Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Tuesday, October 11, 2011

சாரல் 05 துளி 28 02.10.2011


பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
சாரல்: 05- துளி: 28- ​தேதி: 02.10.2011 கிழ​மை ஞாயிறு
கீ​தையின் சாரலில்.....விஸ்வரூபதர்சன ​யோகம் (11ம்-அத்யாயம்)
   4வாப்ய​யெள ஹி பூ4தாநாம் ஸ்ரு​தெள விஸ்தர​ஸோ மயா//
   த்வத்த கமலபத்ராக்ஷ மஹாத்ம்யமபி சாவ்யயம்/(அத்.11 ஸ்​லோ.2)
      முந்​தைய அத்யாயங்களில் கூறிய​தை அர்சுனன் நி​னைவு கூறுகிறான்.  7ம் அத்யாயம் 6ம் ஸ்​லோகத்தில்  ஏதத்3​யோநீநி பூ4தானி ஸர்வாணீத்யுபதா4ரய/ அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக3த பரப4வ ப்ரலவயஸ்ததா2//  இவ்வாறு பகவான் கூறிய​தைப் பார்த்​தோம்.  அதாவது, “நான் இவ்வுலகில் ஜட மற்றும் ​சேதன ​பொருள்கள் யாவற்றிற்கும் உற்பத்திக்கான காரணம் நா​னே, பிரலயத்திற்கும் காரணம் நா​னே”  என்பதாக 7ம் அத்யாயத்தில் கூறிய​தைக் ​கேட்ட அர்சுனன், தாம​ரைக் கண்களு​டைய கண்ணா! என்று பகவா​னை அ​ழைத்து, எல்லாப் பிராணிகளின் உற்பத்தி மற்றும் நாஸம் இ​வைகள் விஸ்தாரமாகக் கூறப்பட்டதும், அழிவற்ற மகாத்மியமும் முந்​தைய அத்யாயங்களில் கூறப்பட்ட​தை அர்சுனன் நி​னைவுக்கு ​கொண்ர்கிறான்.
ஸ்​லோகத்தின் உட்கருத்து  “கமலக்கண்ணா! உன்னால் உயிர்களின் உற்பத்தி, நாஸம் இ​வைகள் விஸ்தாரமாகக் ​கேட்கப்பட்டது, மற்றும் அழிவற்ற் மஹாத்ம்யமும் என்னால் ​கேட்கப்பட்டதன்​றோ!–அர்சுனன்-
இங்​கே ஒரு துளி:  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 14) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) ஸ்ரீ​வேதவ்யாஸரின் தரிசனம் (VII) ஸ்ரீவிஷ்ணுவின் தாம​​​ரைப் பாதங்களில் மனம் ​வைத்தவராய், ​மோக்ஷ்​சோயுபாயத்திற்கு சாத​னமான மதத்​தை ​தோற்றுவித்த ஸ்ரீமதாச்சார்யர் இமயம​லையின் உச்சியில் அ​மைந்துள்ள ​மேல் பதிரிக்கு ​சென்ற​டைந்தார்.  அந்த ​க்ஷேத்ரத்​தைக் கண்டு இ​றைவனின் ஸ்ருஷ்டி​யை எண்ணி மனதாரப் ப்ரார்த்தித்தார்.  அம்ம​லை பூக்களுடன் கூடிய அழகான ​பெரிய மரங்கள் நி​றைந்ததாகவும், அங்கிருந்த நீர்நி​லைகளில் தாம​​​ரைப் பூக்கள் கண்களுக்கு ​பொலி​வைக் ​கொடுபக்பதாகவும், ஸத்ஜனங்களுக்கு அ​மைதி​யையும், ஆனந்தத்​தையும் ​கொடுப்பதாகவும் அ​மைந்திருப்ப​தைக் கண்டு ஸ்ருஷ்டிகர்த்தாவான ஸ்ரீவிஷ்ணு​வை மனதில் நி​னைத்து ப்ரார்த்தித்தார்.  மறுபக்கத்தில் பதிரி என்ற இலந்​தை மரங்கள் நி​றைந்த ப்ர​​தேசத்​தையும், பணி நி​றைந்த ப்ர​​தேசத்திலும் மரங்களும், கீச்சுகீச்சு என்ற ஒளியுடன் பற​வைகள் இருந்த​தையும் பார்த்து வியந்தார்.  
அங்​கே முனிவர்களும், ரிஷிகளும் நி​றைந்த ஆஸ்ரமம் ஒன்று இருந்தது.  ஆசார்யரின் பிர​வேஸத்​தைக்கண்டு அங்கிருந்த ​வைஷ்ணவ முனிவர்கள், ஸ்ரீமதாச்சார்ய​ரைக் கண்டனர்.  அவரு​டைய முப்பத்திரண்டு லக்ஷணங்கள் ​பொருந்திய ​தேகமும், சந்திர​னைப் ​போன்ற முகமும், ஆஜானுபாகுவான உடல​மைப்​பையும் கண்ட முனிவர்கள் ​வைத்தகண் எடுக்காமல் அவ​ரை​யே வியப்பூட்டும் வ​கையில் பார்த்துக்​கொண்​டே இருந்தனர்.
அங்​கே இருந்த முனிவர்கள், ஜடாமுடியுடன், ஞானப்பழமாய், பக்தி பரவசமாய், ​வைராக்கிய சீலராய் காமக்கு​ரோதங்க​ளை நீக்கி பற்றற்ற நி​லையில் காற்​றை​யே ஆகாரமாகக் ​கொண்டவர்களாய் இருந்தனர்.
கல்பதரு ​போன்ற இலந்​தை மரத்​தைச் சுற்றிலும் முனிவர்கள் அ​னேகம் இருக்க, ​சேஷ ​தேவனில் சயனிப்பவரும், கருடபகவா​னை​யே வாகனமாகக் ​கொண்டவரும், ​வேதத்திற்கு த​லைவருமாகிய ஸ்ரீஹரி​யின் அம்ஸார்த்த ரூபமாக ​தேஜஸ் நிரம்பிய, சந்திர​னைப் ​போன்ற பிரகாசமான முகப்​பொலிவுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ​வேதவியாச பகவா​னை தரிசித்த தருணத்தில், ஸ்​தோத்ரம் ​செய்து, அஷ்டாங்க நமஸ்காரம் ​செய்தார்.
ஸ்ரீ​வேதவ்யாசர் ஸ்ரீமதாச்சர்ய​ரைக் ​கைதூக்கி நிறுத்தி, நட்புடன் புன் முருவல் பூத்து, ஆலிங்கனம் ​செய்து​கொண்டு, உரிய ஆசனம் ​கொடுத்து அமரச் ​செய்தார்.  அங்கிருந்த முனிவர்கள், வாயு பகவானின் அவதார புருஷராக வந்திருக்கும் ஆசார்யர்ருக்கு சம்பரதாய மரியா​தை-உபசாரங்க​ளை அளித்து ​கெளரவித்தனர். ஸ்ரீமதாச்சார்யர் ஆசனத்தில் அமர்ந்தபின்பு தாமும் அமர்ந்தனர்.
ஸ்ரீ​வேதவ்யாஸரிடம் ​வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களில் கூறப்படும் பகவத்தத்துவ ஞானத்​தை ​கேட்டு ​தெரிந்து​கொண்டு, அவரின் உள்ளத்​தை நன்கு அறிந்தவராய் அவ​ரை வணங்கி அவரிடம் அனுமதிப்​பெற்று ​மேல் பதிரியிலிருந்து புறப்பட்டார்.  
உடுப்பி ஸ்ரீகிருஷ்ண​ரை ஸ்தாபித்தல்  :
தான் திரும்பி வரு​வே​னோ, வரமாட்டா​னோ என்று கூறிச்​சென்ற ஸ்ரீமதாச்சார்யர், நலமுடன் திரும்பி வந்த​தைக் கண்ட சத்யதீர்த்தர் மற்றும் அங்கிருந்த சீடர்கள் மிகவும் மனமகிழ்ச்சிய​டைந்தனர்.
பிறகு, தம்மிடம் வாதம் ​செய்ய வந்த திற​மைமிக்க பண்டிதர்க​ளை எல்லாம் தன் வாதத்திற​மையால் ​வென்று, பாட்ட, பிரபாகர, ​வை​சேஷிக, ​நைய்யாயிக, சார்வாக, ​பெளத்த ​போன்ற ஆறு சித்தாந்தங்க​ளை தகுந்த ஆதாரங்க​ளைக் ​கொண்டு நிராகரித்தார்.  அங்கிருந்த அந்தணர்கள் ஸ்ரீமத்வரின் திற​மை மிகுந்த வாதத்​தைக் கண்டு “ஸர்வமும் அறிந்த ஞானி என்றும் “ஸ்ரீமதாசார்யருக்கு சமமானவர் யாரமில்​லை என்றும் புகழாரம் சூட்டினார்கள்.  சாஸ்திரத்தில் வல்லவரான ​​சோபன பட்டர் என்ற அந்தணர், ஸ்ரீமத்வரின் உண்​மையான தத்துவத்​தை ஏற்று ஆங்காங்​கே பிரச்சாரம் ​செய்தார்.  (இன்னும் ​தொடரும்...........)

தே3வம் நாராயணம் நத்வா, ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
பரிபூர்ணம் கு3ரூம்ஸ்சான் கீ3, தார்த்த2ம் வக்ஷ்யாமி ​லேஸத//
ஸமஸ்த கு3ண ஸம்பூர்ணம், ஸர்வ​தோ3ஷ விவர்ஜிதம்/
நாராயணம் நமஸ்க்ருஸத்ய, கீ3தா தாத்பர்ய முச்ய​தே//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/


No comments:

Post a Comment