Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, March 26, 2011

சாரல் 05 துளி 01 தேதி 27.03.2011


'குருஅருளில்லையேல் இறையருளில்லை'
அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே/
தேஷாம் நித்யாபி4யுக்தாநாம் யோக3க்ஷேமம் வஹாம்யஹம்//
            ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சார்யர் இப்பூவுலகில் அவதரித்து, வேதம், வேதாந்தம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமஹாபாரதம் போன்றவற்றில் புதைந்து கிடந்த பகவானின் ஸந்நிதானத்தின் உண்மையான தத்துவத்தை உலகினுக்கு எடுத்துரைத்து, அதன் மூலம் ஹரி ஸர்வோத்தம தத்துவத்தை உபதேஸித்தார்கள். அதைத் தொடர்ந்து ஸ்ரீமதாச்சார்யரின் சீடர்களாக ஸ்ரீடீகாச்சார்யர், ஸ்ரீவ்யாஸராஜர், ஸ்ரீபாவபோதகர், ஸ்ரீபரிமளாச்சார்யர் போன்ற மஹான்கள் ஸ்ரீமதாச்சாரியரின் போதனைகளை ஆமோதித்து அனேக க்ரந்தங்களின் மூலம் நமக்கு போதனைகள் செய்திருக்கிறார்கள். அவர்களின் வழிவந்தவர்களில், தம் இளம் வயதிலேயே ஸ்ரீஹரியின் சிந்தனையாளராய், ஸம்சாரத்தைத் துறந்து, பிரம்மச்சாரியாகவே இருந்து, ஸந்யாசத்தை ஏற்று, ஸ்ரீமூலராமரின் ஸேவைக்காகவே தம் வாழ்வினை அர்ப்பணித்து, ஸ்ரீஉத்ராதிமடத்தின் தற்போதைய பீடாதிபத்யத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற, கண்களால் காணும் ப்ரத்யக்ஷ்குருவான ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாதங்களை பக்தியுடன் நமஸ்கரித்து, பக்தி முரசுவின் இந்த ஐந்தாமாண்டின் முதல் துளியை ஸ்ரீகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கிறேன். இத்தொடரின்போது (கீதையின் சாரலில்) எனக்கு ஏற்படுகின்ற ஸம்சயங்களை அவ்வப்போது நீக்கி, உண்மையான தத்துவத்தை மட்டுமே எடுத்துச் சொல்ல எனக்கு சக்தியையும், யோக்யதையும் கொடுத்தருள வேண்டுமாய் மானசீகமாகவும், ஆத்மார்த்தமாகவும், உள்ளன்போடும், பக்தியோடும் ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாதங்களை வணங்கி ப்ரார்த்தனை செய்துகொள்கிறேன். அத்துடன் இந்த இதழ்களை பக்தியோடும் ஸ்ரத்தையோடும் படித்துவரும் வாசக பக்தர்களுக்கு திடபக்தியும், ஞானத்துடன் கூடியதான வைராக்யமும், ஐஸ்வர்யமும் அருளிச் செய்ய வேண்டுமாய் ஸ்ரீகளை வேண்டுகிறேன். யோகச்க்ஷேமத்தை அடைய அருள்புரிய வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன். கீழ்வரும் த்யானப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.

ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே- உன்
பாத கமலங்களை நம்பி - நீயே
கதியென சரண்புகுந்தேன் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

கண்முன்தோன்றா ஹரியை - என் 
மனதில் தோன்றச் செய்திடுவாய்
என்மீ திருக்கும் மாயை - உன்
கையில் பறித்துச் சென்றிடுவாய் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

நேரில் தோன்றும் குருவே - நீ
ராம தூதனென நம்பிடுவேன்
தேரில் உன்னை அமர்த்தி - உன்
பெருமை யாவும் சொல்லிடுவேன் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

உன் நாமம் ஒன்றே போதும் - என்
தேவை யாவும் தீரும்
உன் பக்தி ஒன்றே வேண்டும் - என் 
சித்தம் என்றும் மகிழும் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)

சீதாராமர் உன் தெய்வம் - ஸத்ய
ப்ரமோத தீர்த்தரும் உன் குருவே
ஆதிமைந்தன் பாடுகிறேன் - உன்
கருணைக்காக ஏங்குகிறேன் (ஸ்ரீஸத்யாத்ம தீர்த்த குருவே)
(இப்பாடலை பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும் பாடுவோருக்கு ஞானவைராக்யம், திடபக்தி சித்திக்கும், ஐஷ்வர்யம் மேன்மைபெறும்)

ஹரி ஓம் - (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம:)
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூ4த ப4வ்ய ப4வத்ப்ரபு4:
பூ4தக்ருத்3 பூ4தப்4ருத்3 ப4ாவோ பூ4தாத்மா பூ4தப4ாவன: 1.
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதி:
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ sக்ஷர ஏவ ச 2.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே//

No comments:

Post a Comment