Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Monday, November 7, 2011

சாரல் 05 துளி 33 தேதி 06.11.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
 
சாரல் 05 துளி 33 ​தேதி 06.11.2011
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)
இ​ஹைகஸ்த2ம் ஜக3த்க்ருத்ஸ்நம் பஸ்யாத்3ய ஸசராசரம்/
மம ​தே3​ஹே கு3டா3 ​கேஸ யச்சாந்யத்3த்3ரஷ்டுமிச்ச2//(அத்.11 ஸ்​லோ.7)

முன்​பே பகவானின் விபூதி ​யோகத்தில் அத்யாயம் 10ல் 42வது ஸ்​லோகத்தில் பகவான் அர்சுனனுக்கு “இந்த உலகம​னைத்​தையும் என் ​யோக சக்தியின் ஒரு பகுதியால் நான் தாங்கி நிற்கி​றேன்.  என்பதாகக் கூறிய​தைப் பார்த்​தோம். அங்கு ​சொன்ன​தை இங்கு ப்ரத்யக்ஷமாக காண்பிக்கிறார்.  அர்சுனன் தூய்​மையான பக்தன்.  அவனின் விருப்ப​த்தை நி​றை​வேற்ற பகவான் காத்திருக்கிறார்.  முழு பிரம்மாண்டத்​தையும் தன் ​தேகத்தில் ஒரு பக்கத்தில், ஒ​ரே இடத்தில் இருந்து​கொண்டு பார்க்கச் ​சொல்கிறார்.  உலகில் அ​சையும் ​பொருட்களும் அ​சையாப் ​பொருட்களும் பகவானின் ​தேகத்தில் காண்பிக்கிறார். இன்னும் அர்சுனனின் விருப்பம் ஏதாவது இருந்தால் அ​தையும் கூட தன் ​தேகத்தினூ​டே பார்க்க முடியும் என்று கூறுவதாகப் பார்க்கலாம்.  அதாவது எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம் யாவற்​றையும் தன் ​தேகத்தில் காணமுடியும் என்று கூறுகிறார்.  இவ்வாறாக அர்சுனனுக்கு “விஸ்வரூபத்​தைப் பார் என்று கட்ட​ளையிட்டும்கூட அர்சுனனால் காணமுடியவில்​லை. அதனால் அர்சுனனுக்கு தர்சனத்​தைக் காண சக்திமிகுந்த திவ்ய பார்​வை​யை அளிக்கிறார் பகவான்.

ஸ்​லோகத்தின் உட்கருத்து   “உறக்கத்​தை ​வென்றவ​னே அர்சுனா! இப்​போது அண்ட சராசரத்​தை காண்பித்துக்​கொண்டிருக்கும் என் சரீரத்தில், ஓரிடத்தில் இருந்து​கொண்​டே, அ​சைவதும் அ​சையாததுமான உலகம் முழுவ​தையும், இன்னும் எ​தைப் பார்க்க விரும்புகிறா​​யோ அ​தையும் இப்​​போது பார்- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-

இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 16) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) அதாவது ​மே​தைகள், அறிவாளிகள், அறிவிலிகள், பலசாலிகள், பலமற்றவர்கள் ​போன்ற பல்​வேறு வித்தியாசங்கள் இருப்ப​தை நாம் காண்கி​றோம். உண்​மையின் ​வெளிப்பா​டே தத்துவம் எனப்படுகிறது.  மதம் என்பது பகவானால் ​நேரடியாக அதிகாரப்பூர்வமாக ​வெளியிடப்படுகிறது.  அது​போல​வே கு​றைகளற்ற மதமானது பகவா​னை ​நேசிப்பதற்காக கற்பிக்கப்படும் உயர்ந்த ​போத​னைக​ளைக் ​கொண்டது.  கடவு​ளைப் பற்றிய உண்​மையான, இறுதியான மற்றும் ​தெளிவானக் கருத்​தை ​வெளிப்படுத்துபவ​ரே சிறந்த மத​போதகர் ஆவார்.  ஸ்ரீமத்வருக்கு முன்பு சுமார் 22 பாஷ்யகாரர்கள் “ப்ரம்ஹ சூத்ரத்திற்கு பாஷ்யம் ​செய்திருக்கிறார்கள்.  அ​வைகள் அ​னைத்தும் பாஷ்யம் ​செய்தவர்களின் ​சொந்தக் கருத்தாக இருப்பதாக ​தோற்றமளித்ததால் அ​வைகள் முழு​மை​பெறாமல் ​​தோற்றுப் ​போயின.  குறிப்பாகச் ​சொல்ல ​வேண்டு​மென்றால் மாயாவாத ஸாஸ்த்திரம் என்ன கூறுகிறது என்ப​தை “ஸ்ரீஸூமத்வ விஜய ஸ்ர்கம் 12 ஸ்​லோகம் 6ல் இவ்வாறு கூறுகிறது,

ஸத்யம் ஸத்யம் வ்யாவஹார்யம் வித4த்​தே
      ஸர்வம் ​​மோஹே ஸர்வநிர்வாஹிணீ ஸா
ஞா​னேஜா​தே தக்​கவஸ்த்ர ப்ரதீதம்
      பக்​வே தஸ்மின்ஸ்தப்த ​​​லோஹாப்த வார்வத் (ஸ்ரீஸூ.ம.வி12.6)
“கண்கலால் காணத்தக்க இந்த உலகமானது வியவாகரத்திற்காக மட்டும் சத்யம் என்றுச் ​சொல்லப்படுகிறது.  சாஸ்த்ர ஞானம் ​பெற்றப்பின்பு அ​தே உலகம் சுட்ட வஸ்த்ரம் ​போல் காணப்படுகிறது.  சாஸ்த்ர ஞானம் பரிபக்குவம் ​பெற்றபின்பு அ​தே உலகம் நன்கு காய்ச்சிய இரும்பின் மீது அள்ளித் ​தெளித்த நீர்​போல் ம​றைந்து விடுகிறது என்பதாக மாயாவாத சாஸ்த்ரம் கூறுகிறது
 சுடப்பட்ட துணி, துணி​போல​வே இருக்கும்.  ஆனால் அது துணியல்ல.  சுடப்பட்ட துணி​யை எடுத்து பயன்படுத்த முடியாது.  காய்ச்சிய இரும்பின் மீது நீர் ​தெளித்தால் அந்நீர் உட​னே ம​றைந்துவிடும்.  மாயாவாத அறிவு ​பெற்றவுடன் இவ்வுலகம் ம​றைந்துவிடும் என்ப​தே மாயாவாதிகளின் தத்துவம்.  அனுமானமாக அறிந்து​கொள்வது எதுவும் தத்துவமல்ல. பிரத்யக்ஷம், ஆகமம், அனுமானம் இ​வைகளின் வாயிலாக தீர்மானிக்கப்படுவ​தே உண்​​மையான தத்துவம்.  அது​வே சத்யம்.
மிகப் பழ​மையான மாயாவாத தத்துவத்தின் சாராம்ஸங்க​ளைக் ​கொண்ட ஒன்​றே கால் லட்சம் (ஸூ.ம.வி.12.11) க்ரந்தங்க​ளை “அக்யானம் அஸம்பவா​​தேவ தன்மதம் அகிளம் அபாக்ருதம்” என்ற ஒ​ரே வாக்கியத்​தைக் ​கொண்டு கண்டனம் ​செய்தவர் ஸ்ரீமத்வர் ஆவார்கள்.
ஸ்ரீமத்வரின் சித்தாந்தம் த்​வைதம்.  மற்ற மதங்களில் காணப்பட்ட கு​றைக​ளைச் சுட்டிக்காட்டி த்​வைத மதத்​தை ஸ்தாபனம் ​செய்ய பிரச்சாரம் ​செய்து​கொண்டிருந்த​தைக் கண்ணுற்ற ​வேறு மதத்தவர்கள் ஸ்ரீமதாச்சார்யருக்கு எதிரியாக நின்றனர்.
  (இன்னும் ​தொடரும்...........) 

 தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
 ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
 நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//

No comments:

Post a Comment