Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Tuesday, March 15, 2011

சாரல் 4 துளி 51 தேதி 20.03.11 (this year end)

ஸ்ரீமத் பகவத் கீதையின் "ஜ்ஞான விஜ்ஞான யோகம்" (7ம் அத்யாயம்)
வாஸூதேவஸூதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்/
தேவகீ பரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்//
ஸ்ரீமத் ஹனுமத் பீ4ம மத்4 வாந்தர்க்கத ராமக்ருஷ்ண
வேத3வ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவிற்கும் அர்சுனனுக்குமிடையேயான உரையாடலின் தொகுப்பே ஸ்ரீமத்பகவத்கீதை. இதில் 1 முதல் 6 அத்யாயங்கள் வரை கர்மயோகம் என்றும் 7 முதல் 12 அத்யாயங்கள் வரை பக்தியோகம் என்றும் 13 முதல் 18 வரை ஞான யோகம் என்றும் கருதப்படுகிறது. 
வாழ்க்கையில் மனிதன், துக்கத்திலிருந்தும், லெளகீக விஷயங்களிலிருந்தும் விடுபடவும், ஆனந்த ரூபமான மோக்ஷத்தை அடைவதற்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத்பகவத்கீதையின் மூலம் நமக்கு அருள் பாவிக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். கீதை மனித வாழ்க்கைக்கு ஒரு சட்டநூல் என்ற கண்ணோட்டத்தில் நாம் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளவேண்டும். போக்குவரத்து விதிகளை மீறினால் விபத்து ஏற்படுவது போல, கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் வாழ்க்கைக்கான விதிமுறைகளை மீறினால், வாழ்க்கை என்னும் பயணத்தில் விபத்துக்களைத் தவிர்ப்பது கடினமாகிறது. 
ஸ்ரீமத் பகவத்கீதையில் ஜ்ஞான விஜ்ஞான யோகம் என்னும் 7ம் அத்யாயத்தின் சாராம்சத்தையும், அதைத் தொடர்ந்து ஸ்லோகங்களையும், அதன் உட்கருத்துக்களையும் இந்த ஒருபக்க இதழின் நான்காம் ஆண்டின் இறுதி மலராகவும் சிறப்புமலராகவும் சமர்ப்பிக்கிறோம்.
'ஞானம்' என்பது பகவானைப்பற்றி அறிவது. அதாவது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பூர்ணமானவர் என்றும், சர்வோத்தமன் என்றும் புரிந்துகொள்வது ஞானமாகும். அதுபோலவே ஸ்ரீகிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் அதிபதி. ஆக்கலும் அழித்தலும் அவரே போன்ற தத்துவங்களை உணர்ந்து, ஸ்ரீமத்பாகவதம் போன்ற நூல்களிலிருந்து பகவானின் லீலைகளையும், அவனின் சக்தியையும் அறிந்து அவனுடன் உறவுகொண்டாடுவது 'விஜ்ஞானம்' ஆகும். இந்த ஞானத்துடன் கூடிய விஜ்ஞானத்தை கலந்து "ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே" என்பதாக பகவானின் பூர்ணத்துவ பரதத்துவத்தை உணர்வதே பகவானை அறிவதாகும். இந்த அத்யாயத்தில் இந்த தத்துவத்தை பகவான் எடுத்துரைக் கிறார்.
அத்யாயச் சுருக்கம் : 
அர்சுனன் : கேசவ ! ஸ்ரத்தையான பக்தியுடன் உன்னை தியானிப்பவன் உயர்ந்தவன் என்று கூறினாய். நான் உன்னையே நினைந்து, உன்னையே தியானித்து உன்னைப்பற்றி அறிய வேண்டும். அதற்கான உபாயத்தைச் சொல் கிருஷ்ணா, என்று கேட்கிறான்.
ஸ்ரீகிருஷ்ணர் : அர்சுனா! ஆழந்த மனதுடன் என்னையே நினைந்து நினைந்து நெக்குறுகினாயானால் என்னைப் புரிந்து கொள்ள வழிகிடைக்கும்.
அர்சுனன் : கிருஷ்ணா! உன்னைப் புரிந்துகொள்வதென்பது என்ன அவ்வளவு அரிதா? அப்படியானால் எவ்வளவோ மனிதர்கள் உன்னை உணர்ந்திருக்கிறார்களே!
பகவான் : பரந்தபா! ஆயிரம் மனிதர்களில் ஒருவனே என்னை ப்ரார்த்திக்கிறான். அவர்களில் யாரோ ஒருவனே ஞானம் பெறுகிறான். ஞானம் பெற்றவரில் எவனோ ஒருவனே என்னைத் தத்வரீதியாக அறிகிறான்.
அர்சுனன் : வாசுதேவ! உன்னின் அருமை பெருமைகளை எனக்கு பூர்ணமாக உபதேஸிக்க வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன். 
பகவான்: நீண்ட புஜங்களையுடைய அர்சுனா! இந்த உலகமனைத்தையும் படைப்பவனும் அழிப்பவனும் நானே. எல்லாமும் அசேதன மற்றும் சேதப் ப்ரக்ருதியிலிருந்து உண்டானவை. அசேதனன் என்பது அறிவில்லாத ஜடவஸ்து. சேதனன் என்பது அறிவுள்ள வஸ்து. என் வசமாய் உள்ள ஜடப் ப்ரக்ருதிகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்று தத்துவங்களும் சேர்ந்து ஆக எட்டு விதமாகப்பிரிந்து என் வசமே உள்ளது. இவைகள் மட்டுமல்லாமல் அதன் அபிமானியான பிரம்மா முதல் அனைத்திற்கும் தாயுமான சேதனப்ரக்ருதியான ஸ்ரீமஹாலட்சுமி தேவியும் என்வசமே என்று தெரிந்துகொள். ஸ்ரீலட்சுமி தேவியால் இவ்வுலகம் தாங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரபஞ்சத்தை நானே தோற்றுவிக்கிறேன். நானே நாஸம் செய்கிறேன். என்னைவிட உயர்ந்த பொருளும், எனக்கு நிகரான பொருளும் முக்காலத்திலும் இல்லை. பல மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும் ஒரு நூல் மணிகளைத் தாங்கிக்கொண்டிருப்பது போல இவ்வுலகம் அனைத்தும் என்னிடம் கோர்க்கப்பட்டுள்ளது. நானே கண்களுக்கு புலப்படாமல் இருந்துகொண்டு யாவற்றிலும் நிரைந்திருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்.
குந்தியின் மைந்தா அர்சுனா! நானே நீர், சந்திரன், சூர்யன், வேதம் ஆகாஷம், மனுஷன் ஆகிய அனைத்திலும் அதனதன் தத்துவமாக இருக்கிறேன். யாவற்றிற்கும் வித்தாகவும், அறிவாளிகளின் அறிவாகவும், பலசாலிகளின் பலமாகவும் நானே இருக்கிறேன். 
மேலும் பரதவம்ஸத்தில் தலைசிறந்தவனே அர்சுனா! நான் பலசாலிகளிடம் ஆசையும் பற்றும் இல்லாத பலமாகவும் (வலிமை) ஜீவர்களிடம் தர்ம ஸாஸ்திர ஸம்பிரதாயத்திற்குட்பட்ட காமத்தில் காமனாகவும் இருக்கிறேன். முக்குண உணர்வுகளும் நானே, ஆயினும் அவற்றில் நானும் அவை என்னிடமும் இல்லை, என்று சொன்னான் கீதாசாரியன்.
அர்சுனன் : மதுசூதனா! 'நீயே எல்லாமும் என்கிறாய், ஆனால் 'அவற்றில் நான் இல்லை' என்று கூறுவதன் பொருள் எனக்கு புரியவில்லையே? விளக்கமாகக் கூறு' என்றான் அர்சுனன்.
பகவான்: அர்சுனா! எங்கும் நிறைந்து யாவற்றையும் ஆட்டுவிப்பவன் நானே என்பது வாஸ்துவமே. ஆனால் இவையாவும் லீலைகளே அன்றி இவற்றினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. ஒரு ஜீவன் உடல் ரூபத்தை பெற்று அந்த உடலால் பலன்களை அனுபவிக்கிறான். 'சரீரமாத்யம் கலு தர்மஸாதன' என்பது போல, அந்த ஜீவன் உடலினுள் இருந்துகொண்டே எல்லா நற்காரியங்களையும் செய்ய வேண்டும். அந்த ஜீவன் உடலிலிருந்து பிரிந்துவிட்டால் அந்த உடல் ஜடமாகிறது. ஆக சரீரத்தால் ஜீவனுக்கு நிறைய உபகாரங்கள் உண்டு. நான் எவ்வித பலனையும் கருதி எந்தக்காரியத்தையும் செய்யவில்லை. அதில் எனக்கு ஒட்டுதலில்லை. அதனால் நான் அதில் இல்லை என்றேன், மேலும் ஸாத்வீக, ராஜஸ, தாமஸ குணத்தால் மயங்கும் ஜீவன்கள் என்னின் அருமைபெருமைகளை தெரிந்துகொள்வதில்லை.
அர்சுனன்: மாதவா! நீ எங்கும் நிறைந்திருக்கிறாய். எல்லாவற்றையும் நீயே செய்விக்கிறேன் என்கிறாய், ஆனால் எங்களுக்கு கண் இருந்தும் உன்னைக் காணமுடியவில்லையே அது ஏன்?
பகவான்: பரந்தபா! நீ கூறுவது வாஸ்தவமே. கண் இருந்தாலும் என்னை உங்களால் காணமுடியாது. உங்களுக்கும் எனக்கும் நடுவே திரை ஒன்று உள்ளது. அதுவே என்னைக் காணமுடியாதபடிச் செய்கிறது.
அர்சுனன்: கண்ணா! அப்படியா! அத்திரை எதுவோ? அதையார் விரித்திருக்கிறார்கள்? விளக்கமாகக் கூறு.
பகவான்: அத்திரைக்கு பெயர் மாயை. மாயை என்பது பொய்யானது அல்ல. அது மஹாசக்திபெற்றது. முக்குணமுடையது. மனிதன் அனுபவிக்கும் பொருள்கள் அனைத்துமே மாயையின் செயல்பாடுதான். அந்த மாயா சக்தியை நானே விரித்திருக்கிறேன். ஜீவர்கள் அனேக பாவங்கள் செய்கிறார்கள். அதனால் அவர்கள் என்னைக் காணக்கூடாது என்பதற்காக நான் விளையாட்டாக விரித்த வலை அது. எவ்வளவு பல சாலியாக இருச்தாலும் அத்திரையை விலக்கி என்னைக் காணமுடியாது.
அர்சுனன்: வாசுதேவா! ஜீவர்களெல்லாம் பாவிகளா? ஜீவர்கள் உன்னைக் காண்வேண்டும் என நினைத்தால் அது சாத்தியம் இல்லையா?
பகவான்: அர்சுனா! என்னையே எப்போதும் புகலாகக் கொண்டு சரணாகதி அடைந்தால் மாயையை எளிதில் கடக்கலாம்.
அர்சுனன்: உன்னை சரணாகதி அடைந்தால் மாயைக் கடக்கலாம் என்றால் ஏன் எல்லோராலும் இயலவில்லை?
பகவான்: அர்சுனா! என்னை உயர்ந்தவனென்று யாரும் நினைப்பதில்லை. என்னைக் கடவுளென்று நினைக்காதவர்கள் அதிகம். அதனால் நான் கூறும் உபதேஸத்திற்கு அவர்கள் செவிமடுக்கவா செய்வார்கள்! 
அர்சுனன்: ஜகத்பதியே! மனிதர்கள் இப்படிக்கூடவா இருக்கிறார்கள். அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள். அவர்களிடையேயான வேறுபாடுகள் என்ன? யாவற்றையும் விள்கமாகக் கூறு.
பகவான்: பாவம் செய்தவர்கள் நான்கு வகையினர் உண்டு. அறிவிழந்தவன்(மூடன்) அசுரத்தன்மை கொண்டவன், மனிதரில் தாழ்ந்தவன், மாயையில் உழல்பவன் போன்றோர் என்னைத் துதிக்க மாட்டார்கள். 
மூடர்களானவர்கள் தேகாத்ம விவேகமில்லாதவர்கள். என் மீதான சிந்தனை அற்றவர்கள். உலகலெளகீக சுகங்களே பெரியதென எண்ணி காலம் கழிக்கும் ஸம்சாரிகள் இவர்கள்.
அசுரத் தன்மைக்கொண்டவர்கள் குரூரமான பாவங்கள் செய்தவர்கள். இவர்கள் ராவணன் ஹிரண்யன் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிறவி முதற்கொண்டே என்னை த்வேஷிப்பவர்கள்.
மனிதனில் தாழ்ந்தவன் அப்பாவி. நான் மஹாசக்தி பெற்றவன் என்ற நினைவால் என்னை நெருங்க அஞ்சுபவன். பகவானின் நாமங்களைச் சொன்னாலே போதும் அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்னும் தெளிவுஇல்லாதவன்.
மாயையில் உழல்பவர்கள் என்னை வஞ்சிப்பவர்கள். அதிக பாவம் செய்தவர்கள். கபடமான பேச்சுடையவர்கள். அறிவு(பகவானின்) மிகக் குறைந்தவர்கள்.
அர்சுனன்: கேசவா! உன்னைத் துதிக்காமல் பாவம் செய்தவர்களின் வகையினரைச் சொல்லிவிட்டீர். அப்படியானால் உலகில் புண்ணியம் செய்தவர்களே இல்லையா? அவ்வானவர்கள் எவ்வகையைச் சேர்ந்தவர்கள்?
பகவான்: பரதவம்ஸத்தல் சிறந்தவனே அர்சுனா! புண்ணியசாலிகளில் நான்கு வகையினர் உண்டு. அர்த்தார்த்தீ, ஆர்த்தன், ஜீஜ்ஞாஸூ, ஞானி. இவர்களில் ஞானியைத் தவிர ஏனையோர் ஏதோ ஒரு பலன் கருதி என்னை வேண்டினாலும் அவர்கள் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களே.
செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு என்னைத் துதிப்பவன் அர்த்தார்த்தீ; துன்பத்தில் சிக்குண்டு அதிலிருந்து விடுபட என்னைப் ப்ரார்த்திப்பவன் ஆர்த்தன்; என்னிடம் பக்திகொண்டு என்னை அறிய முயற்சிகளை மேற்கொள்ள ஞானத்தைத் தேடுபவன் ஜீஜ்ஞாஸூ; என்னை ஸ்த்ரமாக த்யானித்து அறிந்துகொண்டவன் ஞானி. இவன் 'வாசுதேவம் ஸர்வம்' என்ற ஞானம் பெற்று மற்ற ஆசைகளிலிருந்து விடுபட்டவன்.
அர்சுனன்: வாசுதேவா! அந்த புண்ணியசாலிகளுள் ஞானி ஏன் சிறந்தவன்?
பகவான்: அர்சுனா பக்தனில் ஞானி சிறந்தவன், நான் அவனுக்கும் அவன் எனக்கும் பிரியமானவன். மேற்சென்ன நால்வகை பக்தரும் சிறந்தவரே யாயினும் என் ஸ்வரூபமான ஞானியே மிகவும் உயர்ந்தவன் சிறந்தவன்.
ஞானியே பலன் ஏதுமின்றி என்னை உபாஸிப்பவன். ஞானிக்கு பலன், உபாயம் எல்லாம் நான்தான். என்னிடம் மட்டுமே அவன் ப்ரீத்திகொண்டவன். ஆயினும் அவன் என்னிடம் பக்தி கொண்டு அன்பு செலுத்திய பின்பே நான் அவனை நேசிக்கிறேன். என்னையே அவன் பெற விரும்புவதனால், என்னையே நான் அவனுக்கு கொடுக்கிறேன்.
அர்சுனன்: கண்ணா! உன்னை வணங்குவோருக்கு உன்னையே கொடுக்கிறேன் என்கிறாய், அவ்வாறாயின் பிற தேவதைகளை வணங்குவோரின் நிலை எப்படி?
பகவான்: பிறவிகள் பல கடந்தும் 'வாசுதேவம் ஸர்வம்' என்று அறிந்தவன் என்னை அடைகிறான். அத்தகைய மஹாத்மா மிகவும் அறிது.
பெறும்பாலோர் ஆசையால் அறிவிழந்து அவர்களுடைய பூர்வ கர்மத்தின் ஸ்வபாவத்தால் தூண்டப்பட்டு வேறு தேவதைகளை சரணடைகிறார்கள்.
எவனெவன் எந்தெந்த தேவதையை பூஜிக்க விரும்புகிறானோ, அந்த பக்தனுக்கு அந்த தேவதையிடமே புத்தியை ஸ்ரமாக இருக்கச் செய்கிறேன். 
எதை எந்த தேவதையிடம் ஸ்ரத்தையுடன் வேண்டினாலும் அது என்னால் தீர்மானிக்கும் அளவே அவனுக்குக் கிடைக்கச் செய்கிறேன்.
அர்சுனன்: மற்றற தேவதைகளை வணங்குவது உன்னை வணங்குவது போல் ஆகுமா?
பகவான்: தேவதைக் கொடுக்கும் பலன் அழிவுள்ளது, என்னைத் துதிப்பது அழிவற்றது. நான் இணையற்றவன், அழிவற்றவன், பிறப்பற்றவன், இறப்பற்றவன், மனதிற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட மேலான என்னை மனிதனைப்போல் நினைப்பவன் மதியீனன். நான் யோகமாயையில் மறைந்துள்ளேன். என்னைப் பிறப்பு இறப்பு உள்ளவனாக நினைக்கும் மனிதன் மூடனே. பல வருடங்களுக்கு முன் இறந்துபோன் ஸாந்திபனியுன் புத்திரனை கொண்டுவந்தேனல்லவா! கார்யவைகுண்டத்திலிருந்து வைதீக புத்ரர்களை அழைத்துவந்தேனல்லவா! கரியாக இருந்த பரிக்ஷித்தை குமாரனாக ஆக்கினேனல்லவா! இதெல்லாம் சாதாரண மனிதன் செய்யக்கூடிய செயலா!
அர்சுனன்: தேவதேவா! நீ இணையற்றவன், அழிவற்றவன் என்றால், உன்னை எல்ரோரும் ஆஸ்ரயிக்காமல் சிலரே த்யானித்து வணங்கு கின்றனர். இதன் மர்மமென்ன?
பகவான்: காலங்கள் மூன்றும் நான் அறிவேன். பக்தி இல்லாதவன் என்னை அறியமாட்டான். மேலும் இரட்டைகள் வடிவான -சுகம்துக்கம், விருப்புவெறுப்பு, மகிழ்ச்சிதுயரம், லாபநஷ்டம்-போன்ற மயக்கத்தினால் மனிதன் அறியாமையை அடைகிறான். இவ்வாறான இரட்டைகள் வடிவானவற்றை விலக்கி பலன் கருதாமல் சிறந்ததைச் செய்பவன் என்னை வழிபடுவான்.
அர்சுனன்: கிருஷ்ணா! முக்தி மார்கத்திற்கான வழிதான் என்ன?
பகவான்: மூப்பு மரணத்திலிருந்து விடுபட என்னைச் சரணடைந்து என்னையே துதித்தால் ப்ரம்மம் கர்மம் அறிந்து மோக்ஷ்சோயுபாயத்திற்கான மார்க்கம் கிடைக்கப்பெறுவான். மேலும் அதிபூதம், அதிதைவம், அதியக்ஞம் என்று என்னை யார் அறிகிறாாகளோ அவர்கள் என்னிடத்தில் மனதை வைத்து மரணத்தருவாயில் நினைத்தாலும் அவர்கள் தியானத்துடன் கூடிய மனதையுடையவர்களாகிறார்கள். த்தை
ஸ்லோகம் : 1
மய்யாஸக்தமநா: பார்த2, யோக3ம் யுஞ்ஜந்மத3ாஸ்ரயா:/ 
அஸம்ஸயம் ஸமக்3ரம் மாம் யத2ா ஜ்ஞாஸ்யஸி தச்ஸ்2ருணு// 
ஸ்லோகத்தின் உட்கருத்து : "ஆழ்ந்த மனதுடன் என்னையே கதியென்று ஐயமின்றி முழுமையாக நீ அறிவாயோ, அவ்வாறே சொல்வேன். கேள் பார்த்தா!"
ஸ்லோகம் :2
ஜ்யாநம் தேsஹம் ஸவிஜ்ஞாநமித3ம் வக்ஷ்யாம்யஸேஷத:/
யஜ்ஜ்ஞாத்வா தேஹ பூயோs ந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸிஷ்யதே //
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எதை அறிந்தபின் மீதம் அறியவேண்டியதில்லையோ அதை ஞானவிஜ்ஞான தத்துவமாய் உனக்கு சொல்வேன்"
ஸ்லோகம் :3
மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித்3யததி ஸித்3த4யே /
யததாமபி ஸித்த4ாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "ஆயிரம் மனிதர்களில் ஒருவன் என்னை ப்ரார்த்திக்கிறான். அவர்களில் யாரோ ஒருவனே ஞானம் பெறுகிறான். ஞானம் பெற்றவரில் எவனோ ஒருவனே என்னை தத்வரீதியாக அறிகிறான்."
ஸ்லோகம் :4
பூ4மிராபோ sநலோ வாயு: கம் மநோ பு3த்3திரேவ ச/
அஹங்கார இதீயம் மே பி4ந்நா ப்ரக்ருதிரஷ்டத4ா//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "என் வசமாய் உள்ள இந்த ஜடப்ரகிருதிகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் மனம், புத்தி, நெருப்பு ஆகிய மூன்று தத்துவங்களும் சேர்ந்து ஆக எட்டு விதமாக பிரிந்து (என் வசமே) உள்ளது."
ஸ்லோகம் :5
அபரேயமிதஸ்வந்யாம் ப்ரக்ருதிம் வித்3தி4 மே பராம்/
ஜீவபூ4தாம் மஹாப3ாஹோ யயேத3ம் த4ார்யதே ஜக3த்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : " நீண்ட புஜங்களையுடைய அர்சுனா! இந்த அபரா ப்ரகிருதி தாழ்ந்தது, இதைவிட உயர்ந்த எனது பரா ப்ரகிருதியான ஸ்ரீலக்ஷ்மி தேவியால் இந்த ஜகத் முழுவதும் தாங்கப்பட்டுள்ளது என்பதை அறி."
ஸ்லோகம் :6
ஏதத் யோனீனி, பூ4தானி, ஸர்வானீத்யுபத4ாரய/
அஹம் க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ப்ரப4வ: ப்ரளயஸ்தத2ா//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "எல்லா உயிரினங்களும் இந்த ஜட மற்றும் சேதனப்ரக்கிருதியிலிருந்து உண்டானவை என்று தெரிந்து கொள், மேலும் உலகமனைத்தையும் படைப்பவனும் அழிப்பவனும் நானே".
ஸ்லோகம் :7
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித3ஸ்தி த4நஞ்ஜய/
மயி ஸர்வமித3ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக3ணா இவ//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "என்னைவிட உயர்ந்தது இவ்வுலகில் இல்லை. ஒரு நூலிலுள்ள மணிகளைப் போல இவ்வுலகம் என்னிடம் கோர்க்கப்பட்டுள்ளது".
ஸ்லோகம் :8
ரஸோs ஹமப்ஸூ கெளந்தேய ப்ரப4ாஸ்மி ஸஸிஹூர்யயோ /
ப்ரணவ: ஸர்வவேதே3ஷூ ஸப்3த3: கே2 பெளருஷம் ந்ருஷூ //
ஸ்லோகத்தின் உட்கருத்து : "குந்தியின் மைந்தா அர்சுனா! நானே நீர்-சந்திர-சூர்ய-வேத-ஆகாஷ-மனுஷ அகிய அனைத்திலும் அதனதன் தத்துவமாக உள்ளேன்".
ஸ்லோகம் :9 
புண்யோ க3ந்த4: ப்ருதி2வ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விப4ாவஸெள/
ஜீவநம் ஸர்வபூ4தேஷூ தபஸ்சாஸ்மி தபஸ்விஷூ//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "அனைத்தின் ஆதாரமும் நானே, மண் நெருப்பு தபஸ் தத்வமும் நானே".
ஸ்லோகம் :10
பீ3ஜம் மாம் ஸர்வபூ4தாநாம் வித்3தி4 பார்த2 ஸநாதநம்/
பு3த்3தி4ர்பு3த்3தி4மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "குந்தி புத்திரனே! யாவற்றிக்கும் வித்தாகவும், அறிவாளிகளின் அறிவாகவும், பலசாலிகளின் பலமாகவும் நானே இருக்கிறேன்".
ஸ்லோகம் :11
ப3லம் ப3லவதாம் சாஹம் காமராக3விவர்ஜிதம்/
த4ர்மாவிருத்3தே4ா பூ4தேஷூ காமோ sஸ்மி ப4ரதர்ஷப4//
ஸ்லோகத்தின் உட்கருத்து : பரதவம்சத்தில் தலைசிறந்தவனே அர்சுனா! நான் பலசாலிகளிடம் ஆசையும் பற்றும் இல்லாத பலமாகவும் (வலிமை) ஜீவன்களிடம் தர்ம ஸாஸ்திர ஸம்பிரதாயத்திற்குட்பட்ட காமத்தில் காமனாகவும் இருக்கிறேன்".
ஸ்லோகம் :12
யே சைவ ஸாத்த்விகா ப4ாவா ராஜஸாஸ்தாமஸாஸ்ச யே/
மத்த ஏவேதி தாந்வித்3தி4 ந த்வஹம் தேஷூ தே மயி//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "முக்குண உணர்வுகள் நானே ஆயினும் அவற்றில் நானும் அவை என்னிடமும் இல்லை".
ஸ்லோகம் : 13 
த்ரிபி4ர்கு3ணமயைர்ப4ாவைரேபி4: ஸர்வமித3ம் ஜக3த்/
மோஹிதம் நாபி4ஜாநாதி மாமேப்4ய: பரமவ்யயம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "ஸாத்வீக, ராஜஸ, தாமஸ குணத்தால் மயங்கும் ஜீவன்கள், என்னை மேலானவன், அழிவற்றவன் என்று அறிவதில்லை".
ஸ்லோகம் :14
தை3வீ ஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா/
மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "என்னையே எப்போதும் புகலாகக் கொண்டால் உலகில் மாயையை எளிதில் கடக்கலாம்
ஸ்லோகம் :15
ந மாம் து3ஷ்க்ருதிநோ மூட4ா: ப்ரபத்3யந்தே நராத4மா:/ 
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸூரம் ப4ாவமாஸ்ரிதா://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "அறிவிழந்தவன்(மூடன்) அசுரத்தன்மைக் கொண்டவன், மனிதரில் தாழ்ந்தவன், மாயையில் உழல்பவன் என்னைத் துதிக்கமாட்டான்
ஸ்லோகம் :16
சதுர்வித4ா ப4ஜசந்தே மாம் ஜநா: ஸூக்ருதிநோ அர்சுந/
ஆர்தோ ஜிஜ்ஞாஸூரர்த2ார்தீ2 ஜ்ஞாநீ ச ப4ரதர்ஷப4//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பரத வம்ஸத்தில் சிறந்தவனே அர்சுனா நால்வகை நல்ல ஜனங்கள் என்னை சேவிக்கின்றனர் அவர்கள் 1. துன்பத்தில் அகப்பட்டவன் 2. செல்வம் வேண்டுபவன் 3. பகவானை அறியவிரும்புபவன் 4. பூர்ண ஞானம் பெற்றவர்கள் ஆவார்கள்.
ஸ்லோகம் :17
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப4க்திர்விஸிஷ்யதே/
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோஅத்யர்த2மஹம் ஸ ச மம ப்ரிய://
ஸ்லோகத்தின் உட்கருத்து : "பக்தனில் ஞானி சிறந்தவன், நான் அவனுக்கும் அவன் எனக்கும் பிரியமானவன் இனியவன்.
ஸ்லோகம் :18
உத3ார: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்/
ஆஸ்தி2த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம்//
ஸ்லோகத்தின் உட்கருத்து : "நால்வகை பக்தரும் சிறந்தவரேயாயினும் என் ஸ்வரூபமான ஞானியே மிகவும் உயர்ந்தவன்.

(இதன் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில்....... இது இந்த ஆண்டின் சிறப்பு மலர் )

No comments:

Post a Comment