Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Saturday, March 12, 2011

சாரல் : 4 துளி : 50 நாள்: 13.03.11

கீதையின் சாரலில் , , , , , விபூதியோகம் (10வது அத்யாயம்)

ஆயுதா4நாமஹம் வஜ்ரம் தே4நூநாமஸ்மி காமது4க்/
ப்ரஜநஸ்சாஸ்மி கந்த3ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸூகி:// (அத்.10 ஸ்லோ.28)

கீதாசார்யர் ஸ்ரீகிருஷ்ணர் மிகவும் ஸ்ரேக்ஷ்டமானப் பொருள்களில் தன் விபூதிரூபத்தின் தத்துவம் இருப்பதை மேலும் விவரிக்கிறார். ஆயுதங்களில் சிறந்ததான வஜ்ராயுதம், பசுக்களில் சிறப்பானதான காமதேனு, தர்மஸாஸ்த்திரத்திற்கு உட்பட்டதான காமத்தில் காமதேவனாக, ஸர்பங்களுள் வாசுகியாக இருப்பதாகக் கூறுகிறார்.
வஜ்ராயுதம்: இது இந்திர தேவனுடைய ஆயுதம். ததீசி முனிவர் தபோவலிமை மிக்கவர். அவர் தேவர்களிடம் அன்புகொண்டு தன் சரீரத்தையே தியாகம் செய்து தன் முதுகெலும்பில் வஜ்ராயுதத்தை உண்டாக்கி இந்திரனிடம் கொடுத்தார். ஆயுதங்களில் சிறந்தது வஜ்ராயுதம்.
காமதேனூ: இது பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியது. மிகவும் தெய்வீக அம்ஸம் பெற்றது. பசு இனத்திற்கே சிறப்பிைன்க் கொடுப்பது. தேவர்களும் மனிதர்களும் தாம் வேண்டிய பொருளை கொடுக்கும் சக்திபெற்றது. பசுக்களில் சிறந்தது காமதேனு.
காமதேவன்: மன்மதன் என்று அழைப்பர். கந்தர்பன் என்றும் கூறுவர். இவர் இனஉற்பத்திக்கு உகந்ததான காதல் கடவுள். "தர்மாவிருத்3தோ4 பூ4தேஷூ காமோ sஸ்மி " என்பதாக VII-11ல் கூறுவதைப் பார்க்கிறோம். சிறந்த ஜனன வ்ருத்திக்காக மனிதன் ஏற்கும் காமம் கிருஹஸ்தர்ஸிரமத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வாஸூகி : இது ஒரு தலைப் பாம்புகளுக்குத் தலைவன். அமுதம் கடைந்தபோது இது கயிறாகப் பயன்படுத்தப்பட்டது. இது ஸர்பங்களில் சிறந்தது எனப்பட்டது.
ஸ்லோகத்தின் உட்கருத்து: ஆயுதங்களில் உகந்ததான வஜ்ராயுதத்திற்கு நியாமகனாய், தோஷமற்றவனாய், "வஜ்ர' என்னும் பெயருடையவனாய் வஜ்ராயுதத்தில் இருக்கிறேன். பசுக்களில் காமதேனுவிற்கு நியாமகனாய் கேட்கும் பொருள்களைக் கொடுப்பதனால் "காமது4க்" என்ற பெயருடன் காமதேனுவில் இருக்கிறேன். ஸாஸ்த்திர விதிமுறைகளுக்குட்பட்ட ஸ்ருட்டிக்கு காரணனான மன்மதனுக்கு நியாமகனாய், பல்வேறு சுகங்களை அனுபவித்துக்கொண்டு "கந்தர்ப:' என்னும் பெயருடையவனாய் மன்மனனுள் இருக்கிறேன். ஸர்பங்களில் ஒரு தலையினையுடைய வாசுகி என்னும் ஸர்பத்திற்கு முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, தன் லோகத்தில் வசிப்போருக்கு சுகத்தைக் கொடுப்பவனாதலால் வாஸூகி என்னும் பெயருடன் வாஸூகியில் நான் இருக்கிறேன்.-பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி : குருக்ஷேத்ர போரில் கீதையின் உதயம் : ( சென்ற இதழின் தொடர்ச்சி) ( சென்ற இதழின் தொடர்ச்சி) 
"எதனால் இந்தச் சோர்வு" அர்சுனனுக்கு உண்டான இந்த நடுக்கம் பாசத்தால் உண்டானது. இளகிய கருணையால் உண்டானது. தன் உற்றார் உறவினர்கள் அனைவரும் இப்போரில் மரணம் எய்துவார்களே என்ற துக்கத்தால் உண்டானது. இப்போரின் மாபெரும் இழப்பைக் கருதி உண்டானது. (இப்போரின் இறுதியில் பத்து வீரர்கள் மட்டுமே பிழைத்திருந்தார்கள் என்று கூறப்படுகிறது) மாவீரன் அர்சுனனுக்கு ஏற்பட்ட இந்த நடுக்கமும் சோகமும், பயத்தால் உண்டானது இல்லை. அர்சுனனின் வீரம் பிரசித்தி பெற்றது.
கீதையின் உதயம் : இவ்வாறு போர்களத்தில் பாசத்தால் தளர்ச்சியடைந்து "போர்புரியமாட்டேன்" என்று அமர்ந்துவிட்ட அர்சுனனை, சாரதியாக இருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கடமையைச் செய்யுமாறு உபதேசம் செய்கிறார். அதன் சாராம்சமே ஸ்ரீமத் பகவத்கீதை. இங்க கீதை உதயமாகிறது. தீயசக்திகளுக்குச் தடுப்புச் சுவர் இது. பக்திமானுக்கு வற்றாத நீரோடை இது. "தவம், பக்தி இல்லாதோருக்கும் கேட்க விருப்பம் இல்லாதோருக்கம் என்னிடம் குறைகாண்போருக்கும் இந்த கீதா உபதேசத்தை உரைக்காதே" (18-67) என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார், கீதையில் பகவான் கூறும் உட்கருத்துக்களை பகவான் மட்டுமே அறியக்கூடியவர், மேலும் ஸ்ரீகிருஷ்ணர் 18-70ல் கூறும்போது, "கீதையை ஊன்றிப்படித்தாலே போதும், என்னை ஞானத்துடன் வழிபட்டவனாகிறான்" என்பதாக கூறுகிறார். (இப்பதிப்பு சென்ற வருடம் மூன்றாமாண்டு சிறப்பு மலரில் வெளிவந்ததின் மறுபதிப்பு)
மத்வமதகொள்கைகளை விளக்கி ஸ்ரீவ்யாஸராஜர் அருளிய இருவரி ஸ்லோகம் : 
ஸ்ரீமந் மத்வமதே ஹரிப் பரதர்: சத்யம் ஜகத் தத்வதோ பேதோ ஜீவகணா ஹரேரனுசரா நீசோச்ச பா3வம் க3தா:/
முக்திர் நைஜஸூகானுபூதி அமல: பக்திஸ்ச தத்ஸாதனம் ஹ்யக்ஷாதித்ரிதயம் பிரமாணமகிலாம் நாயை வேத்யோ ஹரி://
இதன் பொருள் :
1. ஹரியே உயர்ந்தவன் 2. உலகம் உண்மை. 3. வேதங்கள் உண்மை. 4. ஜீவர்கள் ஸ்ரீஹரிக்கு கட்டுப்பட்டவர்கள். 5. ஜீவர்களுள் தாரதம்யம் உண்டு. 6. தன் ஜீவஸ்ரூபத்தின் ஆனந்தத்தை அனுபவிப்பதே முக்தி எனப்படும். 7. நிர்மலமான பக்தியே முக்திக்கு வழி. 8. ப்ரத்யக்ஷம், அனுமானம், ஆகமம் இவற்றின் மூலம்தான் ஞானம் பெற் முடியும். 9. வேதங்களின் மூலமாகத்தான் ஸ்ரீஹரி அறியக்கூடியவர்.

தகவல் முரசு : (அடுத்த இதழுடன் நான்காமாண்டு இனிதே முடிபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த இதழ் நான்காமாண்டு சிறப்பிதழாக 16 பக்கங்களில் வெளிவர உள்ளது. கீதையின் 7ம் அத்யாயச் சுருக்கம் மற்றும் ஸ்லோகங்களுடன் அதன் உட்கருத்துக்களும் பிரசுரக்கிப்பட்டுள்ளதுடன், ஜிதந்தே ஸ்தோத்ரம் (தமிழாக்கம் by வாயுமித்ரன்) விளக்கமும் இடம்பெற்றுள்ளது. வாசக பக்தர்கள் தொடர்ந்து ஆதரவு நல்கி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ப்ரீத்திக்கு பாத்திரராகுமாறு வேண்டுகிறோம். அத்துடன் இந்த ஆண்டு ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2011 வரையிலான ஆண்டுச் சந்தா ரூ 50/- என உயர்த்தப்பட்டுள்ளது. வாசக பக்தர்கள் பொருத்தருளுமாறு வேண்டுகிறோம்.

தேவம் நாராயணம் நத்வா, ஸர்வதோஷ விவர்ஜிதம் /
பரிபூர்ணம் குரூம்ஸ்சான் கீ தார்த்தம் வக்ஷ்யாமி லேஸத//
ஸமஸ்த குண ஸம்பூர்ணம் ஸர்வதோஷ விவர்ஜிதம் /

 நாராயணம் நமஸ்க்ருத்ய கீதா தாத்பர்ய முச்யதே//
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே /

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே // 

No comments:

Post a Comment