Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Monday, September 19, 2011

சாரல் 05 : துளி 25:- 11.09.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
துளி:5, தேதி:11.09.11
கீ​தையின் சாரலில்..... விஸ்வரூபதர்சன ​யோகம்            (11ம் அத்யாயம்)
அத்யாயச் சுருக்கம்:  ​(சென்ற இதழின் ​தொடர்ச்சி...) விஷ்ணு​வே! ​தேவ ​தேவ! ஜகத்பதி​யே! உமது இந்த ரூபத்​​தைக் கண்ட உடன் நான் மிகவும் நடுநடுங்கிப் ​போ​னேன்.  இதனால் எனக்கு துணிவும் சுகமும் இல்​லை.  அ​மைதியும் எனக்கில்​லை.  நான் திக்ப்ரமம் பிடித்தவ​னைப் ​போலிருக்கி​றேன்.  உலகாளுகின்ற மன்னர் கூட்டமும், திருதாஷ்டிரரு​டைய புத்திரர்கள் அ​னைவரும், அப்படி​யே பீஷ்மர்,          து​ரோணர், கர்ணன் மற்றும்கூட எமது யுத்த வீரர்களும் உமது முகங்களில் வந்து விழுகிறார்கள்.  சிலர் உமது ​கோ​ரைப்பற்களின் நடுவில் சிக்கிக்​கொண்டு த​லை துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.  ஸமுத்திரத்​தை ​நோக்கி​யே நதிகள் திரண்​டோடுவ​தைப்​போல, இவ்வுலக வீரர்கள் யாவரும் ஜ்வலிக்கும் உன் வாயில் புகுகிறார்கள். விட்டில் பூச்சிகள் நாசம​டைவதற்காக சுடர்விட்டு எரியும் தீயில் புகுவ​தைப் ​போல, உலகத்துயிர்கள் யாவும் நாசம​டைவதற்காக​வே உன் வாயில் வந்து விழுகின்றன.  உமது கனல் வீசும் முகத்தால் உலக​னைத்​தையும், உயிர் வாழும் கூட்டங்க​ளையும் விழுங்குகிறாய்.  மிகவாக ரத்தம் ​பெருகும் உதடுக​ளை நாவால் நக்குகிறாய்.  இவ்வாறாக உக்ரரூபத்துடன் ​தோன்றும் நீர் யார்?  எனக்கு அறிவிப்பாயாக.  ​தேவ ஸ்​ரேஷ்ட​னே! உனக்கு நமஸ்காரங்கள்.  எனக்கு அருள்புரிய ​வேண்டுகி​றேன்.  உன்​னை அறிவதற்கு விரும்புகி​றேன்.  உன் ​செயல்பாடுக​ளை என்னால் அறியமுடியவில்​லை.
பகவான்: (பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ​கோரரூபத்​தை எடுத்ததற்கான காரணத்​தைச் ​சொல்லுகிறார்)          ​ஹே! அர்சுனா! இப்பிரபஞ்சத்​தை ஸம்ஹாரம் ​செய்வதற்காக கால ​தேவனாய் இருக்கி​றேன்.  இப்​போர்களத்தில் நின்றிருக்கும் ​போர் வீரர்கள் அ​னைவரும் என்னால் மரணம​டையப் ​போகிறார்கள்.  (இப்​​போரில் பாண்டவர்கள் ஐவர், அஸ்வத்தாமா, க்ருபாச்சார்யர், க்ருதவர்மா ஆகி​யோர் தவிர மற்​றோர்கள் இறப்பது திண்ணம் என்ப​தை அர்சுனனுக்கு முன்கூட்டி​யே அறிவிக்கிறார்)  உன் எதிரிக​ளைக் ​கொன்றுவிடுவ​தோ அல்லது விடுவிப்ப​தோ உன்​கையிலில்​லை.  அவ்வாறு எண்ணினாயானால் அது உனது அஜ்ஞான​மே யாகும்.  என​வே நா​னே யாவற்​றையும் நாஸம் ​செய்யும் சக்தி​கொண்டவனாய் இருப்பதால் நீ யுத்தம் ​செய்வதற்கு எழுந்திரு.  ஸத்ருக்க​ளை அழி.  ​பெய​ரையும் புக​ழையும் அ​டைவாயாக.  இப்​போர் வீரர்கள் எல்​லோரும் முன்ன​மே என்னால் ​கொல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  என​வே, நீ ​வெறும்காரணன் மாத்திர​மே என்ப​தை அறிவாயாக.  இரு​கைகளால் ​போர்புரியும் வீர​னே அர்சுனா!  து​ரோண​ரையும், பீஷ்ம​ரையும், ஜயத்ரத​னையும், கர்ண​னையும் மற்றும் உள்ள ​போர் வீரர்க​ளையும் என்னால் ​கொல்லப்பட்டவர்க​ளைப் ​போலிருக்கின்ற இவர்க​ளைக் ​கொல்வாய்.  பயப்படா​தே.  வருந்தா​தே.  யுத்தம்​செய்.  ​போரில் எதிரிக​ளை ​வெல்பவனாக இரு.
ஸஞ்சயன்:-(திருதராஷ்ரரிடம்கூறுகிறார்)  ​கேசவனு​டைய இந்த வார்த்​தைக​ளைக் ​கேட்ட அர்சுனன் மிகவும் நடுக்கமுற்றவனாயும் பயந்தவனாயும் ​கைகூப்பி வணங்கி மிகவும் பவ்யமானக் குரலில் கூறலானான்.
அர்சுனன்:- ஹ்ருஷீ​கேச! உன்னு​டைய கீர்த்தியால் உலகம​னைத்தும் சந்​​தோஷம​டைகிறது.  மக்கள் உன்னிடத்தில் அன்பு ​செலுத்துகிறார்கள்.  ராக்ஷஸர்கள் பயந்து ஓடுகிறார்கள்.  ஸித்த கணங்கள் உன்​னை வணங்குகிறார்கள்.  யா​ரையும்விட ​மேலானவன் நீ.  பிரம்ம​னைப் ப​டைத்தவன் நீ.  உன்​னை நமஸ்கரிப்பதில் ஆச்சிர்யம் ஏதுமில்​லை.  எல்​லையற்றவன் நீ.  ஜகத்திற்கு இருப்பிடமானவன் நீ​யே.  உண்​மையும் இன்​மையும் அதற்கும் ​மேலானவனும் நீ​யே.  ஆதி​தேவ!  ​தேவர்களுக்கும்​ தேவன் நீ. என்றும் அழியாத ஆத்மஸ்வரூபியான பரம புருஷன் நீ.  இப்பிரபஞ்சத்தின் ஆதாரம் நீ​யே.  யாவற்​றையும் அறிகிறவனும் அறிய​வேண்டியவரும் நீ​யே. பரமபதம் என்று ​சொல்லப்படுகின்ற ​வைகுண்டமும் நீ​யே.  எல்​லையற்ற ரூபத்துடன் நீ​​யே இப்பிரபஞ்சம் முழுவதும் வ்யாபித்திருக்கிறாய்.   
வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி நீ​ரே.  பிரம்மாவிற்கு தந்​தை நீ.  உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள்.  ​தேவ​தேவ​னே! ஆயிரம் மு​றையும் உமக்கு நமஸ்காரங்கள்.  அதற்கும் அதிகமாகவும் உமக்கு நமஸ்காரங்கள்.  (மீண்டும் மீண்டும் பகவா​னை நமஸ்கரிக்கிறான் அர்சுனன்)  ​ஹே ​லோகநாதா! உன் ​பெரு​மைக​ளையும், இந்த விஸ்வரூபத்​தையும் அறியாதவனாக இருந்துவிட்​டேன்.  உன்னிடம் அதிகமான அன்பு​கொண்டு உன்​னை அன்​னோன்ய நண்பனாக நி​னைத்​தேன்.  அதனா​லோ என்ன​வோ, உன்​னை “அ​டே கிருஷ்ணா அ​டே யாதவா “அ​டே நண்பாஎன்​றெல்லாம் துடுக்குத்தனமாய் விளித்திருக்கி​றேன்.  யாவற்​றையும் ​பொருத்தருள​வேண்டும்.  நான் பரிஹாசமாகக் கூறிய​தையும், ​வேடிக்​கையாக அவமதித்த​தையும் க்ஷமித்தருள ​வேண்டும்.  நான் உன்னுடன் வி​ளையாடியது, படுத்துறங்கிறது, உண்பது, வீற்றிருப்பு யாவற்​றையும் ​பொருத்தருள​வேண்டும்.  என்​னை மன்னித்தருள ​வேண்டுகி​றேன். 
        ஒப்பற்ற ​பெரு​மை ​பெற்றவ​னே! ​கோவிந்தா! இப்பிரபஞ்சத்திற்கு தகப்பன் நீ.  பூ​​ஜைக்குரியவர் நீமூவ்வுலகங்களிலும் உமக்கு ஒப்பானவர் இல்​லைஉனக்கு ​மேலான ​வே​றொருவருண்​டோ?
        ஆ​கையால் ​தேவ​தேவா! நான் என் உட​லைத் தாழ்த்தி மண்டியிட்டு நமஸ்கரிக்கி​றேன்.  ஸர்​வேஸ்வரா! பூ​ஜைக்குரியவ​ரே!  நீர் என்னிடம் கிரு​பை ​செய்ய ​வேண்டுமாய் ப்ரார்த்திக்கி​றேன்.  மகன் ​செய்த பி​ழை​யைத் தந்​தை ​பொறுப்பது​போலும், நண்பன் ​செய்யும் ஏளனத்​தை நண்பன் ​பொறுப்பது ​போல, ம​னைவி ​செய்த அபராதத்​தை கணவன் ​பொறுப்பது ​போல உமக்கு அறியா​மையால் நான் ​செய்த தவ​றைப் ​பொறுத்தருள​வேண்டுகி​றேன். (இன்னும் உள்ளது)
தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ 
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/ 
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே//



No comments:

Post a Comment