Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, November 27, 2010

சாரல் 4 துளி 37 date : 05.12.10

அஹமாத்மா   கு3டா3கேஸ   ஸர்வபூ4தாஸயஸ்தி2த: /   
அஹமாதி3ஸ்ச   மத்4யம்      பூ4தாநாமந்த ஏவ ச // 
(அத் 10. ஸ் 20)
ஸ்ரீமதாசார்யர் அவர்கள் ஸ்ரீக்ருஷ்ணாம்ருத மஹார்ணவ: என்னும் தொகுப்பில் கூறுகிறார் : 
      யஸ்யாந்த:ஸர்வமேவேதம் அச்யதஸ்யாவ்யயாத்மன/
               தமாராதய கோவிந்தம் ஸ்தானமக்ரயம் யதிச்சஹ/          
 ஸ்ரீகிருஷ்ணரே ஆரம்பமும் முடிவுமில்லாதவர், பிறப்பு, இறப்பு, மூப்பு இல்லாதவர். "அச்சுதனிடமிருந்து இநத உலகம் உண்டாயிற்று என்றும் "எல்லாம் வாசுதேவன்" வஸமே என்றும் கூறி, ஹே! த்ருவனே! வைகுண்டத்தை அடைய விரும்பினால் அந்த கோவிந்தனை நாடு, முறைப்படி அவனைத் துதிப்பாயாக", என்று உபதேஸிக்கிறார். பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் 7ம் அத்யாயம் 10ம் ஸ்லோகத்தில் "பீஜம்மாம் ஸர்வபூதாநாம்" என்பதாக தெரிவிக்கிறார். எல்லா பிராணிகளும் தோன்றுவதற்கு வித்தாக இருப்பதாகக் கூறுகிறார்.   ஆத்மாவைப் பற்றி அறிய பல தத்துவஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டவண்ணம் இருக்கிறார்கள். ஆன்மீக ஞானத்தால் மட்டுமே ஆத்மாவையும், பரமாத்மாவையும் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவராசியினூடே ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மாவில் பகவான் அந்தர்யாமியாகக் குடிகொண்டு நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறார். நம் ஹிருதயத்தில் குடிகொண்டு நம்மை இயங்கச் செய்யும் ஆத்மாவே பரமாத்மா. அதுவே பரபிரம்மம். அந்த பரபிரம்மத்தை அறிவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் பிரம்ம ஞானம் அறிவதென்பது மிகவும் அரிதான சாதனை. பகவான் 7ம் அத்யாயம் 3ம் ஸ்லோகத்தில் 'மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஸு' - "ஆயிரம் மனிதர்களில் ஒருவன் என்னை ப்ரார்த்திக்கிறான். அவர்களில் யாரோ ஒருவனே ஞானம் பெறுகிறான். ஞானம் பெற்றவரில் எவனோ ஒருவனே என்னை தத்ரீதியாக அறிகிறான்", என்பதாகக் கூறுவதைபார்த்தோம்.  இச்ஸ்லோகத்தில் அர்சுனனை "குடாகேச" என்று விளிக்கிறார். அர்சுனன் உறக்கத்தை வென்றவன். அறியாமை என்னும் இருளில் உறங்கிக்கொண்டிறாமல் ஆன்மீக ஞானம் பெற்று பகவானை புரிந்துகொள்ள வேட்கை கொண்டதால் அர்சுனனை 'குடாகேச' என்று பகவான் அழைப்பதுபொருத்தமானதே. "ஸ்ரீஈசோபநிஷத்" கூறுகிறது 'ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம், யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' "இப்பிரபஞ்சத்தில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சகல ஜட ஜீவப் பொருள்களும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டிலும் இயக்கத்திலுமிருக்கிறது". என்பதாக உபநிஷத் கூறுகிறது. இங்கே இச்ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும்போது, எல்லா ஜீவராசிகளின் இருதயங்களில் இருக்கும் ஆத்மாவும், எல்லா உயிர்களின் தொடக்கமும், நடுவும், இறுதியும் பகவானாகவே இருக்கிறார் என்பதை தொளிவாகக்கூறுகிறார்.  ஒரு விஞ்ஞானி ஒரு ரோபோ வை உருவாக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தானே அதை இயக்கவைத்து, இறுதியில் அதை அழிக்கவும் செய்கிறானோ, அதுபோலவே பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரும் உயிர்ப்பொருட்களை படைத்து அதனுள்ளே அந்தர்யாமியாக இருந்துகொண்டு, இயங்கச் செய்து, அவைகள் செய்யும் கர்மவினைகளுக்கேற்றவாறு பலன்களைக்                                       கொடுத்து, அவற்றை இறுதியில் அழியச்செய்கிறார் என்பதே உண்மையாகிறது.

ஸ்லோகத்தின் உட்கருத்து : "தூக்கத்தை ஜெயித்தவனே அர்சுனா நானே ஸகல ப்ராணிகளின் ஹிருதய குகையில் ஆத்மாவாய் இருப்பவன். ஸகல ப்ராணிகளின் ஸ்ருஷ்டி கர்த்தா நானே. மற்றும் ஸகல ப்ராணிகளையும் ரக்ஷிப்பவனும் நானே.                                             ஸகல ப்ராணிகளையும் நாஸம் செய்பவனும் நானே" -பகவான்ஸ்ரீகிருஷ்ணர்-  

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 
                                                                                   

No comments:

Post a Comment