Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, July 15, 2011

சாரல் 05 துளி 12 தேதி 12.06.11

விருஷ்ணீநாம் வாஸூ​தே3​வோ sஸ்மி பாண்ட3வாநாம் த4நஞ்ஜய:/        
முநீநாமப்யஹம் வ்யாஸ கவீநாமுஸநா கவி:// (அத் 10 ஸ்​லோ 37)

 “வ்ருஷ்ணீ வம்ஸத்தில் வாசு​தேவன் நான், பாண்டவர்களில் அர்சுனனாகிய நீயும் நான், முனிவர்களுள் வ்யாஸர் நான், இந்திரியங்களுக்கு எட்டாத விஷயங்க​ளை ஞான திருஷ்டியால் அறிபவர்களுள் சுக்ராச்சார்யர் நான்                                                                                                                             
யாதவர்களில் வாசு​தேவனின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணன் பகவானின் சாக்ஷாத்ரூபம்.  பகவானும் பகவானின் அவதார ரூபமும் ஒன்​றே.  மூல முதற்கடவுளான ஸ்ரீமந்நாராயணனான பகவா​னே ஸ்ரீகிருஷ்ணராக அவதார​மெடுத்திருக்கிறார் என்று இங்​கே பகவானால் ​சொல்லப்படுகிறது.  அவதார ரூபத்திற்கும்மூலரூபத்திற்கும்​வேறுபாடு இல்​லை. பாண்டவர்களுள் யுதிஷ்ர மகாராஜா மிகப்​பெரியவர்.  யாரிடமும் குற்றம் கு​றை காணாத அர்சுனன் பகவானின் அன்புக்கு பாத்திரரானவர்.  பகவானின் சிறந்த பக்தர்.  பகவானுக்கு ​​நெறுங்கிய நண்பர்.  என​வே அர்சுன​னை பகவானின் ஸ்வரூபம் என்கிறார்.  ​வேதவ்யாஸ பகவான் முனிகளில் சிறந்தவர்.  ​வேதங்க​ளைப் பாகுபாடு ​செய்தவர்.  மஹாபாரதம் புராணங்கள் ​போன்ற பகவானின் லீ​லைக​ளை ​தெரிவிக்கும் சாஸ்த்ரங்க​ளை இயற்றியவர்.  பகவான் வ்யாஸ​ரை தன் ஸ்வரூபம் என்கிறார்.  சுக்ராச்சார்யர் ப்ருகு குலத்தின் த​லைவர்.  சிறந்த கவிஞானம் ​பெற்றவர்.  ஸஞ்ஜீவனி வித்​யை​யை அறிந்தவர்.  கவிகளில் சிறந்தவர்.  முக்கியமானவர்.  என​வே பகவான் இவ​ரை தன் ஸ்வரூபம் என்றுக் கூறுகிறார்.        ஸ்​லோகத்தின் உட்கருத்து  “வ்ஷ்ணி வம்ஸமான யாதவ வம்ஸத்தில் வசு​தேவரின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணனாக (ஸாக்ஷாத் ரூபமாக) இருக்கி​றேன்.  பாண்டவர்களி​டை​யே உத்தமனான அர்சுனனுக்கு நியாமகனாய், ​செல்வங்க​ளை ​ஜெயிப்பவனா​கையால் தனஞ்​ஜெய என்ற ஸப்தவாச்யனாய் அர்சுனனில் இருப்பவன்.  முனிகளில் ​வேதவ்யாஸர் நா​னே (ஸாக்ஷாத் ரூபம்).  கவிகளுள் ஸ்​ரேஷ்டரான சுக்ராச்சாருக்கு ஆதிக்கத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு உஸனஸ் ஸப்த வாச்யனாய் கவியிலிருப்பவன் நா​னே. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-  
இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 9) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)   இ​தைத் ​தொடர்ந்து, ஒருநாள், அச்சுதப்​ரோக்ஷரின் நண்பரும் சன்யாசியுமான ஒருவர் அனுமான ஸாஸ்த்ரத்தில் சிறந்த பாண்டித்யம் ​பெற்று அகங்காரத்துடன் தனது சீடர்கள் சிலருடன் பஞ்சாயவாக்யம் என்னும் தத்துவத்​தை பிர​யோகித்து ஜீவ பரமாத்மா ​பேதத்​தை அனுமானத்தா​லே எளிதில் நிரூபிக்க முடியும் என்று கூறி ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார்.  ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள், அனுமானத்​தை மட்டு​மே ஆதாரமாகக்​கொண்டு நிரூபிக்கும் முயற்சியில் ஏற்படுகின்ற ​தோஷங்க​ளை விளக்கி, ஆகமங்களின் து​ணையும் அவசியம் என்ப​தை எடுத்துக்காட்டினார்.   ஸ்ரீமதாச்சார்யரின் வாதத்​தை மறுக்க முடியாத அச்சீடர்கள், உட​னே இவ்வுலகம் சிப்பியால் ​தோன்றும் ​வெளிளி​யைப் ​போன்றது ​பொய்யானது என்றனர்.  அதற்கு ஸ்ரீமதாச்சார்யர்​ரோ, இவ்வுலகம் நம் முன்​னே ​தோன்றும் (பிரத்யக்ஷ்யமாக) ​பானை மற்றப் ​பொருள்க​ளைப் ​போன்று (இவ்வுலகம்) சத்யமானது என்றார். சீடர்கள்:  தாங்கள் கூறிய பி​ரத்யக்ஷம் என்னும் வாதத்தால் அதிவியாப்தி ​தோஷம் இருப்பதாகக் கூறினார், அதாவது, கண்ணால் காண்ப​தெல்லாம் உண்​மை (சத்யம்) என்றால் சிப்பியில் ​வெள்ளி இருப்பது உண்​மையாகிறது.     ஸ்ரீமதாச்சார்யர்: சிப்பியில் ​வெள்ளியாகத் ​தோற்றமளித்த​தே ஒழிய அது அறியத்தக்கது அல்ல​வே.   ஏ​னென்றால் அது இல்லாத ஒன்று.  அந்த சிப்பியில் ​வெள்ளி என்ற ​பொருள் இல்​லை​யே.  என​வே அது ஞான சம்மந்தமான விஷயம் இல்​லை.  அனுமானத்திற்கு ​தே​வையான நியதியும் அங்கு இல்​லை.  இல்லாத ஒரு ​ பொரு​ளை உதாரணமாக எடுத்துக்​கொண்டு வாதிடுவதில் நியாயமில்​லை.  ஆனால் பா​னையும் கண்ணில் ​தோன்றும் மற்ற ​பொருள்களும் உண்​மையான​வை சத்யமான​வை.  அவ்வாறான சரியான ஆதாரங்க​ளைக் காரணம் காட்டி​யே நாம் வாதிட​வேண்டும் என்பதாக பிரபஞ்ச மித்யா ஆத்வானுமான வாதத்​தை முறியடித்தார்.  ஒரு ​பொரு​ளை அறிய அனுமானம் மட்டும் ​போதாது என்றும், அப்​பொரு​ளை பிரமாண​மென்​றோ அப்பிரமாண​​​மென்றோ கூற ஆகமம் மற்றும் பிரத்யக்ஷம் அவசியம் ​தே​வை என்ப​தை தகுந்த ஆதாரங்களுடன் வாதிட்டதால்   கற்​றோர்  ச​பையில் அனுமான தீர்த்தர் என்று பாராட்டப்பட்டார்.   ஒரு சமயம், புத்திசாகரன் என்ற ​பெளத்தர், ​​வேதம் ​பொய்யானது என்றும் ​வேதநாயகனான ஈஸ்வரனை து​வேஷித்தும், தாம் மிகவும் கற்றவன் என்ற அகங்கார ​தோர​ணையுடன் வாதிசிம்மன் என்னும் சீட​ரைஅ​ழைத்துக்​கொண்டு ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார்.  வாதிசிம்மன் எடுத்து​வைத்த வாதத்திற்​கெல்லாம் சற்றும் தாமதிக்காமல் உடனுக்குடன் தகுந்த ஆதாரங்களுடன் பதிலளித்து, அவர்க​ளை இர​வோடு இரவாக ​சொல்லிக்​கொள்ளாமல் ஓடிவிட ​செய்துவிட்டார்.  (​தொடரும்)  
   ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண ​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/             


  
                                                                                                                                                                                                                                                               

No comments:

Post a Comment