Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Tuesday, March 15, 2011

சாரல் 4 துளி 51 தேதி 20.0.11 (2nd page)


சென்ற பக்கத்தின் தொடர்ச்சி 3 பக்கம்
ஸ்லோகம் :19
3ஹூநாம் ஜந்மநாமநந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்3யதே/
வாஸூதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூது3ர்லப://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பிறவிகள் பல கடந்தும் வாசுதேவனே எல்லாம் என்று அறிந்தவன் என்னை அடைகிறான். அத்தகைய மஹாத்மா மிகவும் அறிது.
ஸ்லோகம் : 20
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்3யந்தேஅந்யதே3வதா:/
தம் தம் நியமமாஸ்த2ாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பெறும்பாலோர் ஆசையால் அறிவிழந்து தங்களுடைய பூர்வ கர்மத்தின் ஸ்வபாவத்தால் தூண்டப்பட்டு வேறு தேவதைகளை சரணடைகிறார்கள்.
ஸ்லோகம் :21
யோ யோ யாம் யாம் தநும் ப4க்த: ஸ்ரத்3த4யார்சிதுமிச்ச2தி/
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்3த4ாம் தாமேவ வித3த4ாம்யஹம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எவனெவன் எந்தெந்த தேவதையை பூஜிக்க விரும்புகிறானோ, அந்த பக்தனுக்கு அந்த தேவதையிடமே புத்தியை ஸ்திரமாக இருக்கச்செய்கிறேன்.
ஸ்லோகம் :22
ஸ தயா ஸ்ரத்3த4யா யுக்தஸ்தஸ்யாராத4நமீஹதே/
லப3தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எதை எந்த தேவதையிடம் ஸ்ரத்தையுடன் வேண்டினாலும் அது என்னால் தீர்மானிக்கும் அளவே அவனுக்கு கிடைக்கிறது.
ஸ்லோகம் :23
அந்தவத்து ப2லம் தேஷாம் தத்3ப4வத்யல்பமேத4ஸாம்/
தே3வாந்தே3வயஜோ யாந்தி மத்3ப4க்தா யாந்தி மாமபி//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "தேவதைக் கொடுக்கும் பலன் அழிவுள்ளது என்னைத் துதிப்பது அழிவற்றது.
ஸ்லோகம் :24
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாம பு3த்3த4ய:/
பரம் ப4ாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "நான் இணையற்றவன், அழிவற்றவன், பிறப்பற்றவன், இறப்பற்றவன்-மனதிற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட மேலான என்னை மனிதனைப்போல் நினைப்பவன் மதியீனன்.
ஸ்லோகம் : 25
நாஹம் ப்ரகாஸ: ஸர்வஸ்ய யோக3மாயாஸமாவ்ருத:/
மூடே4ாஅயம் நாபி4ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "யோக மாயையில் மறைந்துள்ள என்னை பிறப்பு-இறப்பு உள்ளவனாக நினைக்கும் மனிதன் (மூடே4ாயம்) மூடனே.
ஸ்லோகம் : 26
வேத3ாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சர்ஜூந/
ப4விஷ்யாணி ச பூதாநி மாம் து வேத3 ந கஸ்சந//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "காலங்கள் மூன்றும் நான் அறிவேன், பக்திஇல்லாதவன் என்னை அறியான்.
ஸ்லோகம் : 27
இச்ச3ாத்3வேஷஸமுத்தே2ந த்3வந்த்3வமோஹேந ப4ாரத/
ஸர்வபூ4தாநி ஸம்மோஹம் ஸர்கே3 யாந்தி பரந்தப//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "இரட்டைகள் வடிவான மயக்கத்தினால் உயிர்கள் அறியாமையை அடைகின்றன. (இரட்டைகள் என்பது விருப்புவெறுப்பு, சுகம்துக்கம், மகிழ்ச்சிதுயரம், லாபநஷ்டம் போன்றவைகளாகும்)
ஸ்லோகம் : 28
யேஷாம் த்வந்தக3தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்/
தே த்3வந்த்3வமோஹநிர்முக்தா ப4ஜந்தே மாம் த்3ருட4வ்ரதா://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "இரட்டைகளை விலக்கி பயன் கருதாமல் சிறந்ததைச் செய்பவன் என்னை வழிபடுவான்.
ஸ்லோகம் : 29
ஜராமரணமோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே/
தே ப்3ரஹ்ம தத்3விது3: க்ருத்ஸ்நமத்4யாத்மம் கர்ம சாகி2லம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "மூப்பு மரணத்தில் விடுபட என்னை சரணடைந்து என்னையே துதிப்பவன் ப்ரம்மம் கர்மம் அறிவான்.
ஸ்லோகம் : 30
ஸாதி4பூ4தாதி3தைவம் மாம் ஸாதி4யஜ்ஞம் ச யே விது3:/
ப்ரயாணகாலேஅபி ச மாம் தே விது3ர்யுக்தசேதஸ://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "அதிபூதம், அதிதைவம், அதியக்ஞம் என்று என்னை யார் அறிகிறார்களோ அவர்கள் என்னிடத்தில் மனதை வைத்து மரணத்தருவாயில் நினைத்தாலும் என்னையே அடைகிறார்கள்.

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் / 
நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//


ஜிதந்தே ஸ்தோத்ரம் (தமிழாக்கம் by வாயுமித்ரன்)
ஜிதந்தே ஸ்தோத்ரம் பிரம்மதேவனால் பரமாத்மாவைக் குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாகும். இந்த ஸ்தோத்திரத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஜிதந்தே என்ற வார்த்தையுடன் ஆரம்பமாவதால் இது ஜிதந்தே எனப்பெயர்பெற்றது. இச்ஸ்தோத்ரம் ஐந்து அத்யாயங்களைக் கொண்டது. 'ஜிதந்தே' என்றால் "உன்னுடைய மகிமை குறைவற்றதாயிருக்கட்டும்" என்று பொருள். இது பாஞ்சராத்ராகம மஹோபநிஷத்தில் இடம்பெற்றதாகும். பிரார்த்தனையின் முறை அபூர்வமானது. பரமாத்மாவுடன் ஜீவன் நேரடியாகப் பேசும்வண்ணமானக் கருத்தைக்கொண்டது. ஜீவனின் இயல்பையும், குணங்களையும அவ்வாறே பரமாத்மாவின் வர்ணனையும், ஜீவனின் பரமாத்மாவைக் குறித்த ப்ரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது. வேதத்தின் சாரமாகும் இந்த ஸ்தோத்திரம். மனிதனையும், பரமாத்மாவையும், துல்லியமாக கனிக்கிறது இந்த ஸ்தோத்திரம். மிகவும் கொடுமையானதும், எல்லைகள் அற்றதும், ஆழம் காணமுடியாததும், கடக்கக் கஷ்டமானதும், முடிவில்லாத துன்பங்களின் இருப்பிடமாவதும், பயமுறுத்துவதும், புலன்களின் சுழற்சியால் நிரம்பப்பட்டிருக்கிறதுமான இந்த சம்சார சாகரத்தில் ஒவ்வொரு ஜீவனும் அவனுடைய கர்மாதீனத்தினாலே சுக துக்கங்களை அனுபவித்து வருகிறான். 
மனிதன் என்பவன், சிறியவன், நன்றி கெட்டவன், தீய செயல்களை புரிபவன், பாபங்களின் தொகுப்பானவன், ஆயிரக்கணக்கான தோல்விகளின் பெட்டகம், பாதுகாப்பு மற்றும் ஆதரவு இல்லாதவன், ஏமாற்றமடைந்தவன், வெற்றியில்லாதவன், வறுமையில் உழல்பவன், வேதனை அளிப்பவன், தீயவைகள் புரிபவன், கொடூரமானவன், வஞ்சனைபுரிபவன், நா காக்காதவன், பிடிவாதக்காரன், பரமாத்மாவைத் தவிர வேறு புகலிடம் இல்லாதவன், துன்பத்திற்கு இருப்பிடமானவன், நல்ல நடத்தை இல்லாதவன், மூன்றுவித தாபங்களின் வெப்பத்தினால் எரிந்து கொண்டிருப்பவன், பிறப்பு, வியாதி, முதுமை, இறப்பு என்னும் நிலைகளினால் துன்பம் அடையக்கூடிய தேகம் எடுத்தவன். எந்த நற்குணமும் இல்லாதவன், மூடன், பலமற்றவன், தீயனவற்றில் விருப்பமுள்ளவன், தன்னுடைய முயற்சிகளில் வெற்றி பெறாதவன், ஏமாற்றத்திற்குட்பட்டவன்.
இதற்கு மாறாக பரமாத்மாவோ, ஐஸ்வர்யம், வீர்யம், யஸஸ், க்ஞானம் மற்றும் விக்ஞானம் என்னும்படியான ஆறுகுணங்களை முழுமையாக உடையவ்ன். அவன் பேரானந்த ஸ்வரூபன். அவனே மிக உயர்ந்த பிரம்மன். அவனே அனிருத்தன், பித்யும்னன், சங்ர்ஷணன், வாசுதேவன் என்ற வடிவங்களில் பிரகாசிக்கிறவன். எல்லா மங்களகரமான குணங்களின் மொத்த உருவம் அவன். உலகை ஆக்கலும், காத்தலும் அழித்தலும் அவனே. சராசரங்களில் உறையும் எல்லாப் பொருட்களைக்காட்டிலும் உத்தமன் அவனே. ஸ்ரீலட்சுமியின் நாதன் அவன். அவனுடைய பாதாரவிந்தத்தை தேவர்களும் ரிஷிகளும் பூஜிக்கிறார்கள். ஆனந்த பூர்ணன் அவன். பிரகாசத்தின் கருவூலம் அவன். குணங்களைக் கடந்தவன். நான்முகனுக்கும் முந்தியவன். அவனுடைய ஞானமும். சக்தியும் அளவிடமுடியாதன. பிரபஞ்சமும், பிரபஞ்சத்தைவிட வேறானவனும், முடிவில்லாதவனும் அவனே. சாஸ்வதமானவன், தோஷமற்றவன், ஈடில்லாதவன், தேவர்களுக்கெல்லாம் தேவன், ப்ரபஞ்சத்தின் தலைவன், ஸ்வதந்திரன், ஆசைகளற்றவன், அதிகாரி, பெயர்க்கமுடியாதவன், அனைத்திலும் முழுமையானவன். அவனின் ஞானம், பலம் மற்றும் யோகம் சாஸ்வதமானவை. பிரபஞ்சத்தில் பிரம்ம ருத்ராதி தேவதைகளின் கர்த்தவ்யத்தை ஊக்குவிப்பவன். பக்தர்களுக்கு பிரியமானவன். பிரபஞ்சத்தை படைப்பவனும் அழிப்பவனும் அவனே. பிரபஞ்சத்தின் உரிமையாளனும் வழிகாட்டியும் அவனே. வெற்றிகொள்ள முடியாதவன். மிகவும் மகிமை பொருந்தியவன். வேதங்களினால் அறியப்படுபவன். தோற்றம், நிலைத்தல், முடிவு ஆகியவைகளுக்கு காரணகர்த்தா அவனே.
மேற்கண்டவாறு இருவேறு குணங்களைக் கொண்டிருக்கும் மனிதனும், பரமாதமாவும் உறவுகொள்ள முடியுமா என்றால் முடியும் என்று அறைகூவுகிறது இந்தச் ஸ்லோகம்.
பரமாத்மாவை அடைய யாகம், யக்ஞம் இவைகள் அவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வேதத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை அநேகர் அறிவதில்லை. விதிக்கப்பட்ட கர்மம் எது, ஒதுக்கப்பட்ட கர்மம் எது என்பது கூட அறியாதிருக்கிறார்கள். அறிந்திருக்கும் சிலரோ அதைக் கடைப்பிடிக்க சக்தியற்றவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள், ஐம்புலன்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பவர்கள். அவர்களின் தேகம் வியாதியின் சித்ரவதைக்கும், மனம் ஐம்புலன்களின் ஆளுகைக்கும், வாக்கு உண்மையல்லாத மற்றும் கடுமையானதுமான மாசுகளுக்கும், வசமாயிப்பதால் சக்தியற்றவர்களாயிருக்கின்றனர். மேலும், நாம் செய்வது நல்ல செயல் என்று நினைத்துக்கொண்டு உண்மையில் சாஸ்திரத்தில் ஒதுக்கப்பட்ட தீய செயலை புரிந்துவிடுவோமா என்ற பயத்தின் காரணமாகக் கூட சிலர் ஒதுங்கி விடுகின்றனர். அறியாமை, சக்தியின்மை, சோம்பேரித்தனம், மனதில் தோன்றும் தீய எண்ணம், முயற்சி இருந்தும் வெற்றி பெறாமை போன்றவைகள் வேறு சில காரணங்களாகின்றன. பின் பரமாத்மாவை அடைய என்னதான் வழி?
அவனுடைய பாதாரவிந்தங்களில் சரணடைந்து அவனின் கருணையை யாசிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. மனிதன் சரமாகதன், சரணார்த்தி , பரமாத்மாவே சரண்யன், ப்ரபன்னமாகும் (சரணடையும்) ஜீவனுக்கு பரமாத்மா பிரஸன்னமாகிறார். மனிதன் தவறுகளின் மொத்த உருவம் என்றால், அன்பு, தயை மற்றும் கருணையின் மொத்த உருவம் பரமாத்மா. பலவிதமான கடமைகளை பரமாத்மா விதித்திருந்தாலும், அவனுக்கு மிகவும் உகந்த அவர்மீது வைக்கும் அத்யந்த பக்தியின் மூலம் அவனது அளப்பறிய மகிமைகளை அறிந்து கொண்டுவிடலாம்.
பிரபஞ்ச நன்மைக்காகவே பிரம்மாவைப் படைத்ததைக் காட்டிலும், நரசிம்மாதி அவதாரங்களை எடுத்திருந்ததைக் காட்டிலும், ப்ராருக்த ரூபமே இல்லாதபோதிலும், பக்தர்களின் சந்தோஷத்திற்காக ரூபங்களை தரித்ததைக் காட்டிலும் வேறு என்ன மகிமைகளை பகவான் பக்தர்களின் ப்ரீத்திக்காக செய்ய வேண்டும்?
தான் பரமாத்மாவின் சேவகன், சீடன், மற்றும் குழந்தை என்றும் பரமாத்மா தனக்கு எஜமானன், குரு, மாதா, பிதா, நண்பன், சகோதரன், மகன், உறவினன் என்றும் மனிதனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கவேண்டும். கல்வி, செல்வம், மற்றும் மனிதன் விரும்பும் அனைத்தும், பரமாத்மாவின் வெகுமதியாகும். ஆகையால் மனிதன், தன்னுடைய பலமின்மை மற்றும் அனுகூலமின்மை ஆகியவைகளை புரிந்துகொண்டு பரமாத்மாவை சரணடைந்தால் செய்த தவறுகளை மன்னித்து தன்னுடைய ப்ரீதியினாலும், கருணையினாலும் அவனைக் காப்பாற்றுகிறார்.
பக்தனுக்கு பரமாத்மா தனிப்பட்ட சொந்தம். அழகே உருவானவர், சர்வலங்கார பூஷிதன், தெய்வீக ஆபரணங்களைத் தரித்தவர் அவரின் ஹிருதயம் கருணையே வடிவெடுத்தது. அவரின் கடாக்ஷமே பொங்கும் மங்களத்தை அளிக்க வல்லது. சொந்த கண்களினால் பகவானைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமாக பக்தன் இருக்க வேண்டும். எவ்விடத்திலும், எந்நேரத்திலும் பகவானின் சேவகனாக இருக்க பக்தன் மிகவும் பிரியப்பட வேண்டும். எந்த ஒரு செயலையும் பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சாக்ஷாத் ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடிய வைகுண்டபதியாகிய பரமாத்மா மோக்ஷத்திலும் தனக்கு இடும் கட்டளைளை எதிர்நோக்கி பக்தன் ஆவலுடன் இருக்க வேண்டும். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் இவைகளில் எந்த பற்றுதலும் இல்லாமல் பரமாத்மாவின் சேவகனாக, அவனின் பாதாரவிந்தங்களில் அடைக்கலம் புகுவதையே பக்தன் ஆசைப்பட வேண்டும். அனைத்து பிறப்புகளிலும், வைஷ்ணவனாக இருக்க வேண்டுமென்றே ஆசையைத் தவிரவேறு ஆசை எதுவும் அவனுக்கு இல்லை என்பதாக இருக்க வேண்டும். அவனுடைய ஒரே ஆசை பரமாத்மாவின் அன்பும் கருணையும் பெறுவதுதான். எங்கு பிறந்தாலும் எப்படிப்பட்ட பிறவி எடுத்தாலும், எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் ஸ்ரீஹரியின் சேவகனாகவே இருக்க ஆசைப்பட வேண்டும். 
இப்படிப்பட்ட ஆசையுள்ள பக்தன் பரமாத்மாவை அடைகிறான் என்பதில் இருவேறு கருத்துக்கள் உண்டோ!

பக்தி முரசு என்ற இந்த இதழ் ஒரு பக்க வாராந்திர இதழ். இதில் கீதையின் சாரலில் என்னும் தொடரில் ஸ்ரீமத்பகவத்கீதையின் 12,7,8,9 ஆகிய அத்யாயங்களின் உட்கருத்துக்கள் வெளிவந்துள்ளன. தற்போது 10வது அத்யாயத்தின் 27வது ஸ்லோகத்தை பாராயணம் செய்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இறுதி மலரை சிறப்பு மலராக வெளியிட்டு வருகிறோம். அதுபோலவே இந்த இதழ் நான்காம் ஆண்டின் சிறப்பு மலராக வெளிவந்துகொண்டிருக்கிறது. வெளியூர்களில் இருக்கும் ஆர்வமுள்ள வாசக பக்தர்கள் இந்த இதழை ஒவ்வொரு வாரமும் இணையதளத்தில் இலவசமாக படித்து மகிழலாம். இணையதள முகவரி (Internet address) www.Bhakthimurasu.blogspot.com. என்ற விலாசத்தில் தனிக் கட்டணம் ஏதுமின்றி படித்து மகிழலாம். பரமாத்மனின் அருளும், ஆசியும் நம்மீது விழ என்றென்றும் ப்ரார்த்தனை செய்வோமாக
ஏகம் ஸாஸ்த்ரம் தே3வகீபுத்ர கீ3த-
மேகோ தே3வோ தே3வகீபுத்ர ஏவ/
ஏகோ மந்த்ரஸ்தஸ்ய நாமாநி யாநி
கர்மாப்யேகம் தஸ்ய தே3வஸ்ய ஸேவா//

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

இப்படைப்பினை உத்ராதிமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ1008ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாதங்களில்
 பணிவுடனும் பக்தியுடனும் நமஸ்கரித்து சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே/
ஸஹஸ்ரநாமதத்துல்யம் ராமநாம வராநதே//

ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத்பூர்ணமுத3ச்யதே/
பூர்ணஸ்ய பூர்ணமாத3ாய பூர்ணமேவாவஸிஷ்யதே//
பாவபோதக்ருதம் ஸேவே ரகூத்தும மஹாகுரும்/
யச்சியஷ்ய சிஷ்ய சிஷ்யாத்யா டிப்பணயாசார்ய ஸம்ஜ்ஜிதா//
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச/
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே//
மோத3தீர்த்தகராப்ஜோத் தஸத்யாத்மயதி ஸேகரம்/
நமாமி அனிஷம் ப4க்யா தத்வஞானார்த ஸித்த4யே//





ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே / 
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

வெளியீடு : கீதை சேவா டிரஸ்ட் & ஜனனி DTP சென்டர் , மணம்பூண்டி, திருக்கோவிலூர் தாலூகா

No comments:

Post a Comment