Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, August 12, 2011

சாரல் 05 துளி 15 ​தேதி 03.07.11

பக்தி முரசு                                  
(ஒரு பக்க வாராந்திர இதழ்)
கீ​தையின் சாரலில் விபூதி​யோகம் 10வது அத்யாயம்

ச்சாபி ஸர்வப4தாநாம் பீ3ஜம் தத3ஹமர்ஜீந                                                               ந தத3ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ4தம் சராசரம் (அத்10.  ஸ்​லோ 39)

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் விபூதி​யோகத்​தை சுருக்கமாக இங்​கே முடிக்கிறார்.  சகல பிராணிகளுக்கு வித்து பகவா​னே.  ப​டைப்பது, அழிப்பது மற்றும் காப்பது யாவும் பகவா​னே.  அத்யாயம் 7.10 ல் “பீஜம்மாம் ஸர்வபூதானாம்”  என்று ​சொல்லியிருக்கிறார்.  அது​போல​வே அத்9-18ல் “நிதானம் பீஜமவ்யயம் என்று “அழியாத வித்து”   பகவா​னே என்று குறிப்பிடுகிறார்.  இங்கு இச் ஸ்​லோகத்தில் ​சொல்லும் ​போது எல்லா பிராணிகளின் உற்பத்திக்கு “வி​தைபகவா​னே என்று குறிப்பிடுகிறார்.        
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இல்லாத இடம் ஏது!  எங்கும் எப்​பொருளிலும் நி​றைந்திருப்பவர் பகவா​னே.  பகவானின் இச்​சையில்லாமல் எப்​பொருளும் இயங்க முடியாது.  இப்பிரபஞ்சத்தில் ​தோன்றும் எல்லாப் ​பொருள்களும் பகவானின் கட்டுப்பாட்டில் இயங்கிக்​கொண்டிருக்கின்றன.  பகவானின் ப​டைப்பில் ஒரு குழுமத்தில் எப்​பொருள் ​மேன்​மை ​பெற்றிருக்கிற​தோ, சிறப்பு ​பெற்றதாக இருக்கிற​தோ அப்​பொருள் பகவானின் ​தேஜஸின் சக்தி​பெற்றதாக ​தெரிந்து​கொள்ள ​வேண்டும்.  யாவற்​றையும் சுருக்கமாகவும் யதார்த்தமாகவும் ​சொல்லும்​போது பகவான் இப்பிரபஞ்சத்தில் எங்​கெங்கும் நி​றைந்திருக்கிறார் என்பது உண்​மையாகிறது அல்லவா!
ஸ்​லோகத்தின் உட்கருத்து “ மற்றும் அர்சுனா!  எல்லா பிராணிகளுக்கு எது காரண​மோ,  அக்காரணத்தின் நியாமகனாய் அக்காரணத்திலிருப்பவன் நா​னே,  யாவற்றிற்கும் காரணமும் காரண கர்த்தாவுமான என்​னைவிட்டு எந்த வஸ்து உண்​டோ அந்த வஸ்த்து இல்​லை.  நான் இப்பிரபஞ்சத்தில் எங்கும்நி​றைந்திருகி​றேன் –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                                           
 இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கை வரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 11) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)   இவ்வாறான மஹி​மைக​ளைச் ​செய்துகாட்டி, தனது தீர்த்த யாத்தி​ரை​யைத் ​தொடர்ந்தார்.  ​கேரளத்திற்​கே அழ​கையும், ​பொலி​வையும் ​கொடுக்கக் கூடிய புனித நதியான பயஸ்வினி ஆற்றில் நீராடி, தன் லீ​லைகளால் இங்கு ஸ்ரீசண்டி​கை ​தேவி அவதரிக்கப் ​போகிறாள் என்று கூறி, ​மேலும் ​தெற்கு ​நோக்கிச் ​சென்று திருவந்திபுரம் என்ற அனந்தபுரம் என்னும் வானில் சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயண ஸ்வரூபியாக இருக்கும் அனந்தபத்மநாப ஸ்வாமி​யை தரிசித்தார்.  பின்பு, பண்டிதர்கள் நி​ரைந்த ச​பையில், ஜீவ   பரமாத்ம ​பேதத்தின் தத்துவத்​தை விளக்கி ஐக்கியம் ​பொருந்தாத நி​லை​யை எடுத்துக்கூறினார்.  குதபஸ்தூர் என்ற கிராமத்தல் ஒரு அந்தணர் ஸ்ரீமதாச்சார்யர் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் (​பொருள்) ​செய்யாததால் ​பொருள் கூற தகுதியற்றவர் என்றும், அவர் கூறும் வியாக்யானங்க​ளை ஏற்க​வேண்டாம் என்றும் கூறினார்.  அதற்கு ஆசார்ய​ரோ “யாமும் பாஷ்யம் ​செய்யும் அபிப்ராயத்தில் தான் இருக்கி​றோம் என்று  வி​டையளித்தார். அந்த அந்தண​ரோ “தண்டத்​தைமுறித்துவிடு​வேன் என்று கூறினார் ஆசார்யர் தன் தண்டத்​தைகாட்டி, கண்ட்​யேத த3ண்​டோ யதி  சண்டனத்வயா/ த்வம்  ஷண்ட​கோ(அ)பண்டித வந்த்ய வாகி3தி//(5-43) அதாவது “நீ இந்த தண்டத்​தை முறிக்காவிட்டால் நீ ஒரு ஷண்டன், சன்யாசி இல்​லை, பண்டிதனுமில்​லை, ஒரு ​பொய்யனும் அலியுமாவாய் என்று கூறினார்.   இ​தைக் ​கேட்ட அந்த அந்தணர் ஆத்திரம​டைந்து அங்கிருந்​தோ​ரைத் து​ணைக்கு அ​ழைத்தார்.  அங்கிருந்​தோர்கள் ஆசார்யரின் அறிவுத் திற​மை, வசீகரமான முகலக்ஷணம் முதலியவற்​றைக் கண்டு மஹா பண்டிதரான ஆச்சார்ய​ரை எவ்வாறு து​வேஷிப்பது என்​றெண்ணி அந்த அந்தண​ரைச் சாடினர்.                        
இ​தைத் ​தொடர்ந்து, ஆச்சார்யர் பல தீர்த்தங்களில் நீராடி, கன்யாகுமாரி மற்றும் இரா​மேஸ்வரம் அங்குள்ள தீர்த்தங்களிலும் நீராடி, இரா​மேஸ்வரத்தில் விஷ்ணுவின் அந்தர்யாமியாக இருக்கும் இராமநாத ஸ்வாமி​யை நமஸ்கரித்து தன் குருவுடன் சாதுர்மாஸ்ய விரதத்​தை ​மேற்​கொண்டார்.  பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்து ஸ்ரீரங்கநாத ஸ்வாமி​யை பக்தியுடன் ​ஸேவித்தார்.
ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண ​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:

                              ù¡…¡Â Å¢‰ÏåÀ¡Â ù¡…åÀ¡Â Å¢‰½§Å/
                              ¿§Á¡ ¨Å ô3ËÁ¿¢¾4§Â Å¡…¢‰¼2¡Â ¿§Á¡ ¿Á://
                             «Å¢¸¡Ã¡Â …¥ò3¾¡4 ¿¢ò¡ ÀÃÁ¡òÁ§¿/
                              …¨¾3¸åÀ¡Â Å¢‰½§Å …÷Ń¢‰½§Å//
§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//
               
 ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/

No comments:

Post a Comment