Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, August 12, 2011

சாரல் 05 துளி 20 ​தேதி 07.08.11

பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) 
  

பகவானின் அவதார ரூபங்கள் 
       
யத்கீர்த்தனம் யச்ச்ரவணம் யதீக்ஷணம் யத்வந்தனம் யத்ஸ்மரணம் யதர்ஹணம்/                                     
லோகஸ்ய ஸத்​யோ விது​னோதிகல்மஷம்தஸ்​மைஸூபத்ரஸ்ரவ​ஸேந​மோநம://                                                 
  
                                                         
  பகவான் ஸ்ரீ​வேதவ்யாஸர் ​வேதங்க​ளைப் பாகுபாடு ​செய்து நான்காகப் பிரித்தார்.  பிறகு பிரம்ம, பத்ம, ​வைஷ்ணவ, ​ஸைவ, லிங்க, கருட, நாரத, ஆஜ்​னேய, ஸ்காந்த, பலிஷ்ய, பிரம்ம ​வைணவர்த்த, மார்க​டேய, வாமன, வராஹ, மத்ஸ்ய, கூர்ம மற்றும் ப்ரம்மாண்டம் என்னும் 17  புராணங்க​ளை ப​டைத்தார். ஸ்ரீ​வேதவ்யாஸரின் மனம் திருப்த்திய​டையவில்​லை.ஒரு நாள் ஸ்ரீ​வேதவ்யாஸர் சரஸ்வதி நதிக்க​ரையில் அமர்ந்து​கொண்டு, தான் ஏ​தோ ஒன்​றை ஸஜ்ஜனர்களுக்கு ​கொடுக்காமல் இருப்பதாக சிந்தித்தார்.  அவ்வ​மையம் ஸ்ரீநாரத முனி அவ்விடத்தில் ​தோன்றி, “ஸ்ரீமத் பாகவத  புராணத்​தை இயற்ற​வேண்டும் என்று ​வேண்டுகிறார்.பக்தரின்ப்ரார்த்த​னை​யைஏற்று,ஸ்ரீமந்நாராயணனின் அவதாரலீ​லைக​ளை வர்ணித்து“ஸ்ரீமத்பாகவதம்  என்னும்நூ​லைஇயற்றினார்.  இந்த சது ஸ்​லோகீ பாகவதத்​தை மூலரூபி பகவான் ஸ்ரீமந் நாராயணனர் ஸ்ரீப்ரம்மனுக்கு உப​தேஸித்தார்.  ஸ்ரீபிரம்மா இ​தை தனது மகனான நாரதருக்கு உப​தேஸம் ​செய்தார்.  நாரதர் அ​தே பாகவதத்​தை ஸ்ரீ​வேதவ்யாஸரிடம் சமர்ப்பித்தார்.  ஸ்ரீ​வேதவ்யாஸர் இந்த பாகவதத்​தை 18,000 ஸ்​லோகங்கள் ரச​னை​செய்து தனது மகனான ஸ்ரீஸூகாச்சார்யருக்கு உப​தேஸித்தார்.
         ஸ்ரீஸூகாச்சார்யர் இந்த 18,000 க்ரந்தங்க​ளை ஏழு நாட்களில் இரவும் பகலும் இ​டைவிடாமல் பரீக்ஷித் மஹாராஜனுக்கு உப​தேஸம் ​செய்தார்.  அ​தை அ​னேக ​தேவ​தைகளும், ரிஷிகளும் உன்னிப்பாக ​கேட்க கூடினார்கள்.  ஸூகாச்சார்யர் ஸூகரின் அருகி​லே​யே அமர்ந்து மிகவும் ஸ்ரத்​தையாக ஸப்தாக நாட்களில் ​செய்யப்பட்ட உப​தேஸத்​தை ​கேட்டார்.
        பின்பு ​கோமதி நதிக்க​ரையில் ​நைமிஸாரண்ய ​க்ஷேத்ரத்தில் ஸ்ரீமத் பாகவதத்​தை உப​தேஸம் ​செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் இது ஸூதருக்கும் ​ஸெளனகருக்கும் இ​டை​யே நடந்த  உ​ரையாடலின் ​தொகுப்பாக அ​மைகிறது.
        ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்யாயம் மூன்றில் 07 முதல் 25 ஸ்​லோகங்கள் வ​ரை பகவானின் அவதாரங்கள் விவரணம் ​செய்யப்படுகிறது.  பகவானின் ​நேரடி சக்தி ​பெறும் வஸ்த்துக்கள் யாவும் “அவதாரங்கள் என்றும் ம​றைமுகமாக சக்திவாய்ந்த வஸ்த்துக்கள் விபூதிகள் என்றும் ​பொருள்​கொள்ளலாம்.  பகவானு​டைய அம்ஸார்த்தங்களும் இதில் அடங்கும்.
ஸ்ரீமத் பாகவதத்தில் உப​தேஸிக்கப்பட்ட பகவானின் அவதார ரூபங்க​ளை இங்​கே காணலாம்.
1. முதல் முதலாக, ப்ரம்மச்சர்யத்தின் முக்கியத்துவத்​தை பிரகடனம் ​செய்யவும், அ​வைக​ளை ​கையாலும்     மு​றைக​ளை ​தெரிவிக்கவும் ​கெளமார எனப்படும் நான்கு பிரம்மச்சரியர்கள் பிரம்மாவின் புத்திரர்களாக ​தோன்றினார்கள் (01.03.06)
2. இரண்டாவதாக, கடலுக்கு அடியில் ஒளித்து ​வைத்திருந்த பூமா​தேவி​யை மீட்பதற்காக வராஹ அவதாரம் எடுத்தார். (01.03.07) 
3. மூன்றாவதாக, பலன் கருதாத ​செயல்கள் மற்றும் பக்தியின் முக்கியத்துவத்​தை எடுத்து​ரைக்கவும் சத்யா​வேஷ அவதாரமாக ​தேவரிஷி நாரத முனியாக ​தோன்றினார். (01.03.08) 
4.நான்காவதாக, தவத்தின் வலி​மை​யை வலியுருத்த தர்ம ராஜனின் ம​னைவிக்கு நரன், நாராயணன் என்னும் இரட்​டையராக அவதரித்தார். (01.03.09)
5. ஐந்தாவதாக, சாங்கிய (அ) ​பெளதீக தத்துவ விளக்கங்க​ளை ​கொடுப்பதற்காக கபிலராக அவதாரம் எடுத்தார். (01.03.10)
6. ஆறாவதாக, தத்தாதி​ரேயர் என்னும் அவதாரம் எடுத்தார்.  அத்ரி-அனுசுயாவின் புத்ரராக தத்தாதி​ரேயர் என்னும் அவதாரமாகத் ​தோன்றி ஜீவாத்மாவின் தத்துவங்க​ளை அலர்கா, பிரகலாதர், யது, ​ஹைஹயர் முதிலியவர்களுக்கு உப​தேஸித்தார். (01.03.12)
7. ஏழாவது அவதாரமாக யக்ஞர் பிரஜாபதி ரிஷிக்கும் ஆகூதிக்கும் புதல்வராக ​தோன்றி இப்பிரபஞ்சத்​தை நிர்வகித்தார். (01.03.13) 
8. எட்டாவதாக, நாபி மகாராஜனுக்கும் அவரது  ம​னைவியான ​மேரு ​தேவிக்கும் புத்திரனாக ரிஷப மகாராஜா அவதரித்து, புலன்க​ளைக் கட்டுப்படுத்தி ஆனந்தத்​தை அ​டையும் நி​லை​யை உலகினுக்கு எடுத்து​ரைத்தார். (01.03.13) 
9. ஒன்பதாவது அவதாரமாக பிரிது மகாராஜனாக அவதரித்து, நிலங்க​ளை உழுது பூமி​யை வளப்படுத்தி, நல்மு​றையில் வி​ளைவிக்கச் ​செய்து மக்க​ளை நல்வழிப்படுத்தினார் (01.03.14)   இன்னும் ​தொடரும்................
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :

§Åò3§Â¡ ¨Åò3Â: …¾¡3§Â¡¸£3 ţÆ¡ Á¡¾4§Å¡ ÁÐ4:/    «¾£óò3¡¢§Â¡ Á†¡Á¡§Â¡ Á§†¡ò…¡§†¡ Á†¡À3Ä://
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/  



No comments:

Post a Comment