Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Monday, September 5, 2011

சாரல் 05 துளி 24 04.09.2011

பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல் 05   துளி 24  04.09.2011
இதழ் ஆசிரியர்: ஆதி​மைந்தன்:: இ​ணை ஆசிரியர்: வாயுமித்ரன்
கீ​தையின் சாரலில் விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம் அத்யாயம்)

ஸ்ரீமத் ஹனுமத்பீ4ம மத்4வாந்தர்க்கத ராமக்ருஷ்ண
​வேத3வ்யாஸாத்மக லக்ஷ்மிஹயக்ரீவாய நம:/  ஓம்
     அத்யாயச் சுருக்கம்:  ஸ்ரீகிருஷ்ணரின் அந்தர்யாமியான ரூபங்க​ளை தியானிப்பது சம்மந்தமான விஷயங்கள் ​சென்ற அத்யாயத்தில் ​சொல்லப்பட்டது.  பகவானு​டைய அருள் இல்லாமல், அ​வைக​ளை உண்​மையாகவும் பூர்ணமாகவும் அறிவ​தென்பதும், தியானஞ்​செய்வ​தென்பதும் ஸாத்யமானது அல்ல.  அந்த ரூபங்க​ளை ஒருமுகப்படுத்தி ஒ​ரே ​தொகுப்பாக ​நேரி​டையாக அர்சுனனுக்கு தர்சனம் ​கொடுத்து வர்ண​னை ​செய்கிறார் கீதாசார்யர்.  10வது அத்யாயத்தின் விரிவாக்கம் இது எனலாம்.
அர்சுனன்: “நீ அருள் ​செய்தாய், உன் உப​தேஸத்தால் நான் புத்திமயக்கத்திலிருந்து விடுபட்​டேன்.  உன் மஹி​மைக​ளையும், நீர் ​செய்கின்ற உற்பத்தி மற்றும் அழி​வையும் ​சொல்லக்​கேட்​டேன்.  பரம்​பொரு​ளே!   ​​லோகேஷ்வரரான உமது ரூபத்​தை நீர் வர்ணித்தபடி​யே நான் பார்க்க சித்தமாக உள்​ளேன்.  மஹாப்ரபு​வே! ஸகல சக்திக்கும் ஈஸ்வரா! நான் உன் விஸ்வரூபத்​தை பார்க்க தகுதியும் சக்தியும் உள்ளவனாக இருந்தால், என்றுமழியாத உன் ஸ்வரூபத்​தை எனக்கு காண்பிப்பாயாக.
ஸ்ரீகிருஷ்ணர்: அர்சுனா பலவிதங்களில் ​தோற்றமளிக்கும் என் ரூபங்க​ளைப் பார்.  பல வர்ணங்களும், உருவங்களும் பல ஆயிரம் கணக்கில் ​தெரிவ​தைப் பார்.  ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அச்லினி ​தேவர்கள் மருத்துக்கள் ​போன்ற ​தேவகணங்க​ளையும், நீ இதுவ​ரையில் பார்த்திறாத பல அபூர்வங்க​ளையும், ஆச்சிர்யங்க​ளையும் பார்.  நீ இங்கிருந்து​கொண்​டே, இப்பிரபஞ்சம் முழுவ​தையும் பார்.  இன்னும் ​பல்வேறு விஷயங்க​ளையும் என் ​தேகத்தில் ஒ​ரேயிடத்தில் பார்.  ஆனால் இப்​போதிருக்கும் உன் சாதாரணப் பார்​வையால் நீ பார்க்க முடியாதாக​யைால், நான் உனக்கு ​தெய்வத்தன்​மை ​பொருந்திய திவ்யமானப் பார்​வை​யைக் ​கொடுக்கி​றேன்.  அப்பார்​வை மூலம் என் ஈஸ்வர ஸ்வரூபத்​தை விளக்கும் ​யோகத்​தைப் பார்.
ஸஞ்சயர் :  “திருதிராஷ்ர மஹாராஜ​ரே! ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு கூறிவிட்டு, பார்த்தனுக்கு ஸர்​வோத்தமமான ஈஸ்வர வடிவத்​தை காட்டியருளினார்அவ்வடிவம் பல முகங்க​ளையும் கண்க​ளையும் ​கொண்டதாகவும், பல அற்புதக் காட்சிகள் நி​றைந்ததாகவும், திவ்யமான பல ஆபரணங்கள் மற்றும் பல ஆயுதங்கள் உ​டையதாகவும், திவ்யமா​லைக​ளையும், ஆ​டைக​ளையும் அணிந்து, பல்​வேறு வாச​னை ​பொருள்க​ளைால் பூசப்பட்டு, எங்​கெங்கு காணினும் முகங்களாக, எல்​லையற்ற மஹா ஆச்சிர்யமானதுமான மஹாபுருஷ​னைப் பார்த்தான்.
        வானத்திலிருக்கும் ஆயிரம் சூரியன்கள் ஒன்றுகூடி ஒ​ரே சமயம் பிரகாசிக்குமானால், அது எந்தளவு காந்தியுடன் இருக்கு​மோ, அது மஹா புருஷரிடமிருந்து உண்டாயிற்று. 
        அப்​போது பாண்டவ புத்திரன், அங்​கே ​தேவ​தேவனான கண்ணனு​டைய ​தேஹத்தில் இப்பிரபஞ்சம் முழுவ​தையும் ஒரு​சேரக் கண்டான்.  பிறகு தனஞ்​செயன் ஆச்சர்யத்தால் ​வெள​​வெளத்து நின்றான்.  பயத்தால் அவன் ​தேகம் நடுங்குவது​போல் இருந்தது.  புளங்காகிதம் அ​டைந்தவனாய் ​தேவ​தேவ​னைக் ​கைகூப்பி நமஸ்கரித்து த​லைவணங்கி அஞ்சலி​செய்து கூறலானான்.
அர்சுனன்:  (பகவானு​டைய அதிஅற்புதமான சக்திவாய்ந்த ரூபத்​தைக் கண்ணுற்ற அர்சுனனின் மனதில்     சி​நேக பாவ​னை நீங்கி பயமும் பக்தியும் ஓங்கி நின்றது.  பகவா​னை ​நோக்கி ப்ரார்த்திக்கிறான்)
        “​தேவ​தேவ! உன் ​தேகத்தில் பலவித உயிர்க் கூட்டங்க​ளையும், ​தேவர்க​ளையும் அணிஅணியாகக் காண்கி​றேன்.  தாம​ரை மலரில் வீற்றிருக்கும் பிரம்ம​னையும், சிவ​பெருமா​ளையும், பலரிஷிக​ளையும் மற்றும் ​தெய்வீகம் நி​றைந்த நாகங்க​ளையும் பார்க்கி​றேன்.  ​​லோகநாதா! எண்ணிக்​கையிலடங்காத வாயும், வயிறும் கண்களும் உ​டையவறாகவும், எல்​லையற்ற ரூபத்​தை உ​டையவறாய் உன்​னை எங்கும் காண்கி​றேன்.  விச்​வேச்வரா! உன்னு​டைய ஆதியும், நடுநி​லையும் முடி​வையும் அறிய முடியவில்​லை.  உன்​னை கிரீடம் தரித்த வறாயும், க​தை​யேந்தியவனாயும், சக்ராயுதபாணியாயும் பார்க்கி​றேன்.  எப்புறமும் உன் ஒளி வீசுகிறது.  அவ்​வொளி கண்க​ளைக் கூசச் ​செய்கிறது.  ஒளி நி​றைந்த ​நெருப்புக் ​கொழும்பாய், சூர்யன் ​போன்று பிரகாசிக்கிறாய்.  அளவிடுவதற்கு அறியதாய் உள்ள உன்​னை எவ்விடத்திலும் காண்கி​றேன். நீ அழிவற்றவன், நீ ஸர்​வோத்தமன்.  இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரம் நீ.  மாறுபாடில்லாதவன்.  தர்மத்​தை ரக்ஷிக்கிறவன் நீ.  நீ பரமபுருஷன் என்று எண்ணுகி​றேன்.  நீ ஆதியும், நடுவும், முடிவுமில்லாதவன்.  எல்​லையற்ற சக்தியு​​டையவன் நீ.  எல்​லையற்ற ​கைக​ளையும் அவயங்க​ளையும் உ​டையவன் நீ.  சந்திர சூர்யர்க​ளை ​நேதிதிரங்களாயு​டையவன் நீ.  ​கொழுந்துவி​​டெறியும் ​நெருப்​பைப் ​போல வாயு​டையவன் நீ.  தன் ​தேஜஸினால் இவ்வுல​கை​யே எரிக்கும் சக்தி​பெற்றவறாகக் காட்சியளிக்கிறாய்.  மஹாத்ம​னே!  வானுக்கும், மண்ணுக்கும் நடுவிலுள்ள சகலத்திக்குகளிலும் நீ​யே நி​றைந்திருக்கிறாய்.  உன்னு​டைய இந்த அற்புதமான ​கோரரூபத்​தைக் கண்டு மூவ்வுலகங்களும் துன்பம​டைகிறது.       இ​தோ ​தோன்றும் ​தேவக்கூட்டங்கள் உம்மிடத்தில் புகுகிறார்கள்.  சிலர் பயந்தவர்களாய் ​கைகூப்பி உன்​னைத் துதிக்கிறார்கள்.  மஹரிஷிகளும், சித்தர்களும் உன்​னை ஸ்​​ஸோத்திரம் ​செய்கிறார்க்ள்.   ருத்தரர், ஆதித்யர், வசுக்கள், ஸாத்யர், விச்வ​தேவர், அசுவினி ​தேவர்கள், மருத்துக்கள், பித்ருக்கள், கந்தர்வர், யக்ஷர், அசுரர், ஸித்தர் எல்​லோரு​மே வியப்புற்று உன்​னைப் பார்க்கிறார்கள்.  உன் பல முகங்களையும் ஒவ்​​வொரு முகத்தில் கண்க​ளையும், ​கைக​ளையும், து​டைக​ளையும், கால்க​ளையும், வயிறுக​ளையும்  உள்ளதாய் பற்பல ​கோ​ரைப்பற்களால் அதிபயங்கரமாய் இருக்கும் உமது மஹத் மஹாரூபத்​தைப் பார்த்து யாவரும் பயம் ​கொள்கிறார்கள்.  நானும் அச்சமுருகி​றேன்".  
(அடுத்தவாரம் ​​தொடரும்)
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/                     
வெளியீடு: கீ​தை ​​ஸேவா டிரஸ்ட் & ஜனனி  ​சென்டர், மணம்பூண்டி, Email : geethaisevatrust@gmail .com         

No comments:

Post a Comment