Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Wednesday, November 10, 2010

சாரல் 4 துளி 35 தேதி 21.11.10

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்ம விபூதய:/ 
ப்ராதாந்யத குருஸ்ரேஷ்ட நாஸ்யந்தோ விஸ்தரஸ்யமே
 (அத்,10-ஸ்19) 

    கீதையின் சாரலில்...விபூதி யோகம்..
                             10வது அத்யாயம்
 ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா 9ம் அத்யாயம் 4ம் ஸ்லோகத்தில் கூறுகிறார் : "இந்த உலகம் அனைத்தும் கண்கலால் காணமுடியாத உருவமுள்ள என்னால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஜீவன்களும் ஜடப்பொருள்களும் என்னிடம் இருக்கிறது. ஆனால் அவைகளில் நான் இல்லை". உலகம் அனைத்திலிருப்பதும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிரதிபிம்மங்களே என்பதாக அறியமுடிகிறது. சென்ற ஸ்லோகத்தில் அர்சுனன், பகவானுடைய தத்ரூபங்களை விஸ்தாரமாகச் சொல்லவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறார். பகவானுடைய தத்ரூபங்கள் அவருடைய வைபவங்கள் அளவிடமுடியாதவை. ஒவ்வொரு இனத்தையும் வரைமுறைப்படுத்தி அவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒருவரை அரசனாக்கி அவர்களை அதிகாரிகளாகக்கொண்டு அகில உலக விவஹாரங்களும் செம்மையாக நடைபெற பகவான் அனுகிரஹிக்கிறார். அதாவது, உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் கால்நடை பிராணியில் ஸ்ரேஷ்டமானது வ்ருஷம், குதிரையில் சிறந்தது உச்சைச்ரவஸ், விலங்குகளில் சிறந்தது சிங்கம், இவ்வாறாக அந்தந்தப் பதார்த்தங்களில் சிறந்தவையாக திகழ்வனவற்றை மட்டும் கூறினாலே கணக்கிலடங்காது என்பதால் இந்த அத்யாயத்தில் பகவானுடைய முக்கிய தோற்றங்களை மட்டுமே விளக்கப்போவதாகக் கூறுகிறார். பகவானின் சக்திகளை விஸ்தாரமாகச் சொல்லுவதற்கு எல்லையே இல்லை. பஹூநாம் ஜன்மநாமந்தே என்பதாக பற்பல பிறவிகளுக்குப் பிறகே ஒருவன் வாஸூதேவ: ஸர்வமிதி (7-19) என்பதாக அறியமுடியும் என்பதாகக் கூறியிருக்கிறார் என்பதைப் பார்த்தோம். ஒருவன் ப்ரம்மத்தை அறிய முற்படுவதைவிடவும், அல்லது மோக்ஷத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைவிடவும் சிறந்தது பகவானின் அதிஅற்புதமான லீலைகளை தெரிந்துகொள்வது. இதுவே பேரானந்தத்தைக் கொடுக்கக்கூடியது. எனவேதான் ஸ்ரீஸூகாச்சார்யர் அவர்கள் பரிக்ஷித் மஹாராஜனுக்கு ஸ்ரீமத் பாகவதக் கதையை உபாக்யாணம் செய்துகொண்டிருந்த சமயத்தில், தேவர்கள் தோன்றி "நாங்கள் அம்ருதத்தை கொடுக்கிறோம், நீங்கள் பாகவதக் கதையை எங்களுக்கு கொடுங்கள் என்று வேண்டினார்கள்". ஆனால் அம்மன்னனோ, அம்ருதத்தை நிராகரித்து முக்திக்குக் காரணமாக விளங்கும் பாகவதக் கதையை ஸ்ரத்தையாகக் கேட்க விரும்பினார். ஸ்ரீமத் பாகவதத்தில் பகவானின் அவதார லீலைகள், சக்திகள், ப்ரபாவங்கள் யாவும் உன்னதமாக விளக்கப்பட்டுள்ளது. பகவானுடைய சக்திகளை விசேஷமாகப் பிரகாசிக்கச் செய்துகொண்டிருக்கும் தத்ரூபங்களை மட்டில் எடுத்துக் கூறப்போவதாக பகவான் இச்ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். பகவான்,அர்சுனனின் வேண்டுதலால் (முந்தைய ஸ்லோகங்கள்) மிகவும் சந்தோஷமடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். 
ஸ்லோகத்தின் உட்கருத்து : குருவம்சத்தில் சிறந்தவனே அர்சுனா நீ இவ்வாறு கேட்டதைப்பற்றி நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். என்னுடைய விபூதியின் தத்ரூபங்கிளின் விஸ்தாரத்திற்கு எல்லையே இல்லை என்பது பிரஸித்தம். என் தெய்வத் தன்மையுள்ள விபூதிகளில் நன்றாக ப்ராசிக்கச் செய்துகொண்டிருக்கும் ரூபங்களை மட்டும் உனக்குச் சொல்கிறேன்.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                                                                                          இங்கே ஒரு துளி : பகவான்ஸ்ரீகிருஷ்ணர்-  :கர்மங்கள் அனைத்தையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய். பக்தியுடன் என்னையே நித்யமும் த்யானம் செய் (அத்12.ஸ்6). என்னிடம் ப்ரேம பக்தி செய்பவனை மரணமெனும் சம்சாரக் கடலிலிருந்து மீட்பேன் (ஸ்7)  புத்தியையும் மனதையும் என்னிடம் வைத்தால் ஐயமின்றி என்னிடம் வாழ்வாய் (அத.12 ஸ்.8) மனதை நிலைநிறுத்த முடியாதுபோனால், அப்யாச யோகத்தினால் என்னை அடைய   முயற்சிசெய்(அத்.12.ஸ்9)  

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /
 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
                  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /
 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே //




No comments:

Post a Comment