண்ணுக்கு தெரியாத அந்தர்யாமியாக இருக்கிறார். எனவே அவரை தெரிந்துகொள்வது என்பது ஒரு தனி மனிதனாக முயற்சிப்பது ஸாத்யமன்று. ஆனால் ஒரு குரு பிரத்யக்ஷயமாக கண்ணுக்கு புலப்படும்படியாக இருக்கிறார். ஒருவன் ஒரு குருவை ஆஸ்ரயித்தே பரமாத்மாவை தெரிந்துகொண்டு ஆனந்தம் எது என்பதை அறியமுடியும். இது யோக்யமான ஸ்ரீகுருகளின் மூலமே ஸாத்யமாகிறது.
         வாசக பக்தர்களுக்கு இந்த 2011ஆம் ஆண்டு ஆனந்தமாக அமைய   நித்யமும் ஞான, வைராக்ய, பக்தி சிந்தனையுடன் ஹரி ஸர்வோத்தம தத்துவத்தை போதனை செய்துகொண்டிருக்கின்றவரும் ஸ்ரீஉத்ராதி மடத்தின் பீடாதிபத்யத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பவருமான ஸ்ரீ1008ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த குருகளின் பாதார விந்தங்களைச் சரணடைந்து
மோத3 தீர்த்தகராப்ஜோத் தஸத்யாத்மயதி ஸேகரம்/ 
 நமாமி அனிஷம் ப4க்த்யா தத்வஞானார்த ஸித்த4யே//
என்பதாக த்யானித்து இந்தப் புத்தாண்டில் ஞானமும் வைராக்கியமும் பக்தியும் வளர்ந்து ஆரோக்யமும், ஐஸ்வர்யமும் பெறுக ஸ்ரீகுருகளவர்களை ஆஸ்ரயித்து நமஸ்கரித்து சரணடைகிறேன். /ஸ்ரீக்ருஷ்ணார்பணமஸ்து/ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்